பாரத்-விஸ்தார்: உழவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியிலேயே பயிர் சாகுபடி ஆலோசனைகளை வழங்குகிறது. -ஹரிகிஷன் சர்மா

 ஒன்றிய விவசாயத் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், பிப்ரவரிமாதம்  17-ம் தேதியான இன்று 'பாரத்-விஸ்டார்' (Bharat-VISTAAR) என்ற புதிய செயலியைத் தொடங்கி வைக்கிறார். உழவர்களுக்குத் தேவையான தகவல்களைப் பல மொழிகளில் உடனுக்குடன் வழங்கும் வகையில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்துடன் இந்தத் திட்டம் உருவாக்கப்பட்டுள்ளது. முன்னதாக, ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 2026-27 ஆம் ஆண்டிற்கான ஒன்றிய நிதிநிலை அறிக்கையில் இந்த புதிய செயற்கை நுண்ணறிவு கருவி குறித்த அறிவிப்பை வெளியிட்டிருந்தார்.


பிப்ரவரி மாதம் 1-ஆம் தேதி தனது ஒன்பதாவது தொடர்ச்சியான நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தபோது, நிர்மலா சீத்தாராமன் 'பாரத்-விஸ்தார்' (Bharat-VISTAAR) என்ற பன்மொழி செயற்கை நுண்ணறிவு கருவியைத் தொடங்க உள்ளதாகக் கூறினார். இது அரசு ஏற்கனவே வைத்துள்ள AgriStack இணையதளங்களையும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் (Indian Council of Agricultural Research (ICAR)) சாகுபடி முறைகளையும் ஒன்றிணைத்துச் செயல்படும் என்று கூறப்படுகிறது. உழவர்களின் உற்பத்தித் திறனை அதிகரிப்பது, உழவர்கள் சரியான முடிவுகளை எடுக்க உதவுவது, ஒவ்வொரு உழவர்க்கும் ஏற்ற தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளை வழங்குவதன் மூலம் விவசாயத்தில் ஏற்படும் இழப்புகளைக் குறைப்பது ஆகியன இதன் முக்கிய நோக்கங்களாகக் கூறப்படுகிறது. 


அடுத்த நிதியாண்டிற்காக (2026–27), பாரத்-விஸ்தார் (Bharat-VISTAAR) திட்டத்திற்கு நிதி அமைச்சர் ₹150 கோடி ஒதுக்கியுள்ளார்.


பாரத்-விஸ்தார் என்றால் என்ன?


பாரத்-விஸ்தார் (Bharat-VISTAAR) என்பது ஒரு செயற்கை நுண்ணறிவு (AI) சார்ந்த பன்மொழிக் கருவியாகும். இது இந்திய உழவர்களுக்கு அவர்களின் சொந்த மொழியிலேயே மொபைல் போன்கள் அல்லது சாதாரண அழைப்புகள் மூலம் தகவல்களை வழங்குகிறது. பயிர் திட்டமிடல், சாகுபடி முறைகள், பூச்சிக் கட்டுப்பாடு, வானிலை நிலவரம், சந்தை விலைகள், அரசுத் திட்டங்கள், அதற்கான தகுதி, விண்ணப்பிக்கும் முறை மற்றும் குறைகளைத் தீர்ப்பது போன்றவற்றுக்கு இது உதவுகிறது. உழவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் ஒரே இடத்தில் வழங்கும் டிஜிட்டல் நுழைவாயிலாக இது செயல்படுகிறது.


இது விவசாயத்திற்கான ஒரு டிஜிட்டல் பொதுக் கட்டமைப்பு (Digital Public Infrastructure (DPI)) திட்டமாகும். இது ஒன்றிய அரசு, மாநில அரசுகள் மற்றும் கூட்டுறவு நிறுவனங்களிடமிருந்து பெறப்படும் நம்பகமான தகவல்களை ஒருங்கிணைத்து, செயற்கை நுண்ணறிவு (AI) மூலம் உழவர்களுக்குத் தேவையான தனிப்பயனாக்கப்பட்ட ஆலோசனைகளை வழங்குகிறது.


அது ஏன் தேவைப்பட்டது?


தற்போது, அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்கள் சிதறிக் கிடக்கின்றன. உழவர்கள் தாங்கள் அந்தத் திட்டங்களுக்குத் தகுதியானவர்களா என்பதைத் தெரிந்துகொள்வதிலும், விண்ணப்பிப்பதிலும், பலன்களைக் கண்காணிப்பதிலும் அல்லது தங்கள் புகார்களுக்கு உரிய நேரத்தில் தீர்வு காண்பதிலும் பெரும்பாலும் சிரமப்படுகிறார்கள். வானிலை, சந்தை நிலவரம், காப்பீடு மற்றும் மண் வளம் குறித்த விவரங்களும் ஒரே இடத்தில் கிடைப்பதில்லை. இதன் விளைவாக, இந்தத் தகவல்களைச் சேகரிக்க உழவர்கள் பல அலுவலகங்களுக்கும் இணையதளங்களுக்கும் செல்ல வேண்டியுள்ளது. எனவே, தேவையான அனைத்து விவரங்களையும் ஒரே இடத்தில் வழங்கும் ஒரு அமைப்பு தேவைப்பட்டது.


வேளாண்மை அமைச்சக அதிகாரிகளின் தகவல்படி, "பாரத் விஸ்தார்" (Bharat Vistaar) மூலம் உழவர்கள் இனி பல்வேறு அலுவலகங்களையோ, இணையதளங்களையோ, செயலிகளையோ அல்லது இடைத்தரகர்களையோ சார்ந்து இருக்க வேண்டிய அவசியமில்லை. ஏனெனில், இது உழவர்களுக்குத் தேவையான அனைத்துத் தகவல்களையும் அவர்களின் சொந்த மொழியிலேயே, குறுஞ்செய்தி மற்றும் குரல் வழி உரையாடல் மூலம் வழங்கும் ஒரே இடமாக அமைகிறது.


உழவர்கள் அதை எவ்வாறு அணுகலாம்?


உழவர்கள் 155261 என்ற பிரத்யேக எண்ணிற்கு எந்தவொரு சாதாரண போனிலிருந்தும் அழைத்து, "பாரதி" (Bharati) என்ற செயற்கை நுண்ணறிவு உதவியாளரிடம் பேசுவதன் மூலம் பாரத்-விஸ்தார் சேவையைப் பயன்படுத்தலாம். அவர்கள் கூகுள் ப்ளே ஸ்டோரிலிருந்து (Google Play Store) இதற்கான செயலியைப் பதிவிறக்கம் செய்யலாம் அல்லது செயலி போலவே செயல்படும் இணையதளத்தையும் பயன்படுத்தலாம். இந்த செயலியின் இணைப்பானது விவசாய அமைச்சகத்தின் இணையதளங்களிலும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் (Pradhan Mantri Kisan Samman Nidhi (PM-KISAN)) மற்றும் பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (Pradhan Mantri Fasal Bima Yojana (PMFBY) போன்ற செயலிகளிலும் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அழைப்பது மட்டுமின்றி, உழவர்கள் இந்த உதவியாளருடன் சாட் (Chat) மூலமாகவும் உரையாட முடியும் என்றும் கூறப்படுகிறது. 




என்னென்ன தகவல்கள் கிடைக்கும்?


அதிகாரிகளின் கூற்றுப்படி, உழவர்கள் தொடக்கத்தில் 10 முக்கிய ஒன்றிய அரசுத் திட்டங்கள் குறித்த தகவல்களைப் பெறலாம். அவை, PM-KISAN: பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி (உழவர்கள் உதவித்தொகை திட்டம்), பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PM Fasal Bima Yojana), மண் வள அட்டை (Soil Health Card), மாற்றியமைக்கப்பட்ட வட்டி மானியத் திட்டம் (Modified Interest Subvention Scheme), வேளாண் இயந்திரமயமாக்கல் துணைத் திட்டம் (Sub-Mission on Agricultural Mechanization, சொட்டு நீர் பாசனத் திட்டம் (Per Drop More Crop), PM Krishi Sinchayee Yojana: பிரதம மந்திரி விவசாய நீர்ப்பாசனத் திட்டம், PM Annadata Aay Sanrakshan Abhiyan: பிரதம மந்திரி அன்னதாதா வருமான பாதுகாப்புத் திட்டம் (PM-AASHA), வேளாண் உள்கட்டமைப்பு நிதி (Agriculture Infrastructure Fund, உழவர்களுக்கான கடன் அட்டை (Kisan Credit Card) ஆகியனவாகும்.


உழவர்கள் தங்களின் பயன் நிலையை சரிபார்க்கவும், பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதி திட்டம் (PM-KISAN) தொடர்பான புகார்களைப் பதிவு செய்து அவற்றைக் கண்காணிக்கவும் முடியும். மேலும், இந்திய வேளாண் ஆராய்ச்சிக் குழுவின் (ICAR) நிறுவனத்தின் அறிவியல் ஆராய்ச்சி அடிப்படையில் பயிர்கள் மற்றும் கால்நடைகளுக்கான ஆலோசனைகளையும் அவர்கள் பெறலாம். உழவர்கள் பூச்சி மற்றும் நோய் தாக்குதல் குறித்த எச்சரிக்கைகள், உடனுக்குடனான வானிலை தகவல்கள், மண்டிகால சந்தை விலைகள் மற்றும் வானிலைக்கு ஏற்ற விவசாய ஆலோசனைகளையும் பெற்றுக்கொள்ளலாம்.


ஒன்றிய அரசின் அனைத்துத் திட்டங்களும் மே மாதம் 2026-ஆம் ஆண்டுக்குள் ஒருங்கிணைக்கப்படும் என்று அதிகாரி தெரிவித்துள்ளார். இதன் மூலம், உழவர்கள் தங்களின் தகுதியைச் சரிபார்க்கவும், விண்ணப்பிக்கவும், பயன்களைக் கண்காணிக்கவும் மற்றும் புகார்களைத் தெரிவிக்கவும் ஒரே இடத்தில் வழிவகை செய்யப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


பாரத்-விஸ்தார் (Bharat-VISTAAR) எந்தெந்த மொழிகளில் செயல்படும்?


பாரத்-விஸ்தார் (Bharat-VISTAAR) அறிமுகம் செய்யப்படும்போது, அதன் ‘டெக்ஸ்ட் சாட்பாட்’ (Text Chatbot) ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் செயல்படும் என்று கூறப்படுகிறது. ‘பாரதி’ (Bharati) என்ற குரல் வழி இயங்கும் செயற்கை நுண்ணறிவு உதவியாளரும் தொடக்கத்தில் இந்தி மற்றும் ஆங்கிலத்திலேயே செயல்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. 


இருப்பினும், மகாராஷ்டிர உழவர்கள் வசுதா (மராத்தி) மூலமாகவும், குஜராத் உழவர்கள் அமுல் AI-ன் சர்லாபென் (குஜராத்தி) மூலமாகவும், பீகார் உழவர்கள் இந்தி மொழியில் உள்ள பீகார் கிருஷி செயலி (Bihar Krishi App) மூலமாகவும் 'பாரத்-விஸ்தார்' சேவையைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று வேளாண் அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.


அடுத்த மூன்று மாதங்களுக்குள், பாரத்-விஸ்தார் சேவை தமிழ், வங்காளம், அஸாமி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் கிடைக்கும். அத்துடன் அந்தந்த மாநில அரசுத் திட்டங்களும் இதனுடன் இணைக்கப்படும் என்று தெரிவித்துள்ளனர். மீதமுள்ள மாநிலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் படிப்படியாக சேர்க்கப்பட்டு, அடுத்த ஆறு மாதங்களுக்குள் ஆங்கிலம், இந்தி மற்றும் 9 மாநில மொழிகள் என மொத்தம் 11 மொழிகளில் இந்தச் சேவை முழுமையாகக் கிடைக்கும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


Original article : Bharat-VISTAAR, offering farmers crop support in their languages -Harikishan Sharma

Share:

இந்தியாவில் அனைவருக்கும் கிடைக்கக்கூடிய சுகாதார அமைப்புக்கு (accessible healthcare system) புதுப்பிக்கப்பட்ட (refurbished) மருத்துவ கருவிகளின் நன்மைகள் யாவை? -ரோஷினி யாதவ்

 முக்கிய அம்சங்கள்:


— இந்திய உற்பத்தியாளர்கள் பாதுகாப்பு, விதிமுறைகள் மற்றும் உள்நாட்டுத் தொழில்துறையில் ஏற்படும் பாதிப்புகள் குறித்து கவலை தெரிவித்துள்ளனர். தடைகள் அல்லது கட்டுப்பாடுகளுக்குப் பதிலாக, சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (Ministry of Health and Family Welfare (MoHFW)) மேற்பார்வையில், மருத்துவ சாதன விதிகளின்கீழ் (Medical Devices Rules) ஒரு தெளிவான மற்றும் வலுவான கொள்கை இந்தியாவுக்குத் தேவை என்று சர்வதேச மருத்துவ சாதன அமைப்புகள் கூறுகின்றன.


— பிப்ரவரி மாதம் 3-ஆம் தேதி, ஒன்றிய ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின்கீழ் உள்ள மருந்தகத் துறை மாநிலங்களவையில் ஒரு தகவலைத் தெரிவித்தது. அதன்படி, "புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் கருவிகளை முறைப்படுத்துவதற்கான கொள்கை" (Policy on regulation of refurbished medical devices) குறித்து ஆய்வு செய்ய ஒன்றிய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம் (MoHFW) ஒரு குழுவை அமைத்துள்ளது. அக்குழுவானது புதுப்பிக்கப்பட்ட கருவிகளின் வரம்புகளை வரையறுக்கும் என்றும் அவற்றின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் எஞ்சியிருக்கும் ஆயுட்காலம் ஆகியவற்றை மதிப்பீடு செய்வதற்கான வழிமுறைகளை உருவாக்கும் என்றும் பயன்படுத்த முடியாத பழைய கருவிகளை கழிவுகளாக அகற்றுவது குறித்த வழிகாட்டுதல்களை வழங்கும் என்பன போன்ற பணிகளை மேற்கொள்ளும் என்று கூறப்படுகிறது. 


—  புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் கருவிகள் (Refurbished medical equipment) என்பது, பயன்படுத்தப்பட்ட சாதனங்கள் மற்றும் அமைப்புகளை மீண்டும் அவற்றின் செயல்பாட்டு நிலைக்குக் கொண்டு வரப்பட்டு, மருத்துவமனைகள் மற்றும் கிளினிக்குகளுக்கு குறைந்த விலையில் விற்கப்படுபவை ஆகும். இவற்றில் பெரும்பாலானவை விலையுயர்ந்த மற்றும் அதிக முதலீடு தேவைப்படும் தொழில்நுட்பங்கள் ஆகும். இவற்றின் அமைப்பைப் பொறுத்து, இவை பல கோடி ரூபாய் வரை விலை கொண்டதாக இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது. 


— இதில் அதிநவீன நோய் கண்டறியும் கருவிகள் மற்றும் ஸ்கேனிங் இயந்திரங்களான CT ஸ்கேனர்கள் (Computed Tomography Scanners), MRI ஸ்கேன் (Magnetic Resonance Imaging) இயந்திரங்கள், PET-CT (Positron Emission Tomography - Computed Tomography) அமைப்புகள், நவீன எண்டோஸ்கோபி மற்றும் லேப்ராஸ்கோபி கருவிகள் மற்றும் ரோபோ வழிகாட்டுதல் முறைகள் (robotic navigation systems) ஆகியவை அடங்கும்.


— ஒரு புதிய 1.5T MRI இயந்திரத்தின் (காந்தப்புல வலிமையை அளவிட 'டெஸ்லா' (Tesla) என்ற அலகு பயன்படுத்தப்படுகிறது) விலை சுமார் ₹4–8 கோடி அல்லது அதற்கு மேல் இருக்கும் என்கின்றனர். ஆனால், புதுப்பிக்கப்பட்ட இயந்திரங்கள் பொதுவாக ₹1–3.5 கோடி வரை கிடைக்கும். இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்கள் (Tier-2 & Tier-3), மாவட்ட மையங்கள் மற்றும் சிறிய நோய் கண்டறியும் நிலையங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு இது போன்ற அதிக விலை பெரும் சுமையாக உள்ளது. புதுப்பிக்கப்பட்ட கருவிகள் ஆரம்ப முதலீட்டுச் செலவைக் குறைக்கின்றன, இதன் மூலம் உள்ளூர் பகுதிகளில் மேம்பட்ட பரிசோதனை வசதிகள் கிடைப்பதோடு, குறைந்த செலவில் பரவலாக்கப்பட்ட மருத்துவச் சேவையையும் வழங்க முடிகிறது.


— இந்தியாவின் மருத்துவக் கருவிகள் தயாரிப்புத் துறை வளர்ச்சியடைந்து வந்தாலும், அதிநவீன இமேஜிங் (Imaging) மற்றும் சிறப்புத் தொழில்நுட்பங்களுக்காக நாடு இன்னும் இறக்குமதியையே நம்பியுள்ளது. இதற்கு அவற்றின் தொழில்நுட்ப சிக்கல், மேம்பட்ட உணர்கருவிகள் (Detectors), துல்லியமான பாகங்களின் தேவை மற்றும் உலகளவில் வலுவான உற்பத்தி மையங்கள் வெளிநாடுகளில் இருப்பதே முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. 


— மருத்துவக் கருவிகள் விதிகள், 2017-ன்கீழ் (Medical Devices Rules, 2017), புதுப்பிக்கப்பட்ட மருத்துவ சாதனங்களுக்கென இந்தியாவில் தனியான ஒழுங்குமுறை வழிமுறை ஏதுமில்லை என்கின்றனர். 2017-ஆம் ஆண்டு முதல் மருத்துவக் கருவிகள் படிப்படியாக முறைப்படுத்தப்படத் தொடங்கின. பின்னர் 2020-ஆம் ஆண்டில், அனைத்து சாதனங்களும் மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்கள் சட்டத்தின்கீழ் (Drugs and Cosmetics Act)  'மருந்துகள்' என அறிவிக்கப்பட்டன. இதன் மூலம் ஒன்றிய அரசின் கட்டுப்பாடு விரிவடைந்த போதிலும், புதுப்பிக்கப்பட்ட தயாரிப்புகளுக்கென ஒரு குறிப்பிட்ட வழிமுறை இன்னும் உருவாக்கப்படவில்லை என்பதைச் சுட்டிக்காட்டுகின்றனர். 


— தற்போது, ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின்கீழ் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) உள்ள ஒரு நிபுணர் குழு வழங்கும் 'தடை இல்லா சான்றிதழ்' (NOC) மூலம் மட்டுமே இறக்குமதிகள் அனுமதிக்கப்படுகின்றன. ஒன்றிய சுகாதார  மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் (MoHFW) சுகாதார சேவைகள் இயக்குநரகம் தயாரித்துள்ள பட்டியலின் அடிப்படையில், 38 வகையான உயர்தர மருத்துவக் கருவிகளை இறக்குமதி செய்ய இந்த நிபுணர் குழு ஒப்புதல் அளிக்க முடியும் என்று கூறப்பட்டுள்ளது. 


— பயன்படுத்தப்பட்ட மருத்துவ சாதனங்களின் இறக்குமதி முக்கியமாக 'அபாயகரமான மற்றும் பிற கழிவுகள் (மேலாண்மை மற்றும் எல்லை கடந்த இயக்கம்) விதிகள், 2016'-ன்கீழ் (Hazardous and Other Wastes (Management and Transboundary Movement) Rules, 2016) நிர்வகிக்கப்படுகிறது. இதற்கு முன்பு, தீவிர சிகிச்சைக்குப் பயன்படும் பழைய கருவிகளை இறக்குமதி செய்யத் தடை இருந்தது. ஆனால், டிசம்பர் மாதம் 2022-ஆம் ஆண்டில் செய்யப்பட்ட திருத்தங்களின்படி, குறிப்பிட்ட உயர்தர மற்றும் அதிக மதிப்புள்ள பழைய மருத்துவ சாதனங்களை கடுமையான நிபந்தனைகளுடன் இறக்குமதி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.


— நிபுணர் குழுவின் ஆய்வுக்குப் பிறகு ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்திடமிருந்து (MoEFCC) பெறப்படும் முன் அனுமதி, பராமரிப்பு மற்றும் தர உறுதி அறிக்கைகளை சமர்ப்பித்தல், அனுமதி ஆவணங்கள், ஒன்றிய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பிடமிருந்து (Central Drugs Standard Control Organisation (CDSCO)) பெறப்படும் தொழில்நுட்பத் தகவல்கள், மற்றும் வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்திடமிருந்து (Directorate General of Foreign Trade (DGFT)) பெறப்படும் இறக்குமதி அனுமதி ஆகியவை அடங்கும். 


— பயன்படுத்தப்பட்ட (Used), புதுப்பிக்கப்பட்ட (Refurbished), சீரமைக்கப்பட்ட (Reconditioned) அல்லது மறுஉற்பத்தி செய்யப்பட்ட (Remanufactured) மருத்துவக் கருவிகளைத் தெளிவாகப் பிரித்துக் காட்டுவதற்கான சட்டப்பூர்வ வரையறை இந்தியாவில் இல்லை. இதனால் அவற்றை வகைப்படுத்துவதிலும், உரிமம் பெறுவதிலும், விதிமுறைகளைப் பின்பற்றுவதிலும் குழப்பம் ஏற்படுகிறது.


— மருத்துவக் கருவிகள் விதிகளின்கீழ் (Medical Devices Rules) தெளிவான ஒழுங்குமுறை வழிமுறை இல்லாததையே இந்த விவாதம் மையமாகக் கொண்டுள்ளது. புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் கருவிகள் இருக்க வேண்டுமா என்பது இப்போது கேள்வியல்ல, அவை எவ்வாறு முறைப்படுத்தப்பட வேண்டும் என்பதே தற்போதைய முக்கிய கேள்வியாக உள்ளது. 


— மற்றொரு முக்கியப் பிரச்சினை, தொழில் கொள்கைக்கும் (Industrial Policy) சுகாதார சேவை கிடைப்பதற்கும் இடையிலான சமநிலை ஆகும். இறக்குமதிகளுக்குக் கட்டுப்பாடு விதிக்காவிட்டால் அது உள்நாட்டு உற்பத்தியைப் பாதிக்கும் என்று சிலர் கூறுகின்றனர். அதேவேளையில், இரண்டாம் மற்றும் மூன்றாம் நிலை நகரங்களில் மேம்பட்ட நோய் கண்டறியும் வசதிகளை விரிவுபடுத்துவதற்குப் புதுப்பிக்கப்பட்ட மருத்துவக் கருவிகள் மிகவும் அவசியமாகிறது.


Original article : What are the advantages of refurbished medical equipment for the accessible healthcare system in India? -Roshni Yadav

Share:

மகப்பேறு நலச் சட்டத்தின் முக்கிய அம்சங்கள் யாவை? -ரோஷினி யாதவ்

 பல ஆண்டுகளாக, இந்தியா தனது நாட்டு பெண்களின் கல்வித் திறனைக் கொண்டாடி வருகிறது. அவர்கள் பள்ளித் தேர்வுகள், குடிமைப்பணிகள் (Civil Services), மருத்துவ நுழைவுத்தேர்வுகள் மற்றும் பல்கலைக்கழகத் தேர்வுகளில் தொடர்ந்து முதலிடம் பிடித்து வருகின்றனர். இருந்தபோதிலும், நிறுவனங்களின் உயர்மட்டக் குழுக்கள் அல்லது உயர் முடிவெடுக்கும் இடங்களைப் பார்க்கும்போது, அவர்களின் பங்களிப்பு வெகுவாகக் குறைகிறது. பல பெண்களுக்கு, தாய்மை என்பது இந்த அமைதியான வெளியேற்றம் தொடங்கும் ஒரு புள்ளியாக இருக்கிறது என்று விஜய கிஷோர் ரஹத்கர் குறிப்பிடுகிறார். 


முக்கிய அம்சங்கள்:


— ஆறுமாத ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்கும் மகப்பேறு நலச் சட்டம், உலகிலேயே மிகவும் முன்னேற்றகரமான மற்றும் தாராளமான பாதுகாப்புகளில் ஒன்றாகும். இருப்பினும், ஒரு தாயின் உணர்வுப்பூர்வமான சவால்களை எந்தச் சட்டத்தாலும் முழுமையாகத் தீர்த்துவிட முடியாது. பல பெண்கள் வேலைக்குத் திரும்பும்போது குற்ற உணர்வு, பதற்றம் மற்றும் உடல் சோர்வுடனேயே திரும்புகிறார்கள்; அதோடு அவர்கள் வேலையில் முன்பைப் போல நம்பிக்கைக்குரியவர்களாக இருக்கமாட்டார்கள் என்ற பார்வையும் பொதுவாக நிலவுகிறது. தன் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர்வது சுயநலம் அல்ல என்பதை உணர ஒரு தாய்க்கு வீட்டிலும் ஆதரவு தேவை என்பதை சுட்டிக்காட்டுகின்றனர்.  அதேபோல், தன் குழந்தையை கவனித்துக் கொள்வது தனது திறமையையோ அல்லது அர்ப்பணிப்பையோ குறைக்காது என்பதை உணர அவருக்குப் பணிபுரியும் இடத்திலும் ஆதரவு தேவைப்படுகிறது.


— சுயதொழில் செய்பவர்களைத் தவிர, மற்ற அனைத்துச் சம்பளம் பெறும் பெண்களுக்கும் இந்தச் சட்டம் பொருந்தும் என்றாலும், அவர்கள் பெறும் ஆதரவின் அளவு பெருமளவில் மாறுபடுகிறது. ஒரு நிரந்தர அரசுப் பணியில் இருக்கும் பெண், மகப்பேறு விடுப்புடன் 730 நாட்கள் வரை குழந்தைப் பராமரிப்பு விடுப்பையும் பெறுகிறார். இதில் முதல் வருடம் முழுச் சம்பளமும், அதற்குப் பிறகு பகுதிச் சம்பளமும் வழங்கப்படுகிறது. இது அவர் தனது பணி வாழ்க்கைக்கு மீண்டும் திரும்புவதற்குத் தெளிவான மற்றும் திட்டமிடப்பட்ட வாய்ப்பை வழங்குகிறது.


— சிறு தனியார் நிறுவனங்களில், முதலாளிகள் சட்டத்தைப் பின்பற்றினாலும், அதை முழுமனதுடன் ஏற்றுக்கொள்வதில்லை. பல பெண்கள் மகப்பேறு விடுமுறை முடிந்து திரும்பும்போது, அவர்களின் பொறுப்புகள் குறைக்கப்படுவதையும், பதவி உயர்வு வாய்ப்புகள் மறுக்கப்படுவதையும், தொழில் வளர்ச்சி முடக்கப்படுவதையும் உணர்கிறார்கள். இந்தச் சட்டம் உண்மையாகவே பலன் அளிக்க வேண்டுமானால், நிறுவனங்கள் மனிதாபிமானத்துடன் நடந்துகொள்ள வேண்டும். பெண்கள் தங்களின் லட்சியத்தையும் தாய்மையையும் கண்ணியத்துடன் சமநிலைப்படுத்த முடியும் என்ற கருத்தை பணியிடங்கள் ஆதரிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. 


— புதிய தாய்மார்களுக்கு ஒரு மிகப்பெரிய தடையாக இருப்பது, நம்பகமான மற்றும் மலிவான குழந்தை பராமரிப்பு வசதி இல்லாததே ஆகும். இருப்பினும், இந்த சவாலில் ஒரு பெரிய வாய்ப்பும் ஒளிந்துள்ளது. இந்தியாவில் திறன் குறைந்த மற்றும் ஓரளவு திறன் கொண்ட பல பெண்கள் வேலை தேடிக்கொண்டிருக்கிறார்கள். அவர்களுக்கு முறையான பயிற்சியும் சான்றிதழும் வழங்கப்பட்டால், அவர்களை ஒரு புதிய, அங்கீகரிக்கப்பட்ட பராமரிப்புப் பணியாளர்களாக மாற்ற முடியும். இது பெண்களுக்கு பெருமளவிலான வேலைவாய்ப்பை உருவாக்குவதோடு, வேலைக்குச் செல்லும் தாய்மார்களுக்குத் தேவையான ஆதரவையும் வழங்கும் என்றும் கூறப்படுகிறது. அனைத்தையும்விட முக்கியமாக, ஒரு பெண் வேலைக்குச் செல்வதற்கு உதவியாக இருக்கும் மற்றொரு பெண் சுரண்டப்படக் கூடாது என்பதையும் சுட்டிக்காட்டுகின்றனர். 


— சமீப காலங்களில், தம்பதிகள், இரட்டை வருமானம், குழந்தைகள் இல்லை  (Dual Income, No Kids (DINK)) என்கிற ஒரு வாழ்க்கை முறையைத் தாங்களாகவே தேர்ந்தெடுப்பதாகக் கருதப்படுகிறது. ஆனால் பல பெண்களுக்கு, இந்த முடிவு தங்களது தொழில் வாழ்க்கையில் ஏற்படும் பின்னடைவுகள் குறித்த பயத்திலிருந்தும், குழந்தையை வளர்க்கும் பொறுப்பு முழுக்க முழுக்க தங்களுடையது மட்டுமே என்கிற எதிர்பார்ப்பிலிருந்தும் உருவாகிறது. சட்டங்கள் ஊதியத்தையும் வேலைகளையும் பாதுகாக்கலாம், ஆனால் அவற்றால் குடும்ப நடத்தைகளைக் கட்டுப்படுத்த முடியாது. குழந்தைகள் மற்றும் வேலை என இரண்டையும் நிர்வகிக்கும்போது, தாங்கள் அதை மிகவும் எளிதாகச் சமாளிப்பது போல் காட்டிக்கொள்ள வேண்டும் என்று பெண்கள் எதிர்பார்க்கப்படும்போது, தாய்மை இன்னும் கடினமாகிறது. குடும்பங்களும் பணியிடங்களும் இந்தப் பொறுப்புகளைப் பகிர்ந்து கொள்ளாதவரை, பல பெண்கள் அமைதியாகவும் நிரந்தரமாகவும் வேலைவாய்ப்பிலிருந்து வெளியேறுவது தொடரவே செய்யும் என்கின்றனர். 


உங்களுக்குத் தெரியுமா? 


— கடந்த மே மாதம் 23-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பில், மூன்றாவது குழந்தை பிறப்பிற்காக அரசுப் பள்ளி ஆசிரியைக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுத்த சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. மகப்பேறு விடுப்பு என்பது ஒரு பெண்ணின் இனப்பெருக்க உரிமைகளின் ஒரு பகுதி என்றும், அது அரசியலமைப்புச் சட்டத்தின்படி பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.


— இந்த வழக்கு, மகப்பேறு நன்மைகள் சமூக நீதி மற்றும் உள்ளடக்கத்துடன் (inclusion) எவ்வளவு நெருங்கிய தொடர்புடையவை என்பதை மீண்டும் காட்டுகிறது. வரலாற்றுரீதியாக, 1880-களில் இருந்தே ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுப்பு என்பது 'மக்கள்நல அரசு' (welfare state) என்ற கருத்தாக்கத்துடன் பிணைக்கப்பட்டுள்ளது. இது கொள்கை உருவாக்கத்தில் பெண்களின் அதிகரித்து வரும் செல்வாக்கின் விளைவாக உருவானது மட்டுமல்லாமல், அந்தச் செல்வாக்கு மேலும் வளரவும் வழிவகுத்ததாகக் கூறப்படுகிறது. 


— குறைந்துவரும் மக்கள்தொகை மற்றும் தாய்மார்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம் குறித்த கவலைகளைப் போக்க, பிஸ்மார்க் காலத்து ஜெர்மனி மற்றும் பிரான்ஸ் போன்ற நாடுகளில் முதன்முதலில் மகப்பேறுகால நலத்திட்டங்கள் (Maternity benefits) அறிமுகப்படுத்தப்பட்டன. இது அதிகப்படியான பெண்களை அரசு அமைப்பிற்குள்ளும், வேலைவாய்ப்பிற்குள்ளும் கொண்டுவர உதவியதாகக் கூறப்படுகிறது.


Original article : What are the key provisions of the Maternity Benefit Act? -Roshni Yadav

Share:

பசுமை எஃகு உற்பத்திக்கு மாறுதல் -நாகேந்திர நாத் சின்ஹா, அல்ஃபஹத் சோராதியா

 தொழில்நுட்பம் கைவசம் உள்ளது, சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்கான கூடுதல் செலவு கட்டுப்படியாகக்கூடியது, மேலும் சந்தையும் தயாராக இருக்கிறது.


2070-ஆம் ஆண்டிற்குள் கார்பன் வாயு உமிழ்வே இல்லாத (Net-Zero) நிலையை அடைய இந்தியா இலக்கு நிர்ணயித்துள்ளது. இந்த லட்சியத்தின் வெற்றி, இந்தியா எவ்வளவு வேகமாக ‘பசுமை எஃகு’ (Green Steel) உற்பத்தியையும் அதன் பயன்பாட்டையும் அதிகரிக்கப் போகிறது என்பதில்தான் உள்ளது. ஏனெனில், இந்தியாவில் தொழிற்சாலைகள் மூலம் வெளியேறும் கார்பன் வாயுவில் எஃகுத் தொழில் மிகமுக்கியப் பங்கு வகிக்கிறது. எதிர்காலத்தை உருவாக்க நாம் பயன்படுத்தும் பொருட்கள் வளர்ச்சிக்குத் துணையாக இருக்க வேண்டுமே தவிர, சுற்றுச்சூழலைப் பாதிப்பதாக இருக்கக்கூடாது என்கின்றனர். 


இதைக் கையாள்வதற்காக, எஃகு அமைச்சகம் (Ministry of Steel) தொழில்துறை தலைவர்கள் மற்றும் தொழில்நுட்ப நிபுணர்களைக் கொண்ட 14 பணிக்குழுக்களை அமைத்தது. எஃகுத் துறையில் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பதற்கான வழிகளைக் கண்டறிவதே இக்குழுக்களின் நோக்கமாகக் கூறப்படுகிறது. இவர்கள் அனைத்து மாற்றுக் வழிகளையும் ஆராய்ந்து, குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட எஃகு உற்பத்தியை விரைவுபடுத்துவதற்கான ஒரு திட்டவரைவை  உருவாக்க உதவியதாகவும் கூறப்படுகிறது. 


இருப்பினும், பல உறுப்பினர்கள் ஒரு முக்கியமான தடையைச் சுட்டிக்காட்டினர்: அதுதான் "கிரீன் பிரீமியம்" (Green Premium) அதாவது, சுற்றுச்சூழலுக்குப் பாதிப்பில்லாத 'பசுமை எஃகு' (Green Steel) தயாரிப்பதற்கு, உற்பத்தியாளர்களுக்குத் தொடக்கத்தில் மிக அதிகச் செலவு ஏற்படுவதைக் கண்டறிந்தனர். இந்த இடைவெளியைக் குறைக்க, ஆரம்ப ஆண்டுகளில் உற்பத்தியாளர்களுக்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிதி உதவி தேவைப்படுகிறது. சரக்கு மற்றும் சேவை வரியை  (Goods and Service Tax (GST)) முறைப்படுத்துவதும், குறிப்பிட்ட காலத்திற்கு ஊக்கத்தொகை வழங்குவதும் அவர்கள் இந்த மாற்றத்தைச் சமாளிக்க உதவும் என்றும் கூறப்படுகிறது. அப்படியென்றால், அதிக விலை கொண்ட பசுமை எஃகுக்கான தேவையை அதிகரிக்க, அரசு கொள்முதல் முறையைப் பயன்படுத்துவது ஒரு நடைமுறைக்குச் சாத்தியமில்லாத ஒன்றா என்பதையும் ஆராய வேண்டியுள்ளது?


கையாளக்கூடிய வளர்ச்சி


உற்பத்தியாளருக்கு ஏற்படும் கூடுதல் செலவையும், அரசு கொள்முதலில் ஏற்படும் உண்மையான சுமையையும் தனித்தனியே பிரித்துப் பார்ப்பது அவசியம். எங்களது ஆய்வின்படி, பசுமை எஃகு (Green Steel) அதிக விலை கொண்டதாக இருந்தாலும், பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களில் அதன் தாக்கம் மிகவும் குறைவுதான் என்கின்றனர். இந்தியாவில் பொதுத்துறை மூலதனச் செலவில் பெரும் பகுதியை வகிக்கும் பெரிய திட்டங்களில், எஃகு பயன்பாடு சுமார் 18 சதவீதம் மட்டுமே 

ஆகும். பசுமை எஃகு 30 சதவீத கூடுதல் விலையாக இருந்து, அது பொது உள்கட்டமைப்புத் திட்டங்களில் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டாலும், மொத்த திட்டச் செலவு சுமார் 5.5 சதவீதம் மட்டுமே அதிகரிக்கும் என்றும் அனைத்துத் திட்டங்களும் உடனடியாகப் பசுமை எஃகு பயன்பாடுக்கு மாறப்போவதில்லை என்பதால், சுமார் 20 சதவீதம் கூடுதல் விலையில் இதைப் பயன்படுத்தினால், நெடுஞ்சாலைகள் போன்ற பொதுப்பணித் திட்டங்களின் நிதிஒதுக்கீடு வெறும் 1.1 சதவீதம் மட்டுமே உயர வாய்ப்புள்ளது என்பன இதற்கான முக்கியக் காரணங்களாகக் கூறப்படுகின்றன. 


தேசியப் பொருளாதாரப் பாதுகாப்பிற்கான ஒரு தற்காப்பு நடவடிக்கையாகப் பார்க்கும்போது, இந்த உயர்வு சமாளிக்கக்கூடிய ஒன்றுதான் என்கின்றனர்.  ஐரோப்பிய ஒன்றியத்தின் ‘கார்பன் எல்லைச் சரிசெய்தல் பொறிமுறை’ (Carbon Border Adjustment Mechanism (CBAM)) மற்றும் நிலையற்ற கற்கரியாக்க நிலக்கரி (Coking coal) இறக்குமதி விலைகளால் இந்தியா அழுத்தங்களைச் சந்தித்து வருகிறது. இந்தியா ஆண்டுதோறும் 5 கோடி டன்னுக்கும் அதிகமான கோக்கிங் நிலக்கரியை இறக்குமதி செய்கிறது. இதனால் ஏற்படும் விலை மாற்றங்கள் நமது வர்த்தகத்தையும் தொழில்துறையையும் எளிதில் பாதிக்கின்றன. பசுமை எஃகு (Green steel) உற்பத்திக்கு மாறுவது, கார்பன் வரிகளைத் தவிர்க்கவும், எரிபொருள் விலை மாற்றங்களால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைக்கவும் உதவும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 


உலகளாவிய முன்னுதாரணங்கள் நமக்கு வழிகாட்டுகின்றன. ஜப்பானின் பசுமை கொள்முதல் கட்டமைப்பு (Green purchasing framework), கொள்முதல் விதிகளுடன் நிதிச்சலுகைகளையும் இணைக்க வேண்டும் என்பதைக் காட்டுகிறது; அப்போதுதான் தொழில்துறையினரால் உற்பத்தியை அதிகரிக்க முடியும் என்கின்றனர். கலிபோர்னியாவின் 'பை கிளீன்' (Buy Clean) மாதிரி, கடுமையான கார்பன் தரநிலைகளும், சரிபார்க்கப்பட்ட வெளிப்பாடுகளும் எவ்வாறு வெளிப்படைத்தன்மையை மேம்படுத்தி பாதிப்புகளைக் குறைக்கின்றன என்பதை விளக்குகிறது. இந்த உதாரணங்களின் அடிப்படையில், இந்தியா 'பசுமை எஃகு வகைப்பாட்டை' (Green Steel Taxonomy) அறிமுகப்படுத்தியுள்ளது. இதில் 3, 4 மற்றும் 5 நட்சத்திர மதிப்பீட்டு முறை உள்ளது. இது எஃகு உற்பத்தியின்போது வெளியேறும் கார்பன் அளவைப் பொறுத்து தரம் பிரித்து, சந்தை நிலைகளில் அந்தத் தயாரிப்புக்கு ஒரு தெளிவான 'கார்பன் வெளியேற்ற அளவு' குறித்த (Carbon label) நெறிமுறைகளையும்  வழங்குகிறது. 


இந்த வகைப்பாட்டின் அடிப்படையில் மற்றும் சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்தாலோசித்த பிறகு, அரசு கொள்முதலில் 'பசுமை எஃகு' (Green Steel) பயன்படுத்துவதைக் கட்டாயமாக்க அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருகிறது. இருப்பினும், பசுமை எஃகுக்கான கூடுதல் விலை (Green Premium) மற்றும் அதன் தரத்தை உறுதி செய்வது எப்படி என்பது குறித்த கவலைகளால், நிதி அமைச்சகம் உள்ளிட்ட முக்கியத் துறைகளின் இறுதி ஒப்புதலுக்காக தற்போது இந்தத் திட்டம் காத்திருக்கிறது.


முன்னோக்கி செல்லும் வழி


இந்தத் தாமதத்திற்கு மிக முக்கியமான காரணம் நம்பிக்கையின்மை ஆகும். ஒரு கொள்முதல் அதிகாரி, சான்றிதழ் பெற்ற ‘பசுமை’ (Green) TMT கம்பிக்கும் சாதாரண கம்பிக்கும் இடையே உள்ள வித்தியாசத்தை இன்று எளிதாகக் கண்டறிய முடிவதில்லை என்கின்றனர். இதற்குத் தீர்வாக, தற்போது பயன்பாட்டில் உள்ள 'மேக் இன் இந்தியா' (Made in India) குறியீடு முறையையும், இந்தியத் தர மதிப்பீதட்டு அமைப்பின் (QCI) அங்கீகாரத்தையும் பயன்படுத்தலாம் என்கின்றனர். இதனுடன் 'கிரீன் ஸ்டார்' (Green Star) தரவரிசையையும் இணைப்பதன் மூலம், அந்தப் பொருளின் சுற்றுச்சூழல் தரம் மற்றும் கார்பன் அளவுகளை அதிகாரிகள் உடனடியாகச் சரிபார்க்க முடியும் என்றும் தெரிவிக்கின்றனர். 


நிர்வாகம் தொடர்பான மற்ற சிக்கல்களைக் குறிப்பிட்ட சீர்திருத்தங்கள் மூலம் சரிசெய்ய முடியும் என்கின்றனர். கொள்முதல் விதிகள் என்பது ஆரம்பக்கட்ட குறைந்த விலையைத் தேர்ந்தெடுப்பதாக மட்டும் இருக்கக்கூடாது என்றும் மாறாக, நிலைத்தன்மை மற்றும் நாட்டின் பொருளாதார நலன் உள்ளிட்ட பணத்திற்கான ஒட்டுமொத்த மதிப்பையும் கருத்தில் கொள்ள வேண்டும். அதே சமயம், பொதுப்பணி மதிப்பீடுகளுக்குப் பயன்படுத்தப்படும் ‘விலைப்பட்டியலில்’ சான்றளிக்கப்பட்ட குறைந்த கார்பன் கொண்ட எஃகு (low-carbon steel) தெளிவாகச் சேர்க்கப்பட வேண்டும். தற்போது, கார்பன் செறிவு ஒரு தர அளவுகோலாக அங்கீகரிக்கப்படாததால், ‘பசுமை எஃகு’ என்பது ஒரு விதிவிலக்காகவே பார்க்கப்படுகிறது. இதனை ஒரு தரமான அளவுகோலாக மாற்றினால், அதிகாரிகள் எவ்வித நிர்வாகச் சிக்கலுமின்றி நிலையானப் பொருட்களை வாங்கமுடியும் என்கின்றனர். மேலும், கொள்முதல் அதிகாரிகளின் திறனை மேம்படுத்துவதும், அவர்களுக்கு வழிகாட்டுவதும், மாநிலங்களுடன் இணைந்து பசுமை பொதுக் கொள்முதல் அவசியத்தை ஊக்குவிப்பதும் முக்கியமாகக் கருதப்படுகிறது. 


உற்பத்தியுடன் கூடிய ஊக்கத்தொகை திட்டங்களும் (Production Linked Incentive schemes (PLI)) மற்றும் பசுமை ஹைட்ரஜன் திட்டங்களும், அரசு கொள்முதல் ஏலங்களுடன் இணைக்கப்பட வேண்டும். பசுமை எஃகு (green steel) உற்பத்திக்கு அரசு மானியம் வழங்கினால், அந்த எஃகை வாங்கும் முக்கிய வாடிக்கையாளராகவும் அரசே இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது. இது தனிப்பட்ட நிறுவனங்களின் லாப நோக்கத்தை பொதுநலனுடன் ஒன்றிணைக்கும் என்றும் தெளிவுபடுத்துகின்றனர். 


3-ஸ்டார் தரநிர்ணயத்தை ஒரு நடைமுறைத் தொடக்கமாகக் கொள்ளலாம்; ஆனால், கொள்முதல் கொள்கையானது படிப்படியாக 4 மற்றும் 5-ஸ்டார் தரநிலை எஃகு உற்பத்திக்கு மாற வேண்டும் என்பதைத் தெளிவாக உணர்த்த வேண்டும். 2030-ஆம் ஆண்டிற்குப் பிறகு இந்தத் தரநிலைகளை இன்னும் கடுமையாக்கும் ஒரு திட்டவரைவை, குறைந்த கார்பன் உமிழ்வு கொண்ட உயர்தர எஃகு உற்பத்தியில் முதலீடு செய்யத் தொழில்துறையை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


இந்தியாவுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது: அதற்கான தொழில்நுட்பம் இப்போது கைவசம் உள்ளது, பசுமைத் திட்டங்களுக்கு மாறும் கூடுதல் செலவும் கட்டுப்படியாகக்கூடியதே, சந்தையும் அதற்கெனத் தயாராக இருக்கிறது. இதற்கு ஒரு நடைமுறை தீர்வாக, இந்திய இரயில்வே போன்ற ஒன்றிய கொள்முதல் அமைப்புகள் மூலம் குறிப்பிட்ட சில முன்னோடித் திட்டங்களைச் செயல்படுத்தலாம் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது. பெரிய அளவிலான கொள்முதல் நடவடிக்கைகள், 'பசுமை எஃகு' (Green Steel) தயாரிப்பிற்கான ஒரு சிறந்த சோதனைக்களமாக அமையும் என்கின்றனர். இப்போது, இந்தியாவின் எஃகு, நிதி மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சகங்கள் ஒன்றிணைந்து, நாட்டின் காலநிலை இலக்குகளை நிதி மற்றும் கொள்முதல் முடிவுகளோடு இணைத்துச் செயல்பட வேண்டியது அவசியமாகிறது


நாகேந்திர நாத் சின்ஹா, மேனாள் செயலாளர், எஃகு அமைச்சகம்; அல்ஃபஹத் சொரத்தியா, கொள்கை ஆய்வாளர்.


Original article : Transitioning to green steel -Nagendra Nath Sinha, Alfahad Sorathia

Share:

கடன் நகரங்கள்: நகர்ப்புற சவால் நிதி பற்றி…

 சந்தைகளை பயன்படுத்துவதற்கு முன்பு நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு அதிக நிர்வாகத் திறன் தேவைப்படுகிறது.


அரசாங்கத்தின் புதுப்பிக்கப்பட்ட 'நகர்ப்புற சவால் நிதி', நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் (ULB) கவனத்தை இன்னும் விலைமதிப்பற்ற வளமாக மாற்றியுள்ளது. ஏனெனில், அம்ருத், தூய்மை இந்திய இயக்கம் நகர்ப்புறம் 2.0, 'திறன்மிகு நகரங்கள்' மற்றும் பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா உள்ளிட்ட பிற திட்டங்களின் கீழ் முடிக்கப்படாத பணிகளை முடிக்க நிதிக்காக போராடுகிறார்கள். "சந்தை-இணைக்கப்பட்ட, சீர்திருத்தம் சார்ந்த மற்றும் விளைவு சார்ந்த" நகர்ப்புற உள்கட்டமைப்பு என்று அழைக்கப்படும் இந்த மையம், பத்திரங்கள், கடன்கள் மற்றும் பொது-தனியார் கூட்டாண்மைகள் (Public-Private Partnerships (PPP)) மூலம் நகரங்கள் குறைந்தது 50% நிதி திரட்டினால் 25% செலவுகளை ஈடுகட்டுகிறது. இது நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு ஒருபோதும் நிதி அதிகாரங்களை வழங்காத ஒரு அமைப்பில் நிதி ஒழுக்கத்தை ஊக்குவிக்கிறது. உள்ளூர் வரிகள், மாநில பரிமாற்றங்கள் மற்றும் நகராட்சித் திறன் இடைவெளிகளை சரிசெய்யாமல் பல நகரங்கள் நம்பகத்தன்மையுடன் கடன் வாங்க முடியாது. நகரங்களை வளர்ச்சியை "சம்பாதிக்க" கட்டாயப்படுத்துவது பலவீனமானவற்றை ஒதுக்கி வைத்து, தீர்வுகளை முறைப்படுத்துவது போன்ற சேவைகளை விட பணமாக்கக்கூடிய சொத்துக்களுக்கு முன்னுரிமை அளிக்கலாம். ரூ.5,000 கோடி உத்தரவாதம் சிறிய நகரங்கள் கடன் வாங்க உதவும். ஆனால், திடமான கணக்கியல் மற்றும் நிர்வாகத் திறன் முக்கியம். தகுதி மற்றும் செயல்முறை குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு கேட்டபோது, ​​வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம், அவை இன்னும் "பரிசோதனையில் உள்ளன" (under examination). அரசியல்ரீதியாக செலவினங்களை ஆபத்தில் ஆழ்த்துகின்றன என்று கூறியது.


2014-ஆம் ஆண்டு முதல், ஒன்றிய அரசு பொது நிதியைக் குறைத்து வருகிறது. அதேநேரத்தில் தனியார் பணத்தைப் பயன்படுத்தி பொது அமைப்புகள் வித்தியாசத்தை ஈடுசெய்யும் என்று எதிர்பார்க்கிறது. CSIR முதலில் பாதிக்கப்பட்ட ஒன்றாகும்.  மேலும், நகர்ப்புற மேம்பாடு அடுத்ததாக இருக்கலாம். உயர்கல்வியில், உள்கட்டமைப்பு கடன்கள் பொதுப் பல்கலைக்கழகங்களை கடனில் ஆழ்த்தியுள்ளன. இதனால், அவை கட்டணங்களை உயர்த்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், ஏழை மாணவர்களுக்கு இது கடினமாக உள்ளது. தேசிய சுகாதார திட்டத்திற்கான நிதி மேலாண்மை ஆய்வுகள், கருவூலங்கள் மூலம் நிதியை செயல்படுத்தும் நிறுவனங்களுக்கு மாற்றுவதில் நீண்ட தாமதங்களை வெளிக்காட்டியுள்ளன. எனவே நடைமுறையில், மருத்துவமனைகள் முதலில் சேவைகளைப் பெறவும் பின்னர் பணத்தைப் பெறவும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன. உஜ்வால் டிஸ்காம் அஷ்யூரன்ஸ் யோஜனாவின்  (Ujwal DISCOM Assurance Yojana) தணிக்கைகள் மின்துறையில் பெரிய இடைவெளிகளையும் மோசமான செயல்படுத்தலையும் காட்டுகின்றன. தனியார் பணத்தைப் பயன்படுத்துவது தவறல்ல, பொது அமைப்புகள் நிதி திரட்ட முடியும். ஆனால் பிரச்சனை என்னவென்றால், ஒன்றிய அரசு இப்போது அடிப்படை சேவைகளை முதலில் உத்தரவாதம் செய்வதற்குப் பதிலாக சந்தை அணுகலுடன் பொதுமக்களின் ஆதரவை இணைக்கிறது. ஆகையால், நிதியத்தின் கருவிகள் நியாயமானவையாக இருந்தபோதிலும், நில ஆவணங்கள் ஒழுங்கற்ற குழப்ப நிலையில் இருந்தால், நகராட்சி அமைப்புகள் வழக்கமாக முதன்மைத் திட்டங்களை மீறினால், வாடகைதாரர்களுக்கும் குறைந்த வருமானக் குடும்பங்களுக்கும் கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படாவிட்டால், “வங்கி ஏற்புத்தன்மை”க்கு (bankability) எதிரான, அதற்கு அடிபணியாத (insubordinate) நிலை ஏற்படும் அபாயம் அதிகரிக்கும்.


Original article : Cities of debt: On the Urban Challenge Fund.

Share:

இந்தியாவின் கூட்டாட்சி முறைக்கு, ஒரு கட்டமைப்பு மறுசீரமைப்பு தேவைப்படுகிறது -மு.க.ஸ்டாலின்

 தன்னாட்சி அதிகாரம் கொண்ட மாநிலங்கள், ஒன்றியம் மற்றும் பொறுப்புணர்வுள்ள நிர்வாகம் போன்ற வடிவங்களில் சமநிலையான கூட்டாட்சி (balanced federalism) தேவைப்படுகிறது.


இந்திய அரசியலமைப்பு, கூட்டாட்சி கட்டமைப்பைக் கொண்டிருந்தாலும், அது ஒன்றிய அரசுக்கு அதிக அதிகாரம் வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 1935-ஆம் ஆண்டின் இந்திய அரசுச் சட்டத்திலிருந்து அதிகளவில் எடுக்கப்பட்ட இந்திய அரசியலமைப்பு, ஒன்றிய அரசுக்கு முக்கிய அதிகாரத்தை வழங்கியுள்ளது. அதே நேரத்தில் மாநிலங்களுக்கு குறிப்பிட்ட சில அதிகாரத்தை மட்டுமே வழங்கியுள்ளது. இந்த அமைப்பு அதன் தோற்றத்திலிருந்து எழுந்தது. பிரிவினையின் அதிர்ச்சி, 14 மாகாணங்கள் மற்றும் 500-க்கும் மேற்பட்ட சுதேச அரசாங்கங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் பிளவுபடுத்தும் சக்திகள் தேசிய ஒற்றுமைக்கு அச்சுறுத்தலாக இருக்கலாம் என்ற அச்சங்கள் எழுந்தன. அந்த சூழலில், மையப்படுத்தல் விவேகமானது மட்டுமல்ல, அவசியமானதும் என்று தோன்றியது. அப்போதைய சூழலில், ஒன்றிய அரசு புத்திசாலித்தனமாக மட்டுமல்லாமல் முக்கியானதாககவும் தோன்றியது.


இருப்பினும், அந்த பதட்டமான விவாதங்களில்கூட, தெளிவான குரல்கள் எழுந்தன. ஒன்றிய அரசின் வலிமை, ஒவ்வொரு செயல்பாட்டையும் கைப்பற்றுவதிலிருந்து அல்ல, மாறாக வேறு இடங்களில் உள்ள பொறுப்புகளை புத்திசாலித்தனமாக மறுப்பதிலிருந்து வருகிறது என்று K. சந்தானம் அரசியலமைப்பு சபையை எச்சரித்தார். "இந்த நேர்மறையான மற்றும் எதிர்மறையான அதிகார வரம்புகளில்தான் ஒரு உண்மையான கூட்டாட்சி அமைப்பு தங்கியுள்ளது" என்று அவர் குறிப்பிட்டார்.


அந்த ஒற்றை சூத்திரத்தில் இரண்டு நீடித்த கொள்கைகள் உள்ளன: முதலாவதாக, அறிவு மற்றும் பொறுப்புணர்வை ஒன்றாக பயன்படுத்தும்போது அதிகாரம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இரண்டாவதாக, அதிகமாக ஒன்றிய அரசை சார்ந்திருத்தல் என்பது ஒரு அதிகாரத்தால் திறமையாக நிறைவேற்ற முடியாத பணிகளைச் செய்வதன் மூலம் பலவீனத்தை உருவாக்குகிறது. விண்வெளி ஆராய்ச்சி முதல் கிராம சுகாதாரம் வரை அனைத்தையும் கட்டுப்படுத்த முயற்சிக்கும் ஒரு அரசாங்கம், அதன் எல்லைகளை விரிவுபடுத்தக்கூடும். ஆனால், இது பொதுவாக குறைவான செயல்திறன் கொண்டதாக ஆக்குகிறது.


ஆதிக்கத்தை வலுப்படுத்துதல்


வரலாறு காட்டுவது என்னவென்றால், தேவை என்ற பெயரில் ஏற்கப்பட்ட அதிகாரம், தேவை மறைந்து போன பின்னரும் அரிதாகவே பின்வாங்குகிறது. அதற்குப் பின்னர் வந்த பத்தாண்டுகளில், ஒன்றிய மற்றும் மாநில அளவில் ஒரே தேசியக் கட்சியின் ஆதிக்கத்தால் மையமயமாக்கும் போக்குகள் மேலும் வலுப்படுத்தப்பட்டன. இது "உயர் தலைமை" (high command) கலாச்சாரத்தை வளர்த்தது; அது மாநிலத் தலைமையின் சுயாட்சியைக் குறைத்தது. பின்னர், ஒன்றியில் கூட்டணி அரசுகளின் எழுச்சியும், மாநிலங்களில் பிராந்தியக் கட்சிகளின் உயர்வும் ஒரு சமநிலையான கூட்டாட்சி ஒழுங்குக்கு வழிவகுத்தது—அது ஒற்றுமையை ஆபத்தில் ஆழ்த்தாமல். இன்றைய அரசியல் முதிர்ச்சி பெற்று, மொழிரீதியாக ஒருங்கிணைக்கப்பட்ட மாநிலங்கள் 1950-ல் இருந்திருந்தால், அரசியலமைப்பு வடிவமைப்பு மிகவும் பரவலாக்கப்பட்ட (decentralised) பாதையில் பரிணமித்திருக்கலாம் என்று நியாயமாக ஊகிக்கலாம்.


ஒரு நபர் குழந்தைப் பருவ பயங்களில் என்றென்றும் சிக்கிக் கொள்ள முடியாதது போல, அதைப் போலவே ஒரு தேசமும் அதன் ஆரம்ப காலத்தின் கவலைகளுக்குக் கீழ் என்றும் உழன்று கொண்டிருக்க முடியாது. இந்தியாவின் ஒற்றுமை இப்போது பலவீனமானதல்ல; இந்தியா என்ற கருத்து இப்போது உறுதியானதும் நீடித்ததுமான அடித்தளங்களின் மீது நிலைத்துள்ளது. ஆயினும், 76 ஆண்டுகள் கழித்தும், அரசியலமைப்பு நடைமுறை இன்னும் 1940களின் பிற்பகுதியின் எதிர்வினைகளையே (reflexes) பிரதிபலிக்கிறது. ஒருகாலத்தில் தேவையாகக் கருதப்பட்ட மையப்படுத்தல் (Centralisation), இப்போது ஒரு பழக்கமாகிவிட்டது.


தொடர்ச்சியான அரசியலமைப்பு திருத்தங்கள், ஒருங்கிணைந்த பட்டியல் (Concurrent List) விஷயங்களில் விரிவான ஒன்றிய சட்டமியற்றல், நிபந்தனைக்குட்பட்ட நிதி ஆணையம் பரிமாற்றங்கள், மற்றும் கடுமையான மாதிரிகளுடன் கூடிய ஒன்றிய நிதியுதவித் திட்டங்கள் ஆகியவற்றின் மூலம், அதிகார சமநிலை ஒன்றிய அரசின் பக்கம் இன்னும் அதிகமாகச் சாய்ந்துள்ளது. புது தில்லியில் பெரிய அமைச்சகங்கள் உள்ளன; அவை மாநிலங்களின் பணிகளை நகலெடுப்பதோடு, பெரும்பாலும் மைக்ரோ மேலாண்மை மற்றும் நடைமுறை கண்காணிப்பு மூலம் மாநிலங்களின் முன்னுரிமைகளைத் திசைதிருப்ப முயல்கின்றன. ஜனநாயக அடுக்கமைப்புக்கு மாற்றமாக, ஒருங்கிணைந்த பட்டியல் விஷயங்களில் மாநிலங்களின் முழுமையான சட்டங்களை ஒன்றிய நிர்வாகம், துணைச் சட்டங்கள் மூலம் மீற முயற்சிக்கிறது.


இது ஒரு கொள்கை


இந்தப் போக்கு அரசியலமைப்பு கோட்பாடுகளுடன் (constitutional doctrine.) மோதுகிறது. 1994-ஆம் ஆண்டு S.R. பொம்மை vs இந்திய ஒன்றியம் வழக்கில், உச்சநீதிமன்றம் கூட்டாட்சி முறையை அரசியலமைப்பின் அடிப்படைக் கட்டமைப்பின் ஒரு பகுதியாக தீர்ப்பளித்தது. மாநிலங்கள் ஒன்றிய அரசின் கீழ்நிலை அதிகாரிகள் அல்ல. ஆனால், அவற்றிற்கு ஒதுக்கப்பட்ட துறைகளில் அவை உயர்ந்தவை என்பதை உறுதிப்படுத்தியது. கூட்டாட்சி (Federalism) என்பது இந்தியாவின் வரலாறு மற்றும் பன்முகத்தன்மையில் (diversity) வேரூன்றிய ஒரு கொள்கையாகும். நிர்வாக வசதிக்கான விவகாரம் அல்ல என்று நீதிமன்றம் கூறியது. நீதித்துறை உறுதிப்பாடு இருந்தபோதிலும், மாநில சுயாட்சி சட்டமன்ற விரிவாக்கம், நிர்வாகத்தின் எல்லை மீறல் மற்றும் சூழ்நிலை பன்முகத்தன்மையைவிட சீரான தேசிய தீர்வுகளுக்கு சலுகை அளிக்கும் பிற நீதித்துறை விளக்கங்கள் மூலம் தொடர்ந்து பாதிப்புகளை சந்தித்து வருகிறது.


இந்தப் போக்குக்கு அடிப்படையில், ஒன்றியம் வலுவாக இருக்க மாநிலங்களை பலவீனப்படுத்த வேண்டும் என்று ஒரு தவறான எண்ணம் இருக்கிறது. ஆனால் உண்மை இதுதான் : ஒன்றியமும் மாநிலங்களும் ஒருவருக்கு எதிரான போட்டியில் இல்லை. இரண்டும் சேர்ந்து இந்திய அரசியலமைப்பை நடத்தும் கூட்டாளிகள். இந்தியா மிகப் பெரியது, மிகவும் வேறுபாடுகள் நிறைந்தது. அதனால் எல்லாவற்றையும் டெல்லியிலிருந்து ஒரே மாதிரி திட்டமிட முடியாது. புது தில்லியில் எவ்வளவு திறமையானவர்கள் இருந்தாலும், ஒவ்வொரு மொழிப் பகுதி, விவசாய நிலம், தொழில் பகுதி, வேலை சந்தை ஆகியவற்றுக்கும் சரியாகப் பொருந்தும் கொள்கையை உருவாக்க முடியாது.


அதிகாரப் பரவலாக்கம் (Decentralisation) மாநிலங்கள் சிறிய அளவில் கொள்கைகளை முயற்சிக்க அனுமதிப்பதன் மூலம் இந்தப் பிரச்சினையைத் தீர்க்கிறது. தேசிய அளவில் எந்த விதமான சிக்கல்களும் இல்லாமல் தோல்விகளைக் கட்டுப்படுத்தலாம். மேலும், வெற்றிகரமான கண்டுபிடிப்புகள் பக்கவாட்டில் (horizontally) பரவ அல்லது தேசிய அளவில் ஏற்றுக்கொள்ள அனுமதிக்கலாம். இந்தியாவின் மிகவும் பயனுள்ள திட்டங்கள் பலவும் இந்த பாதையை துல்லியமாக பின்பற்றின. தமிழ்நாட்டின் மதிய உணவுத் திட்டம், பொது சுகாதாரம் மற்றும் கல்வியறிவில் கேரளாவின் சாதனைகள் மற்றும் மகாராஷ்டிராவின் வேலைவாய்ப்பு உத்தரவாத முயற்சி அனைத்தும் தேசியக் கொள்கையைத் தெரிவிப்பதற்கு முன்பு மாநில அரசுகள் செயல்படுத்த தொடங்கி விட்ட திட்டங்கள். புதிய யோசனைகள் மற்றும் புதுமைகளுக்கு வழிவகுக்கும் பல்வேறு அணுகுமுறைகள் அதிகமாக ஒன்றிய அரசை சார்ந்திருப்பதன் மூலம் கட்டுப்படுத்தப்படுகிறது.


மாநிலங்களுக்கு நிர்வாக அல்லது தொழில்நுட்ப திறன் இல்லை என்றும், எனவே ஒன்றிய அரசு தலையீடு தேவை என்றும் ஒன்றிய அரசில் உள்ளவர்கள் பெரும்பாலும் வாதிடுகின்றனர். இருப்பினும், அத்தகைய தலையீடு அது சரிசெய்வதாகக் கூறும் திறனை முடக்கி, தன்னைத்தானே நிலைநிறுத்திக் கொள்ளும் சார்பு சுழற்சியை (self-perpetuating cycle) உருவாக்குகிறது. தங்கள் குழந்தைகளிடம் பொறுப்பை ஒப்படைக்காத பெற்றோர்களும், அதிகாரத்தை ஒப்படைக்க மறுக்கும் தலைவர்களும், தவிர்க்க முடியாமல் சார்புநிலையை வளர்க்கிறார்கள். அரசாங்கங்களும் இதற்கு விதிவிலக்கல்ல.


பொறுப்பு, பொறுப்புக்கூறல் மற்றும் தவறுகளைச் செய்து சரிசெய்யும் சுதந்திரம் இருப்பதன் மூலம் திறமை (Capacity) வெளி வருகிறது. இந்தியாவின் பல மாநிலங்கள்-இறையாண்மை கொண்ட நாடுகளை போன்றவை. இயல்பாகவே திறமையற்றவை என்றும், எனவே, ஊடுருவும்  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று கூறுவது தேசிய சுயமரியாதைக்கு (national self-respect) முரணானது.


மையப்படுத்தல் (Centralisation) சிறந்த விளைவுகளை வழங்கியிருந்தாலும் அதை இன்னும் பாதுகாக்க முடியும். ஆனால் பரவலாக்கப்பட்ட கூட்டமைப்புகள், உலகளாவிய அளவுகோல்கள் அல்லது இந்தியாவின் சொந்த தேவைகளுடன் ஒப்பிடுகையில், இந்தப் பதிவு நம்பத்தகாததாக உள்ளது. மையப்படுத்தப்பட்ட மாதிரி  (centralised model) உலகளாவிய அணுகல், நிலையான தரம், உண்மையான சமத்துவம் அல்லது உலகளாவிய போட்டித்தன்மையை வழங்க போராடியுள்ளது. அதற்குப் பதிலாக, அது ஒழுங்குமுறை சிக்கலான தன்மை, வளங்கள் விரிவடையும் கட்டளைகளில் நீட்டிக்கப்படுவதால் நாள்பட்ட நிதிப் பற்றாக்குறை, பலவீனமடையும் பொறுப்புணர்வு மற்றும் மாநிலத் திறனின் படிப்படியான குறைப்பு போன்ற சூழலை உருவாக்கியுள்ளது.


தமிழ்நாடு இந்த ஆபத்துகளை ஆரம்பக் கட்டத்திலேயே அங்கீகரித்தது. 1967-ஆம் ஆண்டில், இந்தியாவின் இறையாண்மை மற்றும் ஒருமைப்பாட்டைப் பராமரிக்க ஒன்றிய அரசு போதுமானதாக இருக்க வேண்டும் என்று சி.என். அண்ணாதுரை குறிப்பிட்டார். ஆனால், தேசிய பாதுகாப்புடன் நேரடி தொடர்பு இல்லாத சுகாதாரம் அல்லது கல்வி போன்ற ஒவ்வொரு விவகாரத்திலும் ஒன்றிய அரசு விதிக்கும் கட்டுப்பாட்டை ஏற்க வேண்டும் என்று அர்த்தமாகிவிடாது.


அவரை பின்பற்றிய கலைஞர் மு. கருணாநிதி, "மாநிலங்களுக்கு சுயாட்சி, ஒன்றியத்தில் கூட்டாட்சி" (Autonomy to the States, Federalism at the Centre) என்பதன் மூலம் இந்தத் தத்துவத்தை முன்வைத்தார். மேலும் 1969-ஆம் ஆண்டில் நீதிபதி P.V. ராஜமன்னார் தலைமையில் ஒன்றிய-மாநில உறவுகள் (independent Committee on Union-State Relations) குறித்த முதல் தன்னாட்சிக் குழுவை நிறுவினார். குழுவின் 1971-ஆம் ஆண்டு அறிக்கை இந்தியாவின் கூட்டாட்சி விவாதத்தில் முக்கியமானதாக மாறியது. பின்னர், வந்த தேசிய ஆணையங்கள் - சர்க்காரியா (1983-88) மற்றும் புஞ்சி (2007-10) - சமநிலையை மீட்டெடுக்க வேண்டியதன் அவசியத்தை அங்கீகரித்தன. இருந்தபோதிலும், கட்டமைப்பு மாற்றங்களை பரிந்துரைக்க தவறி விட்டன.


சரியான நேரம்


இந்தியா இப்போது அரசியலமைப்புச் சட்டத்தில் பிரச்சினைகளைப் புறக்கணிப்பதற்குப் பதிலாக மறுசீரமைப்பை மேற்கொள்ள வேண்டிய ஒரு கட்டத்தில் உள்ளது. இது ஒன்றிய அரசை பலவீனப்படுத்துவது அல்ல. மாறாக மாநிலங்களுக்குத் தேவையான சுதந்திரத்தை வழங்கி, உண்மையான தேசியப் பணிகளில் கவனம் செலுத்துவதே இதன் குறிக்கோள் ஆகும். இந்த மாற்றம் தேசிய ஒற்றுமைக்கு தீங்கு விளைவிக்காது. அதிகாரத்தையும் பொறுப்பையும் இணைப்பதன் மூலம் கூட்டாட்சியை வலுப்படுத்தும்.


இந்த உணர்வில், தமிழ்நாடு அரசு ஏப்ரல் 2025-ல் ஓய்வுபெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி குரியன் ஜோசப்  தலைமையில் ஒன்றிய-மாநில உறவுகள் குறித்த உயர்மட்டக் குழுவை அமைத்தது. இதில் கே. அசோக் வர்தன் ஷெட்டி (ஓய்வுபெற்ற இந்திய ஆட்சிப்பணி அதிகாரி) மற்றும் டாக்டர் எம். நாகநாதன் (முன்னாள் மாநில திட்டக் குழுவின் துணைத் தலைவர்) ஆகியோர் உறுப்பினர்களாக இருந்தனர். ஒரு பாரபட்சமற்ற பயிற்சியாகக் கருதப்பட்ட இந்தக் குழு, தற்போது உள்ள கூட்டாட்சி சவால்கள் குறித்த விரிவான மதிப்பாய்வை மேற்கொண்டது.


பிப்ரவரி 16, 2026 அன்று சமர்ப்பிக்கப்பட்ட அதன் அறிக்கையின் பகுதி-I, ஆளுநர்கள் மற்றும் மொழிக் கொள்கையின் பங்கு முதல் எல்லை நிர்ணயம், தேர்தல்கள், கல்வி, சுகாதாரம் மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி வரையிலான பிரச்சினைகளை சுட்டிக்காட்டியது.


அறிவார்ந்த விவாதத்தைத் தூண்டவும், ஒன்றிய-மாநில உறவில் சமநிலையை மீட்டெடுக்கவும், ஒன்றிய அரசும் கவனம் செலுத்துவதன் மூலம் வலுவாகவும், மாநிலங்கள் நம்பிக்கையின் மூலம் வலுவாகவும் வளரும் ஒரு அரசியலமைப்பு ஒப்பந்தத்தை உருவாக்க உதவுவதற்காகவும் தமிழ்நாடு அரசு இந்த அறிக்கையை பொது வெளியில் பகிர்ந்து கொள்கிறது.


மு.க.ஸ்டாலின், தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஆவார்.


Original article : India’s federalism is in need of a structural reset -M K  Stalin

Share:

வேளாண் பொருட்களின் விலை ஏற்ற இறக்கம் இந்தியாவில் பான உற்பத்தியை (beverage manufacturing) எவ்வாறு மாற்றுகிறது? - பரிதோஷ் லதானி

 ஒழுக்கமான இடர் மேலாண்மை, நெகிழ்வான திட்டமிடல் மற்றும் இராஜதந்திரரீதியில் பல்வகைப்படுத்தல் ஆகியவை இனி தற்காப்பு நடவடிக்கைகள் அல்ல, அவை போட்டித்தன்மையை நிலைநிறுத்துவதற்கு முக்கிய மையமாக உள்ளன.


கடந்த ஒன்பது மாதங்களாக அனைவரும் 'புதிய உலகளாவிய ஒழுங்கு' (new world order) பற்றி கேள்விகள் கேட்டு வருகின்றனர். கடந்த மாதம் டாவோஸில் நடந்த உலகப் பொருளாதார மன்றக் கூட்டத்தில் கனடாவைச் சேர்ந்த மார்க் கார்னி இந்த உலகளாவிய கவலையைப் பற்றிப் பேசினார். சார்லஸ் டார்வின் மற்றும் 18-ம் லூயிஸ் ஆகியோரின் கருத்துக்களின் கலவைக்கு உலகம் திரும்புவதாக அவர் கூறினார்.


தகுதியானவர்கள் மட்டுமே உயிர்வாழும் என்று டார்வின் கூறியிருந்தார். மக்கள் ஒற்றுமையாக இருக்காவிட்டால், அவர்கள் தனித்தனியாக தோல்வியடைவார்கள் என்று 18-ம் லூயிஸ் கூறியிருந்தார்.


இரண்டு கருத்தையும் ஒன்றாக இணைத்து, விதி அடிப்படையிலான உலகளாவிய ஒழுங்கு இப்போது பலவீனமடைந்து வருவதாக அவர் கூறினார். இனிமேல் உலகம் தகுதியானவர்களின் உயிர்வாழ்வு என்ற சூழ்நிலையை நோக்கி நகர்ந்து வருவதாக கார்னி கூறினார். நடுத்தர சக்தி நாடுகள் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறினார். வலுவான சக்திகளிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்.


பெரிய பிரபஞ்ச கேள்விகளுக்கு ஒரு தெளிவான நன்மை உண்டு. பெரிய பிரபஞ்ச வழிகளில் தவிர அவற்றுக்கு பதிலளிக்க வேண்டியதில்லை. இது நிறைய பேருக்கு ஒரு பெரிய உத்வேகத்தை அளிக்கிறது.


ஆனால் யாரும் கேட்காத ஒரு முக்கியமான கேள்வி என்னவென்றால், 75 ஆண்டுகளாக பொருளாதாரம் மிகவும் விரும்பப்படும் கல்வித் துறையாக இருந்து வருகிறது. இது உலகளாவிய சிந்தனை மற்றும் கொள்கையை வழிநடத்தியுள்ளது. இது ஷோலேயில் கப்பரின் பிரபலமான வரியைப் போல ஒரு கூர்மையான கேள்வியை எழுப்புகிறது: "இப்போது உங்களுக்கு என்ன நடக்கும் (ab tera kya hoga, Kaliye)?"


கேள்வி முக்கியமானது, ஏனென்றால் பதில் உலக ஒழுங்கின் அடித்தளத்தை பொருளாதாரமாக நீங்கள் கருதுகிறீர்களா அல்லது அதற்கு நேர்மாறாக, அதாவது பொருளாதாரத்தை உலக ஒழுங்கின் விளைவாகக் கருதுகிறீர்களா என்பதைப் பொறுத்தது. இது ஒரு உன்னதமான கோழி-முட்டை சிக்கலை உருவாக்குகிறது.


இரண்டு எதிரெதிர் அனுமானங்கள்


இவை அனைத்தும் என்ன அனுமானங்கள் மேற்கொள்ளப்படுகின்றன என்பதைப் பொறுத்தது. ஒன்று உலக ஒழுங்கு மாறாது என்று கருதுவது, மற்றொன்று பொருளாதாரம் மாறாது என்று கருதுவது. உங்கள் அரசியலைப் பொறுத்து நீங்கள் உங்கள் விருப்பத்தைத் தேர்ந்தெடுக்கலாம்.


முதல் அனுமானம் என்பது ஒட்டுமொத்த உலக அமைப்பும் அப்படியே இருக்கும் என்பதாகும். காலப்போக்கில் ஆதிக்க சக்திகள் மட்டுமே மாறுகின்றன. முன்பு பிரிட்டன் ஆதிக்கம் செலுத்தியது. இப்போது அமெரிக்கா ஆதிக்கம் செலுத்துகிறது. எதிர்காலத்தில், அது வேறு ஏதாவது நாடாக இருக்கலாம். அது இந்தியாவாகவும் இருக்கலாம்.


இரண்டாவது அனுமானம் முற்றிலும் மார்க்சிய சிந்தனையிலிருந்து வருகிறது. இது "அடிப்படை மற்றும் மேல்கட்டமைப்பு" என்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டது. உலக ஒழுங்கு முக்கியமாக பொருளாதார மற்றும் வணிகக் காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என்று இந்தக் கருத்து கூறுகிறது.


முதல் கருத்தை ஆதரிக்கும் பொருளாதார வல்லுநர்கள் தாராளவாதமும் ஜனநாயகமும், இலாபத்தை அநீதியானதாகக் கருதும் மிக அதிக ஒழுங்குமுறை கொண்ட முதலாளித்துவத்துடன் இணைந்து வரும்போது, சமூக ரீதியில் சிறந்த பலன்களை அளிக்கின்றன என்று கூறுகின்றனர். ஆனால் மார்க்சியக் கருத்தை ஆதரிப்பவர்கள், பொருளாதாரத்திற்கு ஒரேயொரு இலக்கு மட்டுமே இருக்க வேண்டும், அது கட்டுப்பாடற்ற இலாப அதிகரிப்பு என்கின்றனர்.


பொதுவுடைமையான சீனா, முழுமையாக லாபத்தில் கவனம் செலுத்துவதையும், முதலாளித்துவமான ஐரோப்பா, லாபத்தைத் தவிர மற்ற அனைத்திலும் கவனம் செலுத்துவதையும் நீங்கள் காணும் வரை இது எதிர்மறையாகத் தெரிகிறது. மீண்டும், மக்கள் எந்த அணுகுமுறையை விரும்புகிறார்கள் என்பதைத் தீர்மானிக்கலாம்.


இந்த பெரிய சூழலில், பொருளாதாரம் யாருக்கு சேவை செய்கிறது என்பதைத் தேர்ந்தெடுக்க வேண்டும். அது அரசாங்கத்திற்கு சேவை செய்கிறதா அல்லது சந்தைக்கு சேவை செய்கிறதா என்பதை அது தீர்மானிக்க வேண்டும். 1945-க்குப் பிறகு மேற்கத்திய பொருளாதாரம் சந்தைகளைப் பற்றி மட்டுமே பேசியது. இந்தியாவில் பொருளாதாரம் படித்த இந்தியர்களுக்கு, கோட்பாட்டில் கற்றுக்கொண்டது உண்மையில் அவர்கள் பார்த்ததிலிருந்து மிகவும் வித்தியாசமானது. மேற்கத்திய பொருளாதாரமும் இந்திய பொருளாதாரமும் முற்றிலும் எதிர்மாறாகத் தோன்றின.


உலகம் முழுவதும் இப்போது இந்த வேறுபாட்டை எதிர்கொள்கிறது. சந்தைப் பொருளாதாரத்தின் அறிவுசார் ஒப்புதல் மேற்கத்தியமற்ற பொருளாதாரங்களுக்கு நகர்ந்துள்ளது. அதே நேரத்தில், பல மேற்கத்திய பொருளாதார வல்லுநர்கள் சந்தை அல்லாத கருத்துக்களை நோக்கி நகர்ந்துள்ளனர். இந்தக் கருத்துக்கள் அரசுக்கு ஒரு பெரிய பங்கை ஆதரிக்கின்றன. கடந்த 25 ஆண்டுகளில் வெளியிடப்பட்ட ஆராய்ச்சிகளில் இந்தப் போக்கு காணப்படுகிறது. இது அரசாங்கக் கொள்கைகளில் மட்டும் காணப்படவில்லை.


எளிமையான சொற்களில், மேற்கத்திய நாடுகள் இடதுபுறம் அதிகமாக நகர்ந்துள்ளன. உலகின் பிற பகுதிகள் வலதுபுறம் அதிகமாக நகர்ந்துள்ளன. எதிர்பார்க்கக்கூடிய விளைவு என்னவென்றால், மேற்கத்திய நாடுகள் அதன் பொருளாதார ஆதிக்கத்தில் சிலவற்றை இழந்துவிட்டன. இதற்கிடையில், பிற பகுதிகள் பலம் பெற்றுள்ளன. மேற்கத்திய நாடுகளில், சமத்துவம்தான் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது. பல இடங்களில், செயல்திறனுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது.


பொருளாதாரத்தின் குழப்பம்


இந்த சூழ்நிலையில், பொருளாதார வல்லுநர்கள் ஒரு முக்கியக் கேள்வியை எதிர்கொள்கின்றனர். அவர்கள் செயல்முறைகளில் கவனம் செலுத்த வேண்டுமா அல்லது விளைவுகளில் கவனம் செலுத்த வேண்டுமா? பொருளாதாரம் மீண்டும் எவ்வாறு பயனுள்ளதாக மாறும் என்பதையும் அவர்கள் கேட்க வேண்டும்.


'பெரிய தரவு' என்று அழைக்கப்படுவது பொருளாதார வல்லுநர்களின் கவனத்தை ஈர்க்கும் வரை, அவர்கள் பெரும்பாலும் செயல்முறைகளில் கவனம் செலுத்தி வந்தனர். அடிப்படையில், ஒரு பொருளாதாரம் சூழ்நிலை A-லிருந்து சூழ்நிலை B-க்கு எவ்வாறு நகர்கிறது என்பதைப் புரிந்துகொள்ள அவர்கள் முயன்றனர். இது நுகர்வோர், நிறுவனங்கள், சந்தைகள் மற்றும் அரசாங்கங்களின் நடத்தை பற்றிய ஊகங்களை உள்ளடக்கியது. அமர்த்தியா சென் ஒருமுறை குறிப்பிட்டது போல், இந்தப் பணியின் பெரும்பகுதி புதிர்களைத் தீர்ப்பது போன்றது.


இவை அனைத்தும், பகுத்தறிவு விதிகளின் தொகுப்பு, உலகளாவிய ஒழுங்கு பொருளாதார செயல்பாட்டை ஆதரிக்கும் என்ற அனுமானத்தின் அடிப்படையில் அமைந்தன. இப்போது, ​​இந்த அமைப்பு சிதைந்துவிட்டதால், எதிர்காலத்தில் பொருளாதாரத்தை எது இயக்கும்?


தரவு மற்றும் வழிமுறைமயமாக்கலின் கலவையில் பதில் இருக்கலாம். ஒரு சில பொருளாதார வல்லுநர்கள் ஏற்கனவே செயல்முறைகளைப் பற்றி சிந்திப்பதை விட்டுவிட்டு விளைவுகளை அடைவதற்கான பாதையில் செல்லத் தொடங்கியுள்ளனர். ஒருவேளை பொருளாதாரம் புதிர்களைத் தீர்ப்பது பற்றியதாக இருக்காது. மேலும் மனிதர்களைவிட இயந்திரங்களால் உருவாக்கப்பட்ட விதிகளால் விரும்பத்தக்க விளைவுகளைப் பெறுவது பற்றியதாக மாறும். இயந்திரங்கள் மனிதர்களைவிட வடிவங்களைக் கண்டறிவதில் எண்ணற்றளவில் சிறந்தவை என்பதால், அது ஏற்கனவே சிறந்த முடிவுகளைத் தருகிறது.


மற்றொரு சிக்கல் என்னவென்றால், பொருளாதாரம் சமநிலை மற்றும் நிலையான அமைப்புகள் என்ற கருத்தில் அதிகமாக கவனம் செலுத்தியது. ஆனால், அதற்கு நிலையான விதிகள் மற்றும் குறைந்த நிச்சயமற்ற தன்மை தேவை. இவை இரண்டும் இப்போது நிலையானதாகவோ, சாத்தியமாகவோ தெரியவில்லை. எனவே பொருளாதாரத்தின் மற்றொரு முக்கிய அடிப்படை, சமநிலையின் மீதான நம்பிக்கை மற்றும் அதை அடைவதற்கான முயற்சி.


பாக்ஸ் பிரிட்டானிக்கா (Pax Britannica) உருவான 1815 முதல், உலகிற்கு இது முற்றிலும் புதிய சூழ்நிலை ஆகும். அதற்கு முன்பு பொருளாதாரம் ஒரு முழுமையான கல்வி நோக்கமாக இல்லை. எதிர்காலத்தில், அது மீண்டும் ஒரு முழுமையான கல்வித் துறையாக இருப்பதை நிறுத்தக்கூடும்.


original article : How agri-commodity price volatility is transforming beverage manufacturing in India?. -Paritosh Ladhani

Share:

சர்வதேச விண்வெளி நிலையத்தின் புகைப்படங்களை எடுக்கும் இந்திய செயற்கைக்கோள் ஏன் ஒரு தொழில்நுட்ப சாதனையாகக் கருதப்படுகிறது? -ரிது சர்மா

 விண்வெளியில் புகைப்படம் எடுப்பதில் சிரமங்கள் எழுகின்றன. இந்த சவால்களை சமாளிப்பது வலுவான தொழில்நுட்ப திறன்களைக் காட்டுகிறது. மேலும், இந்த திறன்களை கண்காணிப்பு மற்றும் பிற விண்வெளி பாதுகாப்பு பணிகளுக்கும் பயன்படுத்தலாம்.


இந்த மாத தொடக்கத்தில், அகமதாபாத்தை தளமாகக் கொண்ட விண்வெளி புதிய தொழில்துறை நிறுவனமான அஜிஸ்டா ஸ்பேஸ், அதன் செயற்கைக்கோள்-சுற்றுப்பாதையில், அஜிஸ்டா ஃபர்ஸ்ட் ரன்னர் (Azista First Runner (AFR), சர்வதேச விண்வெளி நிலையத்தின் (International Space Station (ISS)) உயர் தெளிவுத்திறன் படங்களை ஏறக்குறைய 300 கிமீ தூரத்தில் இருந்து படம்பிடித்தது.


இந்தியாவின் நவீன விண்வெளிப் பாதுகாப்பு - ஆப்டிகல் விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு (Space Situational Awareness (SSA)) முக்கியமான களத்தில் இந்தியாவின் நுழைவாக இந்த வளர்ச்சி அறிவிக்கப்படுகிறது. பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு பயன்பாடுகளுக்கு எலக்ட்ரோ-ஆப்டிகல் சேவைகளை வழங்கும் இந்தியாவில் தனியார் மூலம் உருவாக்கப்பட்ட முதல் செயற்கைக்கோள் ஆகும். இது ஜூன் 2023-ல் எலோன் மஸ்க்கின் SpaceX-க்குச் சொந்தமான 9 ராக்கெட்டில் ஏவப்பட்டது.


இந்தியாவின் பெரிய தொழில்நுட்ப திறன்களுக்கு AFR-ன் புகைப்படங்கள் ஏன் முக்கியம் என்பதை  இங்கே தெரிந்து கொள்ளலாம்.


சர்வதேச விண்வெளி நிலையத்தின் International Space Station (ISS)) படம்பிடித்தல்


விண்வெளியில் புகைப்படங்களை எடுப்பதில் வெளிப்படையான சிரமங்கள் எழுகின்றன. கடந்து செல்லும் பொருட்களின் அதிக வேகம், கேமராக்கள் பூமியிலிருந்து ஏவப்படுவதை உறுதி செய்தல், வெளிச்சத்தில் உள்ள வேறுபாடுகள் போன்ற  சிரமங்கள் எழுகின்றன.


நாடுகளுக்கு இடையே ஆராய்ச்சி மற்றும் ஒத்துழைப்புக்கான தளமாக சர்வதேச விண்வெளி நிலையம் செயல்படுகிறது. இது பூமியை சராசரியாக 400 கிமீ உயரத்தில் சுற்றி வருகிறது மற்றும் வினாடிக்கு 7.6 கிமீ வேகத்தில் பயணிக்கிறது. அதே நேரத்தில் அஜிஸ்டா ஃபர்ஸ்ட் ரன்னர் (AFR) வினாடிக்கு 7 கிமீ வேகத்தில் வேறுபட்ட சுற்றுப்பாதையில் நகர்கிறது. தெளிவான மற்றும் பயன்படுத்தக்கூடிய படத்தைப் பெற, பொருளின் பாதையை சரியாகக் கணிப்பது, அதை துல்லியமாகக் கண்காணித்து சுட்டிக்காட்டுவது, சூரிய ஒளிக்கு ஏற்ப சரிசெய்வது, படத்தை நிலையாக வைத்திருப்பது மற்றும் படத்தைப் பிடித்த பிறகு மேம்பட்ட செயலாக்க முறைகளைப் பயன்படுத்துவது முக்கியம்.


அஜிஸ்டா ஃபர்ஸ்ட் ரன்னர் (AFR) 2.2 மீட்டர் தெளிவுத்திறனில் சர்வதேச விண்வெளி நிலையத்தை படம்பிடித்தது. மேலும், சுமைகள் இன்னும் சிறந்த படங்களை வழங்க வடிவமைக்கப்பட்டுள்ளன என்று அதன் பின்னால் உள்ள நிறுவனம் கூறுகிறது. Azista Space-ன் இயக்குனர் சுனில் இந்தூர்தி, இந்த செயல்விளக்கம் மூன்று முக்கிய SSA திறன்களைக் காட்டுகிறது என்று கூறினார்: அதன் படி, சுற்றுப்பாதையில் ஒரு பொருளைக் கண்டறிதல், அதன் இயக்கத்தைத் துல்லியமாகக் கண்காணித்தல் மற்றும் அதை பார்வைக்கு ஆய்வு செய்து அடையாளம் காண்பதன் மூலம் வகைப்படுத்தலாம். மூன்றாவது கூறு, குணாதிசயம், ஆப்டிகல் SSA ராஜதந்திர ரீதியாக முக்கியத்துவம் பெறும்" என்று அவர் கூறினார்.


விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு தேவை


விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு (Space Situational Awareness (SSA)) என்பது பூமியின் சுற்றுப்பாதையில் உள்ள மற்றும் அதைச் சுற்றியுள்ள பொருட்களின் நடத்தை பற்றிய அறிவைக் குறிக்கிறது. இதில் செயலில் உள்ள செயற்கைக்கோள்கள் மற்றும் விண்வெளியில் உள்ள பொருட்கள் அடங்கும்.


நவீன விண்வெளி பாதுகாப்பு என்பது மோதல்களைத் தடுப்பது மட்டுமல்ல. இது விண்வெளி நிலையத்தின் செயல்பாடுகளைப் புரிந்துகொள்வது பற்றியது. ஒரு செயற்கைக்கோள் நிலையானதா அல்லது சரிகிறதா? அது புதிய இணைப்புகளைப் பயன்படுத்தியுள்ளதா? அது எதிர்பாராத விதமாக பிரச்னை கூறியதாக உள்ளதா? அது அருகில் செயல்பாடுகளை நடத்துகிறதா? வடிவங்களை பகுப்பாய்வு செய்யவும், நோக்குநிலையைக் கண்டறியவும், சிக்கல்களைக் கண்டறியவும் ஆப்டிகல்  சுமைகள் உதவுகின்றன என்று இந்தூர்டி கூறினார். இது விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வை வெறும் கவனிப்பதிலிருந்து தகவலறிந்த முடிவுகளை எடுப்பதற்கு மாற்றுகிறது.


விண்வெளியை " போட்டியிடும் களம்" என்று அழைத்த இந்துர்டி, உள்நாட்டு ஆப்டிகல் விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு திறன் ராஜதந்திர சார்புநிலையைக் குறைத்து "இறையாண்மை சார்ந்த முடிவெடுப்பதை" அதிகரிக்கிறது என்று வாதிட்டார். ரஷ்யா, சீனா மற்றும் அமெரிக்காவை அவர் சுட்டிக்காட்டினார். அவை டாக்கிங் விண்கலம் போன்ற சந்திப்பு மற்றும் அருகாமை செயல்பாடுகள் (Rendezvous and Proximity Operations (RPO)) திறன்களைக் காட்டியுள்ளன. இத்தகைய பணிகளில் நிபுணத்துவம் விண்வெளி சொத்துக்களைப் பாதுகாக்கவும் நிலைநிறுத்தவும் உதவுகிறது என்று இந்துர்டி கூறுகிறார். மேலும், இது "தொடர்ச்சியான கண்காணிப்பு, விரைவான ஒழுங்கின்மை கண்டறிதல் மற்றும் சுயாதீன சரிபார்ப்பு ஆகியவற்றைக் கோருகிறது. வெளிநாட்டு கண்காணிப்பு வலையமைப்புகளை மட்டும் நம்பி இருக்காது என்று  கூறுகிறார்.


விண்வெளி குப்பைகள் அல்லது செயற்கைக்கோள்களைக் கண்காணிப்பது போன்ற பூமி அல்லாத படத்தை எடுத்தல் (Non-Earth Imaging (NEI)) பணிகளுக்காக வடிவமைக்கப்பட்ட அதிக திறன் கொண்ட-துல்லிய ஆப்டிகல் சுமைகளை - ஏவுகலங்கள் மூலம் விண்வெளிக்கு கொண்டு செல்லப்படும் கருவிகளைப் - பயன்படுத்தி விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு பணிகளுக்கு உதவ இந்திய நிறுவனங்களுடன் கூட்டு சேர அஜிஸ்டா திட்டமிட்டுள்ளது.


கூடுதலாக, இது பல பாதுகாப்பு, பொதுமக்கள் மற்றும் வணிக ரீதியான தாக்கங்களைக் கொண்டுள்ளது. "Starlink நிறுவனம் எலான் மஸ்க்கிற்குச் சொந்தமானது மற்றும் OneWeb  போன்ற மெகா-விண்மீன் கூட்டங்களால், மோதல் அபாயங்கள் அதிகரித்து வருகின்றன. மேலும், சுற்றுப்பாதை நெரிசல் அதிகரித்து வருகிறது. காப்பீட்டு சந்தைகள் சிறந்த கண்காணிப்பைக் கோருகின்றன. ஆபரேட்டர்களுக்கு சரிபார்ப்பு சேவைகள் தேவைப்படுகின்றன. இங்கே, விண்வெளி சூழ்நிலை விழிப்புணர்வு திறன்கள் விண்வெளி போக்குவரத்து மேலாண்மை, மோதல் தவிர்ப்பு, குப்பைகள் கண்காணிப்பு, காப்பீட்டு ஆபத்து மாதிரி மற்றும் செயற்கைக்கோள் சுகாதார சரிபார்ப்பை ஆதரிக்கின்றன என்று அவர் தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறினார்.


ISRO-SAC வழிகாட்டுதல்


கடந்த மாதம், அகமதாபாத் அருகே உள்ள சனந்தில் இந்தியாவின் முதல் தனியார் துறை எலக்ட்ரோ-ஆப்டிகல் சுமை தாங்கும் தொழிற்சாலைக்கு அசிஸ்டா ஸ்பேஸ் அடிக்கல் நாட்டியது. இந்த வசதியை அமைப்பதற்காக குஜராத் அரசாங்கத்துடன் ரூ.500 கோடி புரிந்துணர்வு ஒப்பந்தத்திலும் நிறுவனம் கையெழுத்திட்டது. அங்கு சுமைகள் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு, ஒன்று சேர்க்கப்பட்டு, உள்நாட்டு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி சோதிக்கப்படும்.


அஜிஸ்டாவின் நிர்வாக இயக்குநர் M. ஸ்ரீனிவாஸ் ரெட்டி கூறுகையில், சனந்த் வசதி உள்நாட்டில் உருவாக்கப்பட்ட ஆப்டிகல் பேலோடுகளை உருவாக்கும் என்றும், ஒவ்வொரு ஆண்டும் 30 உயர் தெளிவுத்திறன் கொண்ட இமேஜிங் பேலோடுகளை (imaging payloads) உற்பத்தி செய்வதை நோக்கமாகக் கொண்டிருக்கும் என்றும் கூறினார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் மற்றும் அதன் விண்வெளி பயன்பாட்டு மையத்தின் நிபுணர்கள் நிறுவனம் தொடக்கத்திலிருந்தே அதன் திறன்களை வளர்த்துக் கொள்ள உதவியதாகவும் அவர் கூறினார்.


2027-ஆம் ஆண்டுக்குள், ஒரு முழு நாட்டிற்கான படமாக்கலை ஒரே சுற்றுப்பாதையில் நடத்தக்கூடிய வகையில், அதன் திறன்களை மேம்படுத்த நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், ஆப்டிகல் சுமை 500 கிமீ அகலத்தைக் கொண்டிருக்கும்.


கடந்த ஏப்ரல் மாதம், உள்நாட்டு விண்வெளி தொழில்நுட்பத் துறையை மேம்படுத்துவதற்காக IN-SPACE, ISRO மற்றும் விண்வெளித் துறையுடன் இணைந்து செயல்பட குஜராத் அதன் விண்வெளி தொழில்நுட்பக் கொள்கை 2025-2030-ஐ அறிவித்தது.


குஜராத் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் அர்ஜுன் மோத்வாடியா தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம், இந்தக் கொள்கை ரூ.5 கோடி வரையிலான செயற்கைக்கோள் ஏவுதலுக்கு 25% மானியம் வழங்குகிறது. மேலும், இந்திய காப்புரிமை தாக்கல்களுக்கு (ரூ. 50 லட்சம் வரை) 30% திருப்பிச் செலுத்தும் சலுகை வழங்கப்படலாம் என்று கூறினார்.


original article : Why is an Indian satellite capturing photos of the ISS being seen as a technical milestone? -Ritu Sharma

Share: