இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா வழித்தடத்தில் (IMEC) காசா போர் வெளிப்படுத்தியுள்ள விடுபட்ட இணைப்புகள் -ராஜீவ் அகர்வால்

 பாரசீக வளைகுடாவில் எந்தவொரு மோதல் சூழ்நிலையும் கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது. ஆனால், அதைத் தீர்க்க தீர்வுகள் உள்ளன.


மே 13, 2024 அன்று, இந்தியாவும் ஈரானும் சபஹார் துறைமுகத்தை (Chabahar Port) இயக்குவதற்கான 10 ஆண்டுகால இருதரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன. இந்தியாவின் துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் சர்பானந்தா சோனோவால் முன்னிலையில், இந்தியன் போர்ட்ஸ் குளோபல் லிமிடெட் (Indian Ports Global Limited) மற்றும் ஈரானின் துறைமுகம் மற்றும் கடல்சார் அமைப்பு இடையே இந்த ஒப்பந்தம் ஏற்பட்டது. மேலும், இந்தியாவை ஈரானுடன் இணைக்கும் பாலம் என்பதை விட இந்த ஒப்பந்தமும் சபஹார் துறைமுகமும் முக்கியமானது என்று சோனோவால் கூறினார். ஆப்கானிஸ்தான் மற்றும் மத்திய ஆசிய நாடுகளுடன் இந்தியாவை இணைக்கும் முக்கிய பொருளாதார இணைப்புகளாக இந்த ஒப்பந்தம் உள்ளன.


ஆனால் இதற்குமுன், இதேபோன்ற மற்றும் சமமான முக்கியத்துவம் வாய்ந்த இணைப்புத் திட்டம், இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடத்தில் (India-Middle East-Europe Economic Corridor (IMEC)), செப்டம்பர் 9, 2023 அன்று புதுதில்லியில் நடந்த G-20 உச்சிமாநாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்தால் கையெழுத்திட்டு முன்மொழியப்பட்டது. இதற்கு, ஐரோப்பிய ஒன்றியம், பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, சவுதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் (United Arab Emirates (UAE)) மற்றும் அமெரிக்கா போன்ற நாடுகள் கையெழுத்திட்டன. உலகளாவிய உள்கட்டமைப்பு மற்றும் முதலீட்டுக்கான கூட்டாண்மையின்கீழ் (Partnership for Global Infrastructure and Investment (PGII)) உருவாக்கப்பட்ட இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா வழித்தடம் (IMEC), ஆசியா, அரேபிய வளைகுடா மற்றும் ஐரோப்பா இடையேயான இணைப்பு மற்றும் பொருளாதார உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் பொருளாதார வளர்ச்சியை அதிகரிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.


பெல்ட் அண்ட் ரோடு முன்னெடுப்புக்கு (Belt and Road Initiative (BRI)) எதிர்வினையாக


இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா வழித்தடமானது (IMEC) இந்தியாவை அரேபிய வளைகுடாவுடன் இணைப்பது மற்றும் வளைகுடாவை ஐரோப்பாவுடன் இணைப்பது போன்ற இரண்டு வழிகளைக் கொண்டுள்ளது. இரயில்வே, மின்சாரம் மற்றும் டிஜிட்டல் இணைப்புகளுக்கான கேபிள்கள் மற்றும் சுத்தமான ஹைட்ரஜன் ஏற்றுமதிக்கான குழாய்கள் உள்ளிட்ட பொருட்கள் மற்றும் சேவைகளுக்கான நம்பகமான மற்றும் செலவு குறைந்த போக்குவரத்து வலையமைப்பை உருவாக்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்தத் திட்டத்தில் கண்ட்லா (Kandla), மும்பை (Mumbai) மற்றும் முந்த்ரா (Mundra) போன்ற இந்திய துறைமுகங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள துறைமுகங்களுடன் இணைப்பது, பின்னர் சவுதி அரேபியா, ஜோர்டான் மற்றும் இஸ்ரேல் வழியாக ஐரோப்பாவிற்கு ரயில் மற்றும் சாலை வழியாக பொருட்களை கொண்டு வருவது ஆகியவை அடங்கும். இந்தத் திட்டத்தில் 4,800 கிலோமீட்டர் வழித்தடங்கள் பிராந்திய விநியோகச் சங்கிலிகளை பாதுகாப்பதையும் (secure regional supply chains), வர்த்தக அணுகலை அதிகரிப்பதையும் (increase trade accessibility), பிராந்தியங்கள் முழுவதும் வர்த்தக வசதிகளை மேம்படுத்துவதையும் (improve trade facilitation across regions) நோக்கமாகக் கொண்டுள்ளது.


தற்போது, இந்தியாவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையிலான பெரும்பாலான வர்த்தகம் சூயஸ் கால்வாய் (Suez Canal) வழியாகச் செல்கிறது. ஏனெனில், பாகிஸ்தான் வர்த்தகத்திற்கான தரைவழிப் பாதைகளைத் தடுத்துள்ளது. இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா வழித்தடம் (IMEC) இந்த சவாலை எதிர்கொள்ளும். இந்தியாவிலிருந்து ஐரோப்பாவிற்கு பொருட்களைக் கொண்டு செல்வதற்கான போக்குவரத்திற்கான நேரம், தூரம் மற்றும் செலவுகளை கணிசமாகக் குறைக்கும். இது போக்குவரத்து நேரத்தை 40% மற்றும் செலவுகளை 30% குறைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடுதலாக, இது பிராந்தியத்தில் சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்முயற்சிக்கு (Belt and Road Initiative (BRI)) ஒரு சிறந்த பதிலாகக் காணப்படுகிறது. இதில், அமெரிக்கா ஒரு முக்கிய ஆதரவாளராக உள்ளது.


காஸா போரின் தாக்கம்


இந்த திட்டம் அறிவிக்கப்பட்ட சிறிது நேரத்திலேயே அக்டோபர் 7 அன்று காஸாவில் போர் தொடங்கியதால், அது நிறுத்தப்பட்டது. மே 12ஆம் தேதி நேர்காணலில், வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், மேற்கு ஆசியாவின் நிலைமை காரணமாக இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா வழித்தடம் (IMEC) திட்டத்தில் தாமதம் குறித்த கவலைகளை ஒப்புக் கொண்டார். போருக்குப் பிறகு இந்த திட்டத்தின் பணிகள் மீண்டும் தொடங்கும் என்று நம்பிக்கை கொண்டுள்ளார்.


இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா வழித்தடத்திற்கு (IMEC) சில பெரிய பிரச்சனைகள் இருப்பதை காசா போர் காட்டியது. போரின் போது, யேமனில் உள்ள ஹவுதிகள் இஸ்ரேல் மற்றும் மேற்கில் உள்ள அதன் நட்பு நாடுகளின் கப்பல்கள் செங்கடலுக்குள் நுழைவதைத் தடுத்தனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவின் கடற்படை முயற்சிகள் இருந்தபோதிலும், ஹவுதிகள் இன்னும் இந்தக் கப்பல்களை இலக்காகக் கொண்டுள்ளனர். இதன் விளைவாக, இஸ்ரேலையும் அதன் நட்பு நாடுகளையும் தென்னாப்பிரிக்காவின் நன்னம்பிக்கை முனையைச் (Cape of Good Hope) சுற்றி நீண்டபாதையைத் தேர்த்தெடுக்கக் கட்டாயப்படுத்தியது. இது கப்பல் போக்குவரத்திற்கான நேரம் மற்றும் காப்பீட்டுச் செலவுகளை அதிகரித்துள்ளது.


அதே நேரத்தில், இந்தியா உட்பட உலகின் மற்ற பகுதிகளுக்கு கச்சா எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுவை அனுப்புவதற்கான ஒரு முக்கிய பாதையான வடக்கில் உள்ள ஹோர்முஸ் ஜலசந்தியை (Strait of Hormuz) மூடுவதாக ஈரான் அச்சுறுத்தியுள்ளது. இந்த அச்சுறுத்தல் 2019ஆம் ஆண்டில் பாரசீக வளைகுடா நெருக்கடியின்போது இதேபோன்ற சூழ்நிலையை எதிரொலிக்கிறது. ஈரான் தனது பிராந்தியத்தில் அமெரிக்க ஆளில்லா விமானத்தை (U.S. drone) சுட்டு வீழ்த்தியதால் தூண்டப்பட்டது. ஜூன் 21 அன்று திட்டமிடப்பட்ட ஈரானுக்கு எதிரான இராணுவத் தாக்குதல்களுக்கு அமெரிக்க ஜனாதிபதி உத்தரவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. ஆனால் பின்னர் தனது முடிவை மாற்றிக் கொண்டார்.


இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) என்ன வித்தியாசத்தை ஏற்படுத்தும்?


இந்த நேரத்தில், ஈரான் பலமுறை பாரசீக வளைகுடா மற்றும் ஹோர்முஸ் ஜலசந்தியில் (Strait of Hormuz) கப்பல்களை பலமுறை இடைநிறுத்தியது. இது, இந்திய கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, பாரசீக வளைகுடாவில் இந்தியக் கொடியேற்றப்பட்ட கப்பல்களில் ஆயுதமேந்திய பாதுகாப்புக் குழுக்களுடன் இந்திய கடற்படை 'சங்கல்ப் திட்டத்தைத்' (Operation Sankalp) தொடங்கியது. காசா போரைப் பொறுத்தவரை, இஸ்ரேலின் முக்கிய துறைமுகங்களான எய்லட் (Eilat) மற்றும் ஹைஃபா (Haifa), வர்த்தக இடையூறு (disruption in trade) மற்றும் ஹமாஸ் மற்றும் அதன் நட்பு நாடுகளின் தாக்குதல்களால் கணிசமான இழப்புகளைச் சந்தித்தன. ஜனவரி 2023-ல், இந்தியாவில் இருந்து அதானி குழுமம் ஹைஃபா துறைமுகத்தை வாங்கியது. அதை பெரிதாக்கவும் அதிகக் கப்பல்களை கையாளவும் திட்டமிட்டனர். ஆனால், காஸா போர் காரணமாக, அவர்களின் திட்டங்கள் தற்போது நிறுத்தப்பட்டுள்ளன.


ஓமன் மற்றும் எகிப்து குறித்து 


இந்தியாவுக்குச் செல்லும் கப்பல்களுக்கு ஐக்கிய அரபு எமிரேட்ஸில் உள்ள புஜைரா (Fujairah) மற்றும் ஜெபல் அலி (Jebel Ali) போன்ற துறைமுகங்களைப் பயன்படுத்த இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) திட்டமிட்டுள்ளது. இருப்பினும், இந்த துறைமுகங்கள் அனைத்தும் பாரசீக வளைகுடாவில் உள்ளன. இதனால், அங்கு ஏற்படும் மோதல்களால் பாதிக்கப்படக்கூடியவை.


இந்த அச்சுறுத்தலுக்கு, ஓமன் ஒரு தீர்வை வழங்குகிறது. பாரசீக வளைகுடாவின் நேரடி அச்சுறுத்தல்களிலிருந்து விலகி, அதன் துறைமுகங்கள் அரேபிய கடலில் திறக்கின்றன. ஓமன் இந்திய துறைமுகங்களுக்கு மிக நெருக்கமான மற்றும் நேரடியான பாதையை வழங்குகிறது. வரலாற்று ரீதியாக, ஓமனும் இந்தியாவும் 'தோவ்ஸ்' என்று அழைக்கப்படும் சிறிய படகுகளைப் பயன்படுத்தி வர்த்தகம் செய்துள்ளன. மேலும், ஓமன் பிராந்தியத்தில் ஒரு நல்ல அரசியல் நட்பு நாடாக உள்ளது. இஸ்ரேல் உட்பட அனைவருடனும் நல்லுறவைக் கொண்டுள்ளது.


மேற்கில், இஸ்ரேலிய துறைமுகங்களை மட்டுமே நம்புவதற்குப் பதிலாக, இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) எகிப்து வழியாக அதன் முக்கிய மத்தியதரைக் கடல் துறைமுகங்களில் ஒன்றை அடைய வேண்டும். இது ஐரோப்பியத் துறைமுகங்களுக்குப் பாதுகாப்பான பாதையை உருவாக்குகிறது. எகிப்தானது, இப்பிராந்தியத்தில் ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது மற்றும் அதன் ஈடுபாடு பிராந்தியத்தில் செயல்பாட்டை சமன் செய்கிறது. ஓமனைப் போலவே, எகிப்தும் அண்டை நாடுகள் மற்றும் ஐரோப்பா, இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுடன் நல்ல உறவுகளைக் கொண்டுள்ளது. எகிப்து இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்திலிருந்து (IMEC) விலக்கப்படுவது குறித்து கவலை தெரிவித்திருந்தது. எனவே, இந்த நீட்டிப்பு அரசியல் மற்றும் பொருளாதார பரிசீலனைகளை நிவர்த்தி செய்கிறது. கிழக்கில் ஓமன் மற்றும் மேற்கில் எகிப்துடன், இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) மோதல்களிலிருந்து இடையூறுகளுக்குக் குறைவாக பாதிக்கப்படக்கூடியதாகிறது. இது இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடத்தின் (IMEC) தற்போதைய கட்டமைப்பில் உள்ள இடைவெளிகளை நிரப்புவதற்கு முக்கியமானதாகிறது.


இந்தியா-மத்தியகிழக்கு-ஐரோப்பா பொருளாதார வழித்தடம் (IMEC) ஒரு புதுமையான யோசனையாகும். ஆபிரகாம் உடன்படிக்கையில் (Abraham Accords), மேற்கு ஆசியாவில் உள்ள நாடுகள் நன்றாகப் பழகத் தொடங்கியதால் இது நடக்கிறது. இந்த முன்னெடுப்பானது பிராந்தியத்தில் உள்ள நாடுகள் ஒன்றிணைந்து செயல்படவும், மோதல்களால் ஏற்படும் இணைப்பில் உள்ள சிக்கல்களிலிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் உதவும். இது சீனாவின் பெல்ட் மற்றும் சாலை முன்னெடுப்புடன் (BRI) போட்டியிடுவது மட்டுமல்ல, இது பிராந்தியத்தை வலுவாகவும் மேலும் இணைக்கப்பட்டதாகவும் மாற்றுவதாகும்.


ஓய்வு பெற்ற கர்னல் ராஜீவ் அகர்வால், புதுதில்லியில் உள்ள Manohar Parrikar Institute for Defence Studies and Analyses (MP-IDSA)-ல் உதவி இயக்குநராக உள்ளார்.




Original article:

Share:

குறைந்த வாக்குப்பதிவு நிலையை ஆராய்தல் -அடானோ விஸ்வாஸ்

 விரிவான வாக்காளர் வாக்குப்பதிவு தரவுகளின் ஆய்வு பல பரிமாணங்களாக இருக்க வேண்டும். 


இந்தியாவில் நடந்து வரும் 2024 மக்களவை தேர்தலின் முதற்கட்ட வாக்குப்பதிவில் குறைந்த அளவு வாக்குகள் பதிவாகியுள்ளன. இது ஒரு குறிப்பிடத்தக்க போக்கைக் காட்டுகிறது.  இதன் மூலம் யார் பயனடைவார்கள்?


1957 முதல் 2019-வரை நடந்த மக்களவை தேர்தல்களில் ஆறு முறை வாக்குப்பதிவு  சதவீதம்  குறைந்துள்ளது. வாக்குப்பதிவு அதிகரித்த போது, ​​ஆட்சியில் இருந்தவர்கள் பத்தில் ஆறில் முறை வெற்றி பெற்று, நான்கு முறை தோல்வியடைந்துள்ளனர். வாக்குப்பதிவு குறைந்தபோது, ​​ஆறு தேர்தல்களில் நான்கு முறை வெற்றி பெற்று, இரண்டு முறை தோல்வியடைந்தனர். வாக்கு எண்ணிக்கையில் ஏற்படும் மாற்றங்கள் ஆட்சியில் இருப்பவர்களுக்கு  சாதகமாகவோ அல்லது எதிராகவோ இருக்காது என்று இந்தத் தரவு சுட்டிக் காட்டுகிறது. இருப்பினும், விரிவான வாக்காளர் வாக்குப்பதிவுத் தரவை பகுப்பாய்வு செய்வதற்குப் பல பரிமாண அணுகுமுறை தேவைப்படுகிறது.


பாரம்பரியமாக, இந்திய தேர்தல்களில் அதிக வாக்குப்பதிவு ஆட்சியில்  இருப்பவர்களுக்கு எதிராக முடிவு அமையக்கூடும் என்று நம்பப்படுகிறது. ஆனாலும், 2014 மற்றும் 2019-ஆம் ஆண்டுகளில் தேர்தலில் அலை வீசியது இந்த முறை, முன்பு போல் அலை இல்லையென்றால் ஆட்சியில் இருப்பவர்களுக்கு ஏதேனும் பாதகம் ஏற்படுமா?


அமெரிக்கா மீதான நம்பிக்கை


பல நாடுகளில், பாரம்பரிய அரசியல் அறிவு அனைவருக்கும் உள்ளது. உதாரணமாக, அமெரிக்காவில், அதிக வாக்குப்பதிவு ஜனநாயகக் கட்சியினருக்கு உதவும் என்று பலர் நம்புகிறார்கள். 2016 தேர்தல்களில், வாக்காளர் வாக்குப்பதிவு சற்று அதிகமாக இருந்திருந்தால், டொனால்ட் டிரம்ப் தோல்வியடைந்திருக்கலாம். ஏனெனில் அதிக ஜனநாயகக் கட்சி வாக்குகளளால் பென்சில்வேனியா, மிச்சிகன் மற்றும் விஸ்கான்சின் ஆகிய பகுதிகளில் முடிவு மாறியிருக்கக்கூடும் என்று சிலர் வாதிட்டனர்.


இருப்பினும், "The Turnout Myth: Voting Rates and Partisan Outcomes in American National Elections" (2020) என்ற புத்தகத்தின் ஆசிரியர்களான டாரன் ஆர். ஷா மற்றும் ஜான் ஆர். பெட்ரோசிக் ஆகியோரின் கூற்றுப்படி, ஹிலாரி கிளிண்டனின் ஆதரவு வாக்காளர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் பெரிய அளவில் மாறவில்லை என்பதைக் கண்டறிந்தனர். 2018-ல், மிலன் வைஷ்ணவ் மற்றும் ஜொனாதன் கே 1980 முதல் 2012 வரையிலான 18 முக்கிய இந்திய மாநிலங்களில் தேர்தல் தரவுகளை ஆய்வு செய்தனர். மேலும் வாக்காளர் பங்கேற்பு பதவியில் இருப்பவருக்கு சாதகமாகவோ அல்லது பாதகமாகவோ இல்லை என்பதைக் கண்டறிந்தனர். மாறாக, அது ஒவ்வொரு தேர்தலின் குறிப்பிட்ட சூழ்நிலைகளைப் பொறுத்து முடிவுகள் இருக்கும். 


கட்சியின் வெற்றி வாய்ப்புகள் குறித்த கருத்து


2024-ஆம் ஆண்டில், வாக்குப்பதிவு குறைவாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. மிகவும் வெப்பமான வானிலை, கோவிட் -19 தொற்றுநோயின் விளைவுகள், விலைவாசி உயர்வு, வேலை இழப்புகள் மற்றும் வாக்காளர்களின் அக்கறையின்மை ஆகியவை இதில் அடங்கும். சில நேரங்களில், ஒரு கட்சி எளிதில் வெற்றி பெறும் என்ற நம்பிக்கை மக்கள் வாக்களிப்பதை ஊக்கப்படுத்தக்கூடும்.


உதாரணமாக, 1996 அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்களில், பில் கிளிண்டன் கருத்துக்கணிப்புகளில் பாப் டோலை விட மிகவும் முன்னணியில் இருந்தார். இதன் விளைவாக 72-ஆண்டுகளில் மிகக் குறைந்த வாக்குப்பதிவாக 49% மட்டுமே நிகழ்ந்தது. தேர்தலுக்கு சற்று முன், ஹாரிஸ் கருத்துக்கணிப்பு நிறுவனத்திடம் ‘பில் கிளிண்டன் அதிகப் பெரும்பான்மையுடன் வெற்றி பெறுவது உறுதி என்று கருத்துக் கணிப்புகள் காட்டினால், 9% வாக்காளர்கள், வாக்களிப்பதில் எந்தப் பயனும் இல்லை என்று அவர்கள் கருதினால், "வாக்களிக்க மாட்டார்கள்" என்று கூறியுள்ளனர்.


 இதனால் அரசியல் கட்சிகளுக்கு என்ன பாதிப்பு ஏற்படுத்தும்? ஹாரிஸின் கருத்துக்கணிப்பின்படி, கிளிண்டன் ஆதரவாளர்களில் 10% மற்றும் டோல் ஆதரவாளர்களில் 9% பேர் வாக்களிக்கத் தயங்கினர். இருப்பினும், டோல் ஆதரவாளர்களில் 14% மற்றும் கிளிண்டன் ஆதரவாளர்களில் 54% மட்டுமே கிளின்டன் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவார் என்று நம்பினர். எனவே, அதிகமான கிளிண்டன் ஆதரவாளர்கள் வாக்களிப்பதில் இருந்து விலகியிருக்கலாம். பொதுவாக, யாருடைய ஆதரவாளர்கள் முன்கூட்டிய முடிவை மிகவும் உறுதியாக நம்புகிறார்களோ அந்தக் கட்சிதான் அதிக பாதிப்படைகிறது. 


ஒவ்வொரு கட்சிக்கும் வெவ்வேறு சமூகப் பொருளாதார பின்னணியில் இருந்து அதன் சொந்த ஆதரவாளர்கள் வேறுபடுகின்றனர். அமெரிக்காவில், அரசியல் விஞ்ஞானிகளான மைக்கேல் டி. மார்டினெஸ் (Michael D. Martinez) மற்றும் ஜெஃப் கில் (Jeff Gill) ஆகியோர் வாக்குப்பதிவு எண்ணிக்கை தேர்தல் முடிவுகளை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆய்வு செய்தனர். அவர்கள் 1960 முதல் 2000 வரையிலான ஐந்து தேர்தல்களை அவர்கள் ஆய்வு செய்தனர். அதிக வாக்குப்பதிவு பொதுவாக ஜனநாயகக் கட்சியினருக்கும், குறைந்த வாக்குப்பதிவு குடியரசுக் கட்சியினருக்கும் உதவி இருக்கிறது என்பதைக் கண்டறிந்தனர். இந்தப் போக்கு நிலையானது மற்றும் 1960 முதல் தொடர்ந்து, அமெரிக்கத் தேர்தல்களில் ஏற்படும் மாற்றங்களைப் பிரதிபலிக்கிறது.


மற்றொரு ஆய்வு, ஸ்பென்சர் கோய்டல், தியாகோ மொரேரா மற்றும் ப்ரென்னா ஆம்ஸ்ட்ராங் ஆகியோர் 2010 முதல் 2020 வரையிலான அமெரிக்க தேர்தல்களை அமெரிக்க அரசியல் ஆராய்ச்சியில் (American Politics Research) 2023-ல் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையை  ஆய்வு செய்தனர். அவர்கள் மார்டினெஸ் (Martinez) மற்றும் கில்லின் அணுகுமுறையை (Gill’s methodology) உருவாக்கினர். எடுத்துக்காட்டாக, வாக்குப்பதிவை 5% அதிகரிக்க, வாக்குப்பதிவு 5% அதிகரிக்கும் வரை வாக்களிக்காத வாக்காளர்களைச் சேர்த்தனர். புதிய வாக்காளர்களின் கணிக்கப்பட்ட கட்சி விருப்பங்களின் அடிப்படையில் இந்த அதிகரிப்பு ஒவ்வொரு கட்சியையும் எவ்வாறு பாதித்தது என்பதை அவர்கள் கணக்கிட்டனர். 2010-ல், 15% வாக்குப்பதிவு அதிகரிப்பு ஜனநாயகக் கட்சியின் வாக்குகளை 1.5% உயர்த்தியிருக்கும். ஆனால் 2020-ல் 0.4% மட்டுமே உயர்ந்தது. 


இந்தியாவில்


இந்தியச் சூழலில் இதுபோன்ற ஆராய்ச்சியைக் காண முடியவில்லை. ஆனால், பழக்கமான வாக்காளர்களின் வாக்களிப்பு முறைகள், கணிக்க கடினமாக இருக்கும் பழக்கமில்லாத வாக்காளர்களிடமிருந்து மிகவும் வித்தியாசமாக இருக்கிறது. மேலும், இந்தியாவில் பழக்கமில்லாத வாக்காளர்களின் சில சதவீதப் புள்ளிகளின் தாக்கம், இருகட்சி அமைப்பைக் கொண்ட அமெரிக்காவைவிட  கணிக்க மிகவும் சிக்கலானதாக இருக்கிறது. கூடுதலாக, சூழல்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடும். எனவே, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் எண்ணப்படும் வரை, வாக்குச்சாவடிகளில் வழக்கத்திற்கு மாறான வாக்காளர்கள் திடீரென தோன்றுவது அரசியல் விமர்சகர்கள் முடிவு குறித்து நிச்சயமற்ற நிலையில் உள்ளனர் என்பதை எடுத்து காட்டுகிறது. வழக்கத்திற்கு மாறான வாக்காளர்கள் பங்கேற்கவில்லை என்றால், எல்லாவற்றையும் புரிந்துகொள்வது எளிது. மேலும் நிலைமை கணிக்கக்கூடியதாக இருக்கிறது.


அதானு பிஸ்வாஸ், புள்ளியியல் பேராசிரியர், இந்திய புள்ளியியல் நிறுவனம், கொல்கத்தா.




Original article:

Share:

வரவேற்கத்தக்கக் கொடை : ஒன்றிய அரசுக்கு இந்திய ரிசர்வ் வங்கியின் ரூ.2.11 லட்சம் கோடி பரிமாற்றம்

 இந்திய ரிசர்வ் வங்கியின் மிகைத் தொகைப் பரிமாற்றம் அடுத்து வரும் அரசாங்கத்தை நம்பிக்கையுடன் தொடங்குவதற்கு உதவும்.


2023 மற்றும் 2024-ம் ஆண்டில் கிட்டத்தட்ட ரூ.2.11 லட்சம் கோடியை ஒன்றிய அரசுக்கு மாற்றுவதற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் வாரியத்தின் முடிவானது அடுத்து வரும் புதிய அரசாங்கத்திற்கு வரவேற்கக் கூடியதாகும். இது 2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால ஒன்றிய வரவுசெலவுத் திட்டத்தில் கணிக்கப்பட்ட முந்தைய ஆண்டின் ரூ.87,416 கோடி செலுத்தப்பட்ட வங்கி மற்றும் நிதி அமைப்பு மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியிலிருந்து ரூ.1.02 லட்சம் கோடி ஈவுத்தொகை மற்றும் மிகைத் தொகை ரசீதுகளை விட இரண்டு மடங்கு அதிகமாகும். இந்த மாற்றம் அடுத்த நிதியமைச்சருக்கு வரவுசெலவு மற்றும் நிதி அமைப்பு திட்டமிடும்போது நிறைய நெகிழ்வுத்தன்மையை வழங்க வேண்டும். இந்த மாற்றத்தக்க மிகைத் தொகையின் அதிகரிப்பு இந்திய ஒன்றிய வங்கி சொத்துக்களை கவனமாக நிர்வகிப்பதை பிரதிபலிக்கிறது. உலகளவில் நிச்சயமற்றத் தன்மை மற்றும் பல ஒன்றிய வங்கிகள் விலைகளை உறுதிப்படுத்த கொள்கைகளைக் கடுமையாக்கி வரும் நேரத்தில் இது நடந்துள்ளது. ரிசர்வ் வங்கியின் 2023-24 இருப்புநிலைக் குறிப்பின் விவரங்கள் வரும் நாட்களில் அறியப்படும் அதே வேளையில், அதன் வெளிநாட்டுப் பத்திரங்கள் மற்றும் அந்நியச் செலாவணி சந்தையில் அதன் தலையீடுகளின் மூலம் ரூபாயின் ஏற்ற இறக்கத்தை சீராக்குவது மற்றொரு காரணியாகும். இவை இணைந்து உபரியைப் பெருக்கியது. மார்ச் 29ஆம் தேதி நிலவரப்படி, மொத்த அன்னியச் செலாவணி கையிருப்பு 12 மாதங்களில் 67.1 பில்லியன் டாலர் அதிகரித்து 645.58 பில்லியன் டாலராக இருந்தது என்று வாராந்திரப் புள்ளி விவரம் காட்டுகிறது.


இந்திய ரிசர்வ் வங்கி தனது அணுகுமுறையில், குறிப்பாக தற்செயல் இடர் தாங்கலின் (Contingent Risk Buffer (CRB)) கீழ் வழங்குவதில் கவனமாக உள்ளது. இது பொருளாதாரத்தில் ஏற்படும் எதிர்பாராத தற்செயல்கள் மற்றும் அபாயங்களை ஈடுகட்ட ஒதுக்கப்பட்ட நிதியை அதிகரித்துள்ளது. ஒன்றிய வங்கி 2023-24ஆம் ஆண்டிற்கான அதன் இருப்புநிலை அளவின் 6.5% க்கு 50 அடிப்படை புள்ளிகளால் வழங்குவதற்கான அளவை உயர்த்தியுள்ளது. இந்த நடவடிக்கை உள்நாட்டுப் பொருளாதாரத்தின் ஆரோக்கியத்தில் அதன் அதிகரித்த நம்பிக்கையை தெளிவாகக் காட்டுகிறது. உலகளாவிய நிதிய அமைப்பில் (global financial system) எதிர்பாராத முன்னேற்றங்களில் இருந்து நிலைத்தன்மைக்கான திடீர் அச்சுறுத்தல்களுக்கு எதிராக இது தாங்கலை பலப்படுத்துகிறது. ஜூன் 4ஆம் தேதி நடந்துவரும் பொதுத் தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட பிறகு, புதிய அரசாங்கத்திற்கு இந்திய ரிசர்வ் வங்கியிடமிருந்து குறிப்பிடத்தக்க மிகைத் தொகைப் பரிமாற்றம் கிடைக்கும். இந்த மிகைத் தொகையின் மூலதன செலவினங்களை அதிகரிக்க ஒரு வாய்ப்பை வழங்குகிறது. குறிப்பாக, தனியார் நுகர்வு செலவினம் இன்னும் போராடி வருகிறது. நிதி இடைவெளியைக் குறைக்க இந்த கூடுதல் பணத்தில் சிலவற்றைப் பயன்படுத்துவது அரசாங்கத்தின் நிதி நிலையை மேம்படுத்தலாம் மற்றும் நிதி ஒருங்கிணைப்புக்கான அதன் உறுதிப்பாட்டைப் பற்றி முதலீட்டாளர்களுக்கு உறுதியளிக்கலாம். இந்திய ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகள் பொருளாதாரத்தின் மீள்திறன் மீதான நம்பிக்கையுடன் அடுத்த அரசாங்கத்திற்கு அமைதியாகக் களம் அமைத்துக் கொடுத்துள்ளன.




Original article:

Share:

இந்தியாவில் நடைபெறும் 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனைக் கூட்டம் பற்றி . . .

 அண்டார்டிகாவில் முறைப்படுத்தப்படாத சுற்றுலாவை (unregulated tourism) இந்தியா தொடர்ந்து எதிர்க்க வேண்டும்.


கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் 46-வது அண்டார்டிகா ஒப்பந்த ஆலோசனைக் கூட்டத்தில் (Antarctic Treaty Consultative Meeting (ATCM)) 60-க்கும் மேற்பட்ட நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்கின்றனர். இந்தக் கூட்டம் இம்மாத இறுதிவரை நடைபெறும். இந்தக் கூட்டம் "ஆலோசனைக் கட்சிகளை" (Consultative Parties) ஒன்றிணைக்கிறது. அவை கண்டத்தை நிர்வகிப்பது குறித்து வாக்களிக்கும் உரிமையைக் கொண்ட 29 நாடுகளின் கூட்டம் ஆகும். மற்ற வாக்களிக்காத நாடுகள் பார்வையாளராக கூட்டத்தில் பங்கேற்கின்றனர். மேலும், நிபுணர்கள் மற்றும் செயல்பாட்டாளர்களுக்கும் இந்தக் கூட்டத்தில் பங்கேற்கின்றனர். இதில் சுற்றுலா தொடர்பாக விவாதிக்க உள்ளனர். இந்தியா உள்ளிட்ட "ஒத்த சிந்தனையைக்" (“like-minded”) கொண்ட நாடுகளின் குழு, அண்டார்டிகாவில் சுற்றுலா ஒழுங்குமுறைத் திட்டத்தை முன்மொழிகின்றன. மற்ற கண்டங்களைப் போல் அண்டார்டிகாவில் பழங்குடி மக்கள்  இல்லை.


அண்டார்டிகா மற்ற இடங்களைப் போல் பொதுவான சுற்றுலா தலமாக இல்லை. அண்டார்டிகாவிற்கு அனைவராலும் எளிதில் பயணிக்க முடியாது  இது வழக்கமான இடங்களிலிருந்து வெகு தொலைவில் உள்ளது. அதுதான் அனைவரையும் ஈர்க்கக் கூடியதாக இருக்கிறது. எல்லா இடங்களிலும் ஆராயப்பட்டு விளம்பரப்படுத்தப்பட்ட உலகில், அண்டார்டிகாப் பகுதி காடு மற்றும் பனி அடுக்குகளின் கீழ் மறைந்துள்ளது. தனித்துவமான அனுபவங்களைத் தேடும் செல்வந்தர்கள் விரும்பும் இடமாக அண்டார்டிகா மாறியுள்ளது. 


டாஸ்மேனியா, இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள பல்கலைக்கழகங்களின் சமீபத்திய ஆய்வில், அண்டார்டிகாவுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 1993-ல் 8,000-லிருந்து  2022-ல் 105,000 ஆக அதிகரித்துள்ளது. பல்வேறு நாடுகளால் நடத்தப்படும் அறிவியல் பயணங்கள் மற்றும் ஆராய்ச்சி நிலையங்கள் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கையில் சேர்க்கப்படவில்லை. அண்டார்டிகாவிற்கு வருகை தரும் விஞ்ஞானிகளைவிட இப்போது அதிகமான சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்து இருப்பதாக அறிக்கைகள் காட்டுகின்றன. 1966-ஆம் ஆண்டுமுதல் ஆலோசனைக் கூட்டங்களின் போது அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகை குறித்து விவாதிக்கப்படுகிறது. அதிகமான சுற்றுலாப் பயணிகளின் வருகைக்  காரணமாக பிராந்தியத்தின் பல்லுயிரியலுக்கு தீங்கு விளைவிக்கும் மாசு மற்றும் விபத்து ஏற்பட வாய்ப்பிருக்கிறது.


அமெரிக்காவும் மெக்சிகோவும் இணைந்த அளவு பெரிய பகுதியான அண்டார்டிகாவை சுத்தமாக வைத்திருக்க அனைவரும் விரும்புகிறார்கள். ஆனால் பிராந்திய உரிமைகோரல்களைத் தடை செய்யும் ஒப்பந்தம் இருந்தபோதிலும், எதிர்காலத்தில் பல்வேறு பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற கவலை அதிகரித்துள்ளது. ஒரு நாட்டிலிருந்து அதிகமான பார்வையாளர்கள் தங்களுக்குச் சாதகமாக விதிகளை உருவாக்க முடியுமா என்று சிலர் ஆச்சரியப்படுகிறார்கள். இந்தியா இப்போது சில சுற்றுலாப் பயணிகளை அண்டார்டிகாவிற்கு அனுப்பினாலும், அதன் வளர்ந்து வரும் செல்வம் காரணமாக அது மாறக்கூடும். இந்தியா சுற்றுலா விதிமுறைகளை ஆதரிக்கும் அதே வேளையில், எதிர்கால சுற்றுலாவை  பாதிக்கும் விதிமுறைகளை ஏற்காமல் கவனமாக இருக்க வேண்டும்.




Original article:

Share:

நிதி ஈவுத்தொகை -தலையங்கம்

 இந்திய ரிசர்வ் வங்கி ஒரு பெரிய மிகை தொகையை பரிமாற்றம் (surplus transfer) செய்தது. இது அரசாங்க நிதியை சரிசெய்ய உதவும். 


2023-24 ஆம் ஆண்டிற்கான இந்திய ரிசர்வ் வங்கியின் மிகை தொகை பரிமாற்றம் (surplus transfer)  செய்யப்பட்ட ரூ.2,10,874 கோடியானது பலரை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்தத் தொகை அடுத்த அரசாங்கத்தின் இந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்திற்கு உதவியாக இருக்கும். இந்த பரிமாற்றம் 2022-23 ஆம் ஆண்டிற்கு மாற்றப்பட்ட ₹87,416 கோடியை விட 141% அதிகமாகும். மேலும், இது இந்திய ரிசர்வ் வங்கி அரசாங்கத்திற்கு அனுப்பிய மிக உயர்ந்த பணப்பரிமாற்றமாகும். 2019-ம் ஆண்டில் பிமல் ஜலான் குழுவின் (Bimal Jalan committee) ஆலோசனையின் பேரில் ஏற்றுக்கொள்ளப்பட்ட பொருளாதார மூலதன கட்டமைப்பின் பரிந்துரைகளின் அடிப்படையில் இறுதியான தற்செயல் ஆபத்து இடையகத்திற்கு (contingency risk buffer) பங்களித்த பின்னர் உபரி தீர்மானிக்கப்பட்டது.


மேம்பட்ட பொருளாதார நடவடிக்கைகளுக்கு ஏற்ப, இந்திய ரிசர்வ் வங்கியானது நிதியாண்டு-2024 க்கான அதன் இருப்புநிலைக் குறிப்பில் தற்செயல் ஆபத்து இடையகத்திற்கான (contingency risk buffer) ஒதுக்கீட்டை 6.5% ஆக அதிகரித்தது. மெதுவான வளர்ச்சி மற்றும் தொற்றுநோய் காரணமாக நிதியாண்டு-2019 மற்றும் நிதியாண்டு-2022 க்கு இடையில் இந்த ஒதுக்கீடு 5.5% ஆக இருந்தது.


கடந்த நிதியாண்டில் மிகப் பெரிய மிகைத் தொகை ஏற்பட்டது. ஆனால், ஏன் என்பது இந்திய ரிசர்வ் வங்கியின் நிதியாண்டு-2024 ஆண்டு அறிக்கை வெளிவரும் போது மட்டுமே நமக்குத் தெரியும். இந்திய ரிசர்வ் வங்கியின் பணத்தின் பெரும்பகுதி வெளிநாட்டு நாணயத்தில் இருப்பதாலும், 2024 நிதியாண்டில் அது சுமார் 17% வளர்ச்சியடைந்துள்ளதாகவும் ஆரம்ப தரவுகள் தெரிவிக்கின்றன. அமெரிக்கா மற்றும் பிற முன்னேறிய பொருளாதாரங்களில் உயர்ந்த வட்டி விகிதங்கள் இந்த சொத்துக்களில் இருந்து வருமானங்களை உயர்த்தியிருக்கலாம். இந்தியாவில் உயர்த்தப்பட்ட வட்டி விகிதங்கள் இந்திய அரசாங்க பத்திரங்களிலிருந்து வருமானத்தை அதிகரித்திருக்கும். அந்நியச் செலாவணி சந்தையில் தலையீடுகளிலிருந்து ஆதாயங்களும் பங்களித்தன. செலவினப் பக்கத்தில், உள்நாட்டு பணப்புழக்கம் சரிசெய்தல் வசதி (liquidity adjustment facility (LAF)) செயல்பாடுகளுக்கு குறைந்த வட்டி செலவு உதவியது. இந்திய ரிசர்வ் வங்கி சிறப்பாக செயல்பட்டதாக தெரிகிறது. ரூபாய் மற்றும் அரசாங்கப் பத்திரங்களின் வருவாயை சீராக வைத்து விஷயங்களை சமப்படுத்தினார்கள். மேலும், அவர்கள் பெரிய வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ (portfolio) வரவுகளைக் கையாண்டனர். மேலும் அவர்கள் அரசாங்கத்திற்கு மாற்றுவதற்கான உபரியை அதிகப்படுத்தினர்.


2024-25 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு செலவு திட்டத்தில், இந்திய ரிசர்வ் வங்கி, தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களிடமிருந்து ஈவுத்தொகை மற்றும் உபரியாக கணிக்கப்பட்ட ₹1,02,000 கோடியை விட நிதியாண்டு-2024 இல் அறிவிக்கப்பட்ட உபரி தொகை மிக அதிகம். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.2 முதல் 0.3% வரையிலான கூடுதல் பரிமாற்றம், நிதிப் பற்றாக்குறையைக் குறைக்கும் மற்றும் சந்தைக் கடன் வாங்குவதைக் குறைக்கும். மாற்றாக, உள்கட்டமைப்பு செலவினங்களுக்கு ஒன்றிய அரசு நிதியைப் பயன்படுத்தலாம். குறைந்த சந்தை கடன் நிதி ஒருங்கிணைப்பை விரைவுபடுத்த உதவும். இது 2025-26 க்குள் 4.5% நிதிப் பற்றாக்குறை இலக்கை அடைய உதவும். காகித விநியோகத்தைக் குறைப்பது என்பது, ரிசர்வ் வங்கியானது அரசு கடன் வாங்குவதற்கு உதவ வேண்டியதில்லை. மாறாக, அதன் ₹70 லட்சம் கோடி இருப்புநிலைக் குறிப்பைக் குறைக்கும். மேலும், குறைவான அரசாங்கப் பத்திரங்கள் G-sec விளைச்சல்கள் மற்றும் சந்தை விகிதங்கள் குறையும், இது பணவியல் கொள்கைக்கு (monetary policy) முக்கியமானது.  




Original article:

Share:

ஈரான் அதிபரின் மரணத்தில் மேற்கத்திய பொருளாதாரத் தடைகள் ஒரு பங்கைக் கொண்டிருக்கலாம் - அர்ஜுன் சென்குப்தா

 ஞாயிற்றுக்கிழமை மே 19-ஆம் தேதி  ஹெலிகாப்டர் விபத்தில் ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமிரப்துல்லாஹியன் ஆகியோர் உயிரிழந்தனர். ஈரானின் கிழக்கு அஜர்பைஜான் மாகாணத்தில் அடர்ந்த மூடுபனியின் போது இது நடந்தது. விபத்துக்கான அதிகாரப்பூர்வ காரணத்தை தெஹ்ரான் இன்னும் தெரிவிக்கவில்லை.


இருப்பினும், பல வல்லுநர்கள் தொழில்நுட்ப சிக்கல்கள் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கிறார்கள். சம்பந்தப்பட்ட பெல் 212 (Bell 212 chopper) ஹெலிகாப்டர் 30 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. மேலும் அது 45 ஆண்டுகள் பழமையானது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. பழைய விமானங்கள் நம்பகமானவை மற்றும் பாதுகாப்பானவை என்று ஆராய்ச்சி காட்டுகிறது. ஆனால் ஈரான் ஜனாதிபதி ஏன் இவ்வளவு பழைய ஹெலிகாப்டரைப் பயன்படுத்தினார்? 


பொருளாதாரத் தடைகள் மற்றும் ஈரானின் விமானத் துறை


1979 புரட்சிக்குப் பின்னர், அமெரிக்கா தலைமையிலான மேற்கு நாடுகள் ஈரான் மீது பல தடைகளை விதித்துள்ளன. 2022-வரை, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமிக்கும் வரை, ஈரான் உலகளவில் அதிக பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டது என்று ப்ளூம்பெர்க் (Bloomberg) தெரிவித்துள்ளது. இந்த தடைகள் ஈரானை உலகளவில் தனிமைப்படுத்தி அதன் பொருளாதாரத்தைப் பாதித்துள்ளது. குறிப்பாக, ஈரானின் விமானப் போக்குவரத்துத் துறையை கடுமையாக பாதித்துள்ளது.


அல் ஜசீராவின் கூற்றுப்படி, அமெரிக்கத் தடைகள் ஈரானுக்கு 10%க்கும் அதிகமான அமெரிக்கத் தயாரிப்பு மற்றும் வடிவமைப்பு பாகங்களைக் கொண்ட விமானம் அல்லது விமானப் பாகங்கள்  பெறுவதைத் தடுக்கின்றன. இதேபோன்ற தடைகள் ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் தனிப்பட்ட மேற்கத்திய நாடுகளாலும் விதிக்கப்படுகின்றன. பெரும்பாலான விமானங்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் தயாரிக்கப்படுவதால், இந்த தடைகள் தெஹ்ரானை மேற்கத்திய விமானங்களை வாங்குவதையும் அதன் பழைய கடற்படையை இயங்க வைப்பதற்கான பாகங்களைப் பெறுவதையும் நிறுத்துகின்றன.


விமானங்கள் மற்றும் உதிரிபாகங்கள் தவிர, பொருளாதாரத் தடைகள் ஈரான் பழுதுபார்ப்பதற்கும் பராமரிப்பதற்கும் தேவையான தொழில்நுட்ப உதவியைப் பெறுவதையும் தடுக்கிறது. ரைசியின் விபத்துக்குள்ளான ஹெலிகாப்டரை தயாரித்த அமெரிக்க நிறுவனமான பெல் டெக்ஸ்ட்ரான் (Bell Textron), "பெல் ஈரானில் எந்த வியாபாரமும் செய்யவில்லை அல்லது அவர்களின் ஹெலிகாப்டர்களுக்கு உதவவில்லை" என்று கூறினார். ரஷ்ய விமானங்களும் அமெரிக்க பாகங்களைச் சார்ந்துள்ளன. இதன் பொருள் மாஸ்கோவால் தெஹ்ரானுக்கும் முழுமையாக உதவ முடியாது என்பதாகும். கூடுதலாக, உக்ரைன் போர் மற்றும் அதன் விளைவாக பொருளாதாரத் தடைகளுக்குப் பிறகு, ரஷ்யாவில்  விமானங்கள் மற்றும் பாகங்கள் குறைவாக உள்ளது.


ஈரானின் வயதான மற்றும் நம்பமுடியாத கடற்படை


பொருளாதாரத் தடைகளின் விளைவாக ஈரானின் பயணிகள் கடற்படையின் சராசரி விமான வயது கிட்டத்தட்ட 28 ஆண்டுகள் ஆக்கியுள்ளது.  இது உலகளாவிய சராசரியை விட இரு மடங்கு அதிகம் என்று விமான தரவு குழு சிரியம் (Cirium) தெரிவித்துள்ளது. ஈரான் ஏர், 40ஆண்டுகளுக்கும் மேலான பழமையான விமானங்களை பயன்படுத்தி வருகின்றனர்.ஒப்பிடுகையில், கத்தார் ஏர்வேஸ் விமானங்கள் சராசரியாக 9 ஆண்டுகளுக்கு மேற்பட்டவை .


ஒரு விமானம் குறிப்பிட்ட ஆண்டுகளுக்கு மேல் பயன்படுத்தும் போது அதன் பாதுகாப்பு மற்றும் நம்பகத்தன்மைக்கும் இடையே ஒரு தொடர்பு இருப்பதாக ஆய்வுகள் சுட்டிக்காட்டுகின்றன. விபத்து விகிதங்களுக்கும் 18 ஆண்டு வரையிலான விமான பயன்பாட்டிற்கும் இடையே தொடர்பு  எதுவும் இல்லை. இருப்பினும், 20 ஆண்டுகளுக்கும் மேலான விமானங்களால் விபத்துகள் அதிகரிக்கிறது என்று பாஸ்டனில் உள்ள மாசசூசெட்சு தொழில்நுட்பக் கழக (Massachusetts Institute of Technology, Boston) பேராசிரியரான ஆர் ஜான் ஹான்ஸ்மேனின் விளக்குகிறார். 


பொருளாதாரத் தடைகள் தொடங்கியதிலிருந்து ஈரான் மோசமான விமானப் பாதுகாப்பு பதிவைக் கொண்டுள்ளது. 1979 ஆம் ஆண்டு முதல், ஈரானில் 73 விமான விபத்துக்கள் (ஹெலிகாப்டர்கள் தவிர) நடந்துள்ளன. இது 2,286 இறப்புகளை ஏற்படுத்தியது. ஜெனீவாவை தளமாகக் கொண்ட விமான விபத்துக் காப்பகப் பணியகம் (Bureau of Aircraft Accidents Archives  (B3A)) தெரிவித்துள்ளது. 1979 மற்றும் 2002-க்கு இடையில் ஈரானில் 109 விமான விபத்துக்கள் ஏற்பட்டதாக அமெரிக்காவை தளமாகக் கொண்ட ஏவியேஷன் சேஃப்டி நெட்வொர்க் (Aviation Safety Network  (ASN)) கூறுகிறது.


ஒப்பீட்டளவில், இதே காலகட்டத்தில், பாகிஸ்தானில் 42 விபத்துகள் மட்டுமே ஏற்பட்டுள்ளது. இதன் விளைவாக 854 பேர் உயிரிழந்துள்ளனர் என்று B3A தெரிவித்துள்ளது. 2015-ஆம் ஆண்டில் ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்திற்குப் பிறகு, சில மேற்கத்திய பொருளாதாரத் தடைகளை நிக்கின. இதன் மூலம் ஈரான் போயிங் (Boeing) மற்றும் ஏர்பஸ் (Airbus) நிறுவனங்களுடன் $40 பில்லியன் மதிப்பிலான ஒப்பந்தங்களில் கையெழுத்துவிட்டது. இருப்பினும், 2018-ல் டொனால்ட் டிரம்பின் நிர்வாகத்தின் கீழ்  செய்யப்பட்ட மாற்றமானது ஈரான் கடற்படையின் முன்னேற்றத்திற்கு தடைசெய்தது. 


அந்த காலகட்டத்தில் ஈரான் மூன்று ஏர்பஸ் ஜெட் விமானங்கள்  மற்றும்  13 சிறிய சுழல்விசை முந்துகை (turboprop) விமானங்கள் மட்டுமே வாங்க முடிந்தது என்று அல் ஜசீரா (Al Jazeera) அறிக்கை தெரிவித்துள்ளது. 




Original article:

Share:

புனே போர்ஷே விபத்து : இந்தியாவில் உடைந்த குற்றவியல் நீதி அமைப்பின் தாக்கம் -மீரான் சதாய் பர்வான்கர்

 கிரிமினல் விசாரணைகள் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டு மேல்முறையீடுகளை விசாரித்து மற்றொரு வருடத்தில் தீர்ப்பளிக்கப்பட்டால், நிலைமை வேறுவிதமாக இருக்கும். சிறார்களை வாகனம் ஓட்ட அனுமதிக்க பெற்றோர்கள் பயப்படுவார்கள், மேலும் மதுக்கடைக்காரர்கள் அவர்களுக்கு மதுவை வழங்குவதில் எச்சரிக்கையாக இருப்பார்கள். 


பொறுப்பற்ற இளைஞரால் புனேவில் இரண்டு இளம் உயிர்களை இழந்ததற்காக நாடு துக்கம் அனுசரிக்கும் அதே வேளையில், தோல்வியுற்ற குற்றவியல் நீதி அமைப்பின் யதார்த்தத்தை நாம் எதிர்கொள்கிறோம். குடிபோதையில் பணக்கார பையன் அலட்சியமாக நடந்துகொண்டான். அவரது குற்றத்தை மென்மையாகக் கையாளும் போது சிறார் நீதி வாரியம் (Juvenile Justice Board) எவ்வளவு பொறுப்புடன் இருந்தது என்று நாங்கள் கேள்வி எழுப்புகிறோம்.


கவனக்குறைவாக வாகனம் ஓட்டுதல், சாலைப் பாதுகாப்பு மற்றும் விபத்துகளை எவ்வாறு கையாள்வது என்பதில் பெரிய சிக்கல் உள்ளது. மக்கள் இப்போது மற்றொரு சோகமான விபத்தைப் பற்றி பேசுகிறார்கள். இது 2002-ல் நடிகர் சல்மான் கான் சம்பந்தப்பட்ட ஒரு விபத்தை நினைவூட்டுகிறது. இதற்காக, நீதிமன்றம் தீர்ப்பை முடிவு செய்ய 13 ஆண்டுகள் ஆனது. ஆனால், அவர் குற்றவாளி இல்லை என்று  விடுவிக்கப்பட்டார் நமது குற்றவியல் நீதி அமைப்பில் உள்ள பிரச்சனைகளுக்கு அடிப்படைக் காரணம், தீர்ப்புகள் வழங்க பல ஆண்டுகள் ஆகும். புனேவில் போர்ஷை ஓட்டும் இளைஞர்களைப் போல, சட்டத்தை தங்கள் கைகளில் எடுக்கவோ அல்லது புறக்கணிக்கவோ சிலருக்கு இது தைரியமாக இருக்கிறது.


நாட்டின் சட்டத்தின் மீதான மரியாதை குறைவாக இருப்பது, விசாரணைகளில் நீண்ட கால தாமதத்தின் நேரடி விளைவாகும். கிரிமினல் விசாரணைகள் ஒரு வருடத்திற்குள் முடிக்கப்பட்டு மேல்முறையீடுகளை விசாரித்து மற்றொரு வருடத்தில் தீர்ப்பளிக்கப்பட்டால், நிலைமை வேறுவிதமாக இருக்கும். சட்டத்தின் மீது மரியாதை இருக்கும். சிறார்களிடம் கார் சாவியை ஒப்படைக்க பெற்றோர்கள் பயப்படுவார்கள் மற்றும் மதுக்கடைக்காரர்கள் அவர்களுக்கு மதுவை வழங்குவதில் கவனமாக இருப்பார்கள்.


ஆனால், தற்போதைய சூழல் அதற்கு நேர்மாறானது. தேசிய குற்ற பதிவுகள் பணியகம் (National Crime Records Bureau (NCRB)) 2022 அறிக்கையின்படி, கவனக்குறைவாக வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் மரணங்கள் சம்பந்தப்பட்ட 90%க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன. இதற்காக, நகரங்களில் குறைந்தளவில் தண்டனை விகிதம் 30% ஆகும். மேலும், சாட்சிகளின் தாமதங்கள் காவல்துறையின் புலனாய்வைக் கடினமாக்குகின்றன. குற்றவியல் வழக்குகள் எவ்வாறு விசாரிக்கப்படுகின்றன என்பதை இந்தப் பிரச்சனைகள் மூலம் தெளிவுபடுத்துகின்றன. இந்தியாவில் சட்டப்பூர்வ செயல்முறைகள் அதிக நேரம் எடுக்கும் என்றும், மேலும் இவை சிக்கலானவை என்றும் பலர் நினைக்கிறார்கள். இதனால், பல குற்றவாளிகள் தண்டிக்கப்படுவதில்லை. மாநில மற்றும் மத்திய அரசுகள் நீதித்துறை உள்கட்டமைப்பை ஏன் விரைவாக விசாரணை செய்ய மேம்படுத்தவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை.


2023 டிசம்பரில், இந்தியாவில் ஒரு மில்லியன் மக்களுக்கு 21 நீதித்துறை அதிகாரிகள் இருப்பதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. இது சட்ட ஆணையத்தின் (Law Commission) பரிந்துரையான ஒரு மில்லியனுக்கு 50 நீதிபதிகள் என்ற பரிந்துரையை விட மிகக் குறைவு. இந்தியாவில் காவலர்கள்-குடிமக்கள் விகிதம் (police population ratio) 1,00,000 குடிமக்களுக்கு 152 அதிகாரிகள் என்ற வீதத்தில் உள்ளது. ஆனால், பரிந்துரைக்கப்பட்ட விகிதம் 1,00,000 குடிமக்களுக்கு 222 அதிகாரிகள் ஆவார். காவல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் (Bureau of Police Research and Development) சமீபத்திய அறிக்கை, ஜனவரி 1, 2022 நிலவரப்படி நாட்டில் காவல்துறை அதிகாரிகளுக்கு சுமார் 4,00,000 பணியிடங்கள் காலியாக இருப்பதாக வெளிப்படுத்துகிறது. இருந்தபோதிலும், குற்றவியல் வழக்குகளை மாநில காவல்துறை ஒப்பீட்டளவில் விரைவாக முடித்து வைக்கிறது. இருப்பினும், இதற்கான  தரத்தை இன்னும் மேம்படுத்த வேண்டும்.


2022 ஆம் ஆண்டில், இந்தியாவில் 75% சாலை விபத்து மரணங்கள் மற்றும் 65% மோதி விட்டு தப்பிச் செல்லுதல் வழக்குகள் (hit-and-run cases) ஒரு வருடத்திற்குள் காவல்துறையால் குற்றப்பத்திரிகை செய்யப்பட்டன. இது 'இந்தியாவில் குற்றம்-2022' (Crime In India-2022) அறிக்கையில் காட்டப்பட்டுள்ளது. புலனாய்வு அதிகாரிகள் மற்றும் வழக்குரைஞர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது, அவர்களுக்கு தொழில்நுட்ப பயன்பாட்டில் வழக்கமான பயிற்சி அளிப்பது மற்றும் நன்கு பொருத்தப்பட்ட தடயவியல் ஆய்வகங்கள் மூலம் சிறந்த கண்டறிதல், உயர்தர விசாரணைகள் மற்றும் அதிக தண்டனைகளுக்கு வழிவகுக்கும். ஆச்சரியம் என்னவென்றால், புனேவில் உள்ள வாரியம் குற்றம் சாட்டப்பட்ட இளைஞரை விரைவாக விடுவித்தது. விபத்துகள் குறித்து கட்டுரை எழுதவும், 15 நாட்கள் போக்குவரத்து போலீசாருக்கு உதவவும், கவுன்சிலிங் எடுக்கவும் சொன்னார்கள். இந்த முடிவு நியாயமற்றதாகவும் உணர்ச்சியற்றதாகவும் தெரிகிறது. ஏனெனில், இந்த விபத்தில் இரண்டு இளம் உயிர்கள் பலியாகின. ஆனால், இந்த மெத்தனம் நீதியை கேலிக்கூத்தாகக் கருதப்படுகிறது. புனே காவல்துறை இந்த வழக்கை குற்றமற்ற கொலை என்று பதிவு செய்துள்ளது. இது 10 ஆண்டுகள் சிறைத்தண்டனையுடன் கூடிய கடுமையான குற்றம் மற்றும் ஒப்பீட்டளவில் 40 சதவிகிதம் சிறந்த தண்டனை விகிதத்தைக் கொண்டுள்ளது. புனே ஜேஜே வாரியத்தின் உடனடி உத்தரவு சம்பந்தப்பட்ட அதிகாரியால் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நான் நம்புகிறேன். இதற்கிடையில் சிறுவனை மீண்டும் ஆஜராகுமாறு வாரியம் கூறியுள்ளது. போர்ஷே டிரைவரை வயது முதிர்ந்தவராக முயற்சி செய்ய மகாராஷ்டிர அரசின் முடிவு சரியான திசையில் எடுக்கும் ஒரு நடவடிக்கையாகும். 


டிசம்பர் 2012 கற்பழிப்பு வழக்கு பெண்கள் மீதான வன்முறைக்கு எதிரான சீற்றத்திற்கு வழிவகுத்தது போலவே, துரதிர்ஷ்டவசமான வழக்கு மற்றும் அப்பாவி இளைஞர்களின் உயிர்கள் சாலைப் பாதுகாப்பு மற்றும் கவனமாக வாகனம் ஓட்டுதல் போன்ற பல்வேறு காரணிகளில் நமது அக்கறையின்மையிலிருந்து நம்மை கோபப்படுத்தியது. இது போக்குவரத்து விதிகளுக்கு உட்பட்டு அவர்களின் சொந்த பொறுப்புணர்வை குடிமக்கள் ஏற்றுக்கொள்வதற்கும் பொறுப்பான பெற்றோராக அவர்களின் பங்கிற்கு வழிவகுக்கும் என்று நம்புகிறேன். அந்தச் சட்டம், நெறிமுறைகள் இல்லையென்றால், மதுக்கூடம் (bars) மற்றும் கஃபேக்களில் (cafes) போதைப்பொருள் மற்றும் மதுவுடன் இளம்வயதினரை ஈடுபடுபவர்களைத் தடுக்கும். சாலை நீதியை கவனத்தில் கொண்டு வந்ததற்காக பாதிக்கப்பட்ட இளம் பெண்களான அனீஷ் அவதியா மற்றும் அஷ்வினி கோஷ்தா ஆகியோர் நினைவுகூரப்படட்டும்.


கட்டுரையாளர், ஐபிஎஸ் அதிகாரி, போலீஸ் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணியகத்தின் டிஜியாக இருந்து ஓய்வு பெற்றவர்.




Original article:

Share:

இந்தியாவில் வேலையின்மை கடந்த 8 ஆண்டுகளில் அனைத்து சமூகங்களையும் எவ்வாறு பாதித்துள்ளது? எந்த முன்னேற்றமும் இல்லாத 2023-24? -உதித் மிஸ்ரா

 இந்து சமூகத்தில் பிற பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் (other backward caste (OBC)) மற்றும் பட்டியிலடப்பட்ட வகுப்பினர் (scheduled caste (SC)) ஆகிய இரு பிரிவினரும் வேலையில்லாத் திண்டாட்டத்தின் பாதிப்பை எதிர்கொள்கின்றனர். 2016-17 மற்றும் 2023-24-க்கு இடையில் இரு வகுப்பினரருக்கும் இடையே வேலைவாய்ப்பு விகிதம் 6.36 சதவீத புள்ளிகள்  குறைந்துள்ளது. 


இந்த ஆண்டு ஏப்ரலில், இந்தியாவின் வாக்காளர்களைப் பற்றி பல ஆண்டுகளாக ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சி அமைப்பான வளரும் சமூகங்களின் ஆய்வு மையம்  (Centre for the Study of Developing Societies (CSDS-Lokniti)), அதன் தேர்தலுக்கு முந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளை வெளியிட்டது. 2024-ல் வாக்காளர்களுக்கு மிக முக்கியமான  பிரச்சனை  வேலையில்லாத் திண்டாட்டம்தான் என்று அது கண்டறிந்துள்ளது. கணக்கெடுக்கப்பட்டவர்களில் சுமார் 29% பேர் வேலையின்மை தங்கள் வாக்குகளைப் பாதிக்கும் முக்கிய காரணியாக இருக்கிறது என்று கூறியுள்ளனர். இரண்டாவது பெரிய பிரச்சனை விலைவாசி உயர்வு ஆகும். பதிலளித்தவர்களில் 23% இது மிக முக்கியமான பிரச்சினை என்று கூறியுள்ளனர். கணக்கெடுக்கப்பட்டவர்களில் 52% பேர் இந்த இரண்டு கவலைகளையும் ஒன்றாகக் கூறுகின்றனர்.

 

மக்கள் யாருக்கு வாக்களிக்க திட்டமிட்டாலும், இந்தியாவில் உள்ள முக்கிய பிரச்சனைகள் வேலையில்லா திண்டாட்டம் மற்றும் விலைவாசி உயர்வு என்பதை பலர் ஒப்புக்கொள்கிறார்கள். மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின் போது, ​​அரசியல் வாதிகள் மதம் மற்றும் ஜாதிகளுக்கு இடையே  பிளவு ஏற்படுத்தும் வகையில் அடிக்கடி பேசி வருகின்றனர். ஆனால், வேலையில்லாத் திண்டாட்டம் மற்றும் அதிக விலைவாசிகள் பல்வேறு  பிரிவில் உள்ள மக்களை எவ்வாறு பாதிக்கின்றன என்பதைப் பற்றி அவர்கள் அதிகம் பேசவில்லை.

 

 பிரதமர் மோடியின் ஆட்சியில்  வருமானம் விலைவாசி உயர்வுடன் இருந்ததா என்பதைப் பார்க்க, ExplainSpeaking ஒரு எளிய வழியைக் கொண்டுள்ளது. சம்பளம் 2019-ல் இருந்து குறைந்தது 32% ஆகவும், 2014-ல் இருந்து 64% ஆகவும் அதிகரிக்கவில்லை என்றால், 2014-ல் மோடி பதவியேற்பதற்கு முன் இருந்ததை விட நீங்கள் மோசமாக இருக்கிறீர்கள் என்று அர்த்தம். பணவீக்கம் பணக்காரர்களை விட ஏழைகளை அதிகம் பாதிக்கிறது என்றாலும், அது குறிப்பிட்ட மதங்கள் அல்லது சாதிகளை நேரடியாக குறிவைக்கவில்லை.   


வேலையின்மை அனைவரையும் பாதித்துள்ளது. ஆனால் வெவ்வேறு அளவுகளில். 2016-17 முதல் 2023-24 வரை மத மற்றும் சாதிக் குழுக்களிடையே வேலை தொடர்பான பிரச்சினைகள் எவ்வாறு வேறுபடுகின்றன என்பதை இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையத்தின் (Centre for Monitoring Indian Economy (CMIE)) தரவு காட்டுகிறது. வேலையில்லாத் திண்டாட்டத்தால் அதிகம் பாதிக்கப்பட்டவர்கள் யார் என்பதைப் புரிந்துகொள்ள இந்தத் தரவு உதவுகிறது. 


ஆனால் தரவுகளைப் பார்ப்பதற்கு முன், இங்கே சில அடிப்படைக் கருத்தியல் புரிதல் உள்ளது. பின்வரும் ஏழு தரவு அட்டவணைகள் பின்வரும் நான்கு மாறிகள் பற்றிய தகவலை வழங்குகின்றன:  


1. உழைக்கும் வயது மக்கள் தொகை (working-age population): இது 15 வயதுக்கு மேற்பட்ட மொத்த மக்கள் தொகை மட்டுமே. 


2. தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labour Force Participation Rate (LFPR)): உழைக்கும் வயது மக்களில் தீவிரமாக வேலை தேடும் நபர்களின் சதவீதம். இது 35 வயதான திருமணமான பெண், வேலை வேட்டையில் ஈடுபடாதவர், 22வயது மாணவர் அல்லது ஓய்வு பெற்ற 65 வயது முதியவர் போன்றவர்களை விலக்குகிறது. LFPR ஒரு பொருளாதாரத்தில் வேலைகளுக்கான தேவையைக் காட்டுகிறது.


3. வேலையின்மை விகிதம் (Unemployment Rate (UER)): வேலையின்மை விகிதம் தீவிரமாக வேலை தேடுபவர்களைக்  குறிக்கிறது.  இது தொழிலாளர் சக்தியின் சதவீதமாக கணக்கிடப்படுகிறது. வேலைச் சந்தை எவ்வளவு ஆரோக்கியமானது என்பதை அளவிட வேலையின்மை விகிதம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.


இந்தியாவில், தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்து வருவதால், வேலையின்மை விகிதம் தவறாக  வழிநடத்தப்படுகிறது. நீண்ட காலமாக வேலையில்லாமல் இருப்பவர்கள் வேலை தேடுவதை நிறுத்தும்போது இது நிகழலாம். எனவே, வேலையின்மை விகிதம் குறைந்தால், அதிக வேலைகள் கிடைக்கும் என்று அர்த்தமில்லை. வேலைச் சந்தையின் முழுப் படத்தைப் புரிந்துகொள்ள வேலையின்மை விகிதம் மற்றும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் இரண்டையும் ஒன்றாகப் பார்ப்பது சிறந்தது. 


4. வேலைவாய்ப்பு விகிதம் (Employment Rate (ER)): வேலைவாய்ப்பு விகிதம் இந்தியாவில் வேலைவாய்ப்பின் ஆரோக்கியத்தை அளவிடுவதற்கான மிகவும் நம்பகமான வழியாகக் கருதப்படுகிறது. பணிபுரியும் வயதினரின் மொத்த எண்ணிக்கையை மொத்தமாகப் பிரிப்பதன் மூலம் இது கணக்கிடப்படுகிறது. காலப்போக்கில் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் நிறைய மாறும் பொருளாதாரத்தில் வேலையின்மை விகிதத்தை விளக்கும்போது எழும் சிக்கல்களை இந்த அளவீடு தவிர்க்கிறது.


வேலை வாய்ப்பு விகிதம் ஒரு பொருளாதாரத்தில் வேலை எவ்வளவு ஆரோக்கியமானது என்பதைக் காட்ட தெளிவான எணிக்கையை வழங்குகிறது. இது அதிகரித்துக் கொண்டிருந்தால், அதிகமான மக்கள் (உழைக்கும் வயதுடைய மொத்த மக்கள்தொகையின் சதவீதத்தில்) வேலை தேடுகிறார்கள் என்று அர்த்தம். அது குறைகிறது என்றால், மக்கள்தொகையின் சதவீதத்தில் குறைவான நபர்களுக்கு வேலை உள்ளது என்று அர்த்தமாகும்.  

  

உழைக்கும் வயது மக்கள் தொகை:


இந்தியாவின் உழைக்கும் வயது மக்கள் தொகை 2016-17-ல் 96.45 கோடியிலிருந்து 2023-24-ல் 113.86 கோடியாக 18.1% அதிகரித்துள்ளது.


இந்த அதிகரிப்பில் இந்துக்களின் பங்கு 86%, அவர்களின் உழைக்கும் வயது மக்கள் தொகை 18% அதிகரித்துள்ளது.


  முஸ்லீம் மதத்தவரில் உழைக்கும் வயது மக்கள் தொகை 13.5% அதிகரித்துள்ளது. இது உழைக்கும் வயது மக்கள்தொகையில் 9.54% ஆகும்.


கிறிஸ்தவ மதத்தவரில் உழைக்கும் வயது மக்கள்தொகை, சிறியதாக இருந்தாலும், 48% அதிகரித்துள்ளது.


தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (Labor force participation rate by religion (LFPR)):


இந்தியா போன்ற வளரும் பொருளாதாரத்தில், குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை  விட அதிக தொழிலாளர் பங்கேற்பு விகிதம் சிறந்ததாகக் கருதப்படுகிறது.


LFPR குறைவதை விட காலப்போக்கில் அதிகரிக்கிறது என்றால் அதுசிறந்ததாகக் கருதப்படுகிறது.


இந்தியாவின் ஒட்டுமொத்த தொழிலாளர் பங்கேற்பு விகிதம்  2016-17ல் குறைவாக இருந்தது மற்றும் எட்டு ஆண்டுகளில் 5.8% குறைந்துள்ளது.  LFPR-ன் மிகப்பெரிய வீழ்ச்சி 86% மக்கள்தொகை கொண்ட இந்துக்களிடமிருந்து வருகிறது. வேலை தேடும் வயதுடைய இந்துக்களின் சதவீதம் 2016-17- ல் 46.6% ஆக இருந்து மார்ச் 2024-ல் 40.53% ஆக குறைந்துள்ளது. இது 6சதவீத புள்ளிகளுக்கு மேல் குறைந்துள்ளது.


 முஸ்லிம்கள் தொடர்ந்து குறைந்த LFPR-ஐப் பெற்றுள்ளனர். அவர்களின் சரிவு 5.2 சதவீத புள்ளிகளில் சற்று குறைவாக உள்ளது. 


மத வாரியான வேலையின்மை விகிதம் (Religion-wise Unemployment Rate (UER)):


 தொழிலாளர் பங்கேற்பு விகிதம் வீழ்ச்சியுடன், வேலையின்மை விகிதமும் குறையும் என்று ஒருவர் எதிர்பார்க்கலாம். ஏனெனில், குறைவான மக்கள் வேலைகளைத் தேடுகிறார்கள். இருப்பினும்,  இந்தியாவின் வேலையின்மை விகிதம் 2023-24-ல் 8.03% ஆக இருந்தது, 2016-17-ல் 7.42% அதிகமாக இருந்தது. இந்த ஆண்டுகளுக்கு இடையில், வேலையின்மை விகிதம் வேறுபட்டது. 2017-18-ல் அதன் குறைந்தபட்சமாக 4.69% ஆகவும். COVID-19 தொற்றுநோய்களின் போது 2020-21-ல் 8.73% ஆகவும் இருந்தது.


உழைக்கும் வயதுடைய மக்களில், சுமார் 86% இந்துக்கள், எனவே இந்துக்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் ஒட்டுமொத்த விகிதத்தை பாதிக்கிறது. 2016-17 இல், இது 7.28% ஆக இருந்தது, கோவிட்-19 தொற்றுநோய்களின் போது 2020-21 இல் 8.73% ஆக இருந்தது. இது 2022-23ல் 7.59% ஆகக் குறைந்தது, ஆனால் 2023-24ல் 8.07% ஆக உயர்ந்தது.


முஸ்லீம்களிடையே வேலையின்மை விகிதம் 2016-17-ல் அதிகபட்சமாக 8.79% ஆகவும், 2017-18-ல் 5.31% ஆகவும், தொற்றுநோய்களின் போது 2020-21 இல் 9.22% ஆகவும் இருந்தது. இது அடுத்த இரண்டு ஆண்டுகளில் 1.5 சதவீத புள்ளிகள் குறைந்து, 2023-24ல் 8% ஆக முடிந்தது. இது இந்துக்களை விட சற்று குறைவாகும்.


2016-17-ல் சீக்கியர்கள் குறைந்த வேலையின்மை விகிதம் 6.4% ஆக இருந்தது. 2023-24-ல், இது 8.94% ஆக உயர்ந்தது. இது அனைத்து சமூகங்களுக்கும் வேலையின்மை அதிகமாக இருந்தபோது, ​​2020-21 கோவிட்-19 ஆண்டில் 9.09% ஆக இருந்தது.


மதம் வாரியான வேலைவாய்ப்பு விகிதம்:


இந்தியாவில் இது ஒரு முக்கியமான நடவடிக்கை. கடந்த எட்டு ஆண்டுகளில் இந்தியாவின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பு விகிதம்  5.6 சதவீத  புள்ளிகள் குறைந்துள்ளது.  வேலை செய்யும் வயதுடைய இந்தியர்களின் சதவீதம் 2016-17-ல் 42.8% ஆக இருந்து 2023-24-ல் 37.2% ஆகக் குறைந்துள்ளது.


  இந்துக்கள் மத்தியில் வேலைவாய்ப்பு விகிதம் மிகப்பெரிய சரிவைக் கண்டது. 2023-24-ல் கிட்டத்தட்ட 6 சதவீத புள்ளிகள் குறைந்து 37.26% ஆக இருந்தது.


2016-17-ல் முஸ்லிம்கள் மத்தியில் வேலையின்மை விகிதம் மிகக் குறைவாக இருந்தது மற்றும் 2023-24 இல் 4.45 சதவீத புள்ளிகள் குறைந்து 35.5% ஆக இருந்தது, இது அனைத்து மத சமூகங்களிலும் மிகக் குறைவு.


இந்துக்களுக்குள் இருக்கும் சாதிகள் குறித்து:


கடந்த எட்டு ஆண்டுகளில் இந்துக்களிடையே வேலை செய்யும் நபர்களின் எண்ணிக்கை மிகவும் குறைந்துள்ளது என்று தரவு காட்டுகிறது. ஆனால், இந்துக்களுக்குள் எந்த சாதியினர் அதிக வேலை இழப்பை சந்தித்துள்ளனர்? கண்டுபிடிக்க, குறிப்பிட்ட தரவு அட்டவணைகளைப் பார்க்க வேண்டும்.


சாதி வாரியாக உழைக்கும் வயது மக்கள் தொகை:


உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் 60% பேர்  இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர். மேலும் 23% பேர் பட்டியலிடப்பட்ட சாதியினராக உள்ளனர். இந்த இரு பிரிவினரும் இந்துக்களின் மொத்த உழைக்கும் வயதுடைய மக்கள் தொகையில் கிட்டத்தட்ட 82% ஆகவும், அதிக வளர்ச்சியைக் கண்டுள்ளனர்.


சாதி வாரியான தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (LFPR):


அனைத்து சாதியினருக்கும் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் குறைந்துள்ளது. இருப்பினும்,  உயர் சாதி இந்துக்கள் மிகக் குறைந்த தொழிலாளர் பங்கேற்பு விகிதத்தை கொண்டுள்ளனர்.


சாதி வாரியான வேலையின்மை விகிதம்:


தொழிலாளர் பங்கேற்பு விகிதம்  குறையும் போது, ​​வேலையின்மை விகிதம் குறைய வேண்டும். இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்களுக்கு இது நிகழ்கிறது. அங்கு வேலையின்மை விகிதம் 7.7% லிருந்து 7.4% ஆக குறைகிறது. ஆனால், உயர் சாதி இந்துக்களுக்கு இது பொருந்தாது. அவர்களின் UER 2016-17-ல் 8.62% ஆக இருந்தது. ஆனால், 2023-24-ல் 9.83% ஆக உயர்ந்தது.  

 

சாதி வாரியான வேலைவாய்ப்பு விகிதம் (Employment Rate):


 அனைத்து சாதிகளிலும் வேலைவாய்ப்பு விகிதங்கள் குறைந்துள்ளன.    2016-17-ல் உயர் சாதியினருடன் ஒப்பிடும்போது அதிக வேலையின்மை விகிதம் கொண்டிருந்த பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்கள் மற்றும் பட்டியலிடப்பட்ட சாதியினர் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளனர். 2023-24-ல் அவர்களின் வேலை வாய்ப்பு விகிதங்கள் (Employment Rate) உயர் சாதியினருக்கு 4.21 சதவீத புள்ளி வீழ்ச்சியுடன் ஒப்பிடும்போது, ​​இரு பிரிவினருக்கும் 6.36 சதவீத புள்ளிகள் குறைவாக இருந்தன. 


 உயர் சாதி இந்துக்கள் 2016-17 -ல் மிகக் குறைந்த வேலைவாய்ப்பு விகிதத்தைக் கொண்டிருந்தனர். மேலும், இந்தப் போக்கு இன்னும் குறைந்த மட்டத்தில் இருந்தாலும் தொடர்கிறது.




Original article:

Share: