இந்தியாவின் முறைசாரா பொருளாதாரத்தின் நிலை -Aanchal Magazine

 கடந்த 7 ஆண்டுகளில், பல நிறுவனங்கள் மூடப்பட்டன. இது முறைசாரா விவசாயம் அல்லாத துறையில் (non-farm informal economy) 16.45 லட்சம் வேலைகள் இழப்புக்கு வழிவகுத்தது என்று இணைக்கப்படாத நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பின் (Annual Survey of Unincorporated Enterprises) தரவு தெரிவிக்கிறது. ஒட்டுமொத்த நிலைமைக்கு இது என்ன அர்த்தம்?


இந்தியாவில் முறைசாரா துறையானது (informal sector), சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (small and medium enterprises), வீட்டு உரிமையாளர் நிறுவனங்கள் (household proprietary) மற்றும் கூட்டாண்மை (partnership) ஆகியவற்றை உள்ளடக்கியதாகும். இது இந்தியாவின் பொருளாதார உற்பத்தியில் ஏறக்குறைய பாதி அளவிற்கு பங்களிப்பதோடு, நான்கில் மூன்று பங்கு பணியாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இருப்பினும், இணைக்கப்படாத நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பின் (Annual Survey of Unincorporated Enterprises (ASUSE)) சமீபத்திய தரவுக்கான சவால்களை எடுத்துக்காட்டுகிறது.  கடந்த ஏழு ஆண்டுகளில் பல நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. இதனால் சுமார் 16.45 லட்சம் வேலை இழப்பு ஏற்பட்டது.


சமீபத்தில், தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (National Sample Survey Office (NSSO)) 2021-22 மற்றும் 2022-23 ஆய்வுகளின் முடிவுகளை வெளியிட்டது. நவம்பர் 2016-ல் பணமதிப்பு நீக்கம் (demonetisation), ஜூலை 2017-ல் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகம் மற்றும் மார்ச் 2020-ல் தொடங்கிய கோவிட்-19 தொற்றுநோய் (Covid-19 pandemic) ஆகிய மூன்று பெரிய நிகழ்வுகள் பொருளாதாரத்தை எவ்வாறு பாதித்தன என்பதை இந்த ஆய்வுகள் காட்டுகின்றன. 


கோவிட்-19 தொற்றுநோய்களின் போது, முறைசாரா உற்பத்தி (Informal manufacturing) நிறுவனங்கள் முன்பை விட மிகவும் பாதிக்கப்பட்டன. இந்தத் துறையில் பெரும்பாலான புதிய வேலைகள், மற்றவர்களை வேலைக்கு அமர்த்துவதைக் காட்டிலும் சுயதொழில் செய்யும் நிறுவனங்களை நடத்துவதன் மூலம் புதிய தொழில்கள் உருவாக்கப்பட்டன. இது, வேலைவாய்ப்புக்கான தர எண்ணிக்கையில் சரிவைக் காட்டுகின்றன.


இணைக்கப்படாத நிறுவனங்கள்  (unincorporated enterprises) என்றால் என்ன?


இவை அமைப்புசாரா அல்லது முறைசாரா துறையில் உள்ள நிறுவனங்களாகும். இதில் சிறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (Micro, Small and Medium Enterprises (MSME)), ஒப்பந்த தொழிலாளர்களைக் கொண்ட சொந்த நிறுவனங்கள் (household units) மற்றும் சொந்தக் கணக்கு நிறுவனங்கள் (own-account enterprises) ஆகியவை அடங்கும். உற்பத்தி, வர்த்தகம் மற்றும் "பிற சேவைகள்" ஆகிய மூன்று துறைகளில் இணைக்கப்படாத விவசாயம் அல்லாத நிறுவனங்களுக்காக (unincorporated non-agricultural establishments) ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன. 


தொழிற்சாலைகள் சட்டம், 1948 (Factories Act, 1948) இன் கீழ் ஒழுங்குபடுத்தப்படாத உற்பத்தித் துறைகள் மற்றும் தொழில்துறையின் வருடாந்திர கணக்கெடுப்பில் சேர்க்கப்படவில்லை. பருத்தி கத்தரித்தல் (cotton-ginning), சுத்தம் செய்தல் (cleaning), உருளையால் தூர்வாருதல் (bailing), பீடி மற்றும் சுருட்டு உற்பத்தி (manufacturing bidi and cigar) போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள முறைசாரா நிறுவனங்களும் இதில் அடங்கும். கூடுதலாக, மத்திய மின்சார ஆணையத்தில் (Central Electricity Authority (CEA)) பதிவு செய்யப்படாத, சுதந்திரமான மின்சாரத்தை உற்பத்தி செய்யும், கடத்தும் மற்றும் விநியோகிக்கும் மின்சார அலகுகளும் சேர்க்கப்பட்டுள்ளன.


வர்த்தகம் மற்றும் பிற சேவைகளின் கீழ், கணக்கெடுக்கப்பட்ட நிறுவனங்களில் தனியுரிமை மற்றும் கூட்டாண்மை வணிகங்கள் (வரையறுக்கப்பட்ட பொறுப்பு கூட்டாண்மை நிறுவனங்கள் தவிர), அத்துடன் சங்கங்கள், அறக்கட்டளைகள், கிளப்புகள், தனிநபர்களின் அமைப்புகள், கூட்டுறவு, சுய உதவி குழுக்கள் மற்றும் இலாப நோக்கற்ற நிறுவனங்கள் ஆகியவை அடங்கும்.


இந்த ஆய்வு முடிவுகள் ஏன் முக்கியமானவை?


2021-22 மற்றும் 2022-23 சுற்றுகளுக்கு முன்பு, சமீபத்திய தரவு 2015-16-ல் இருந்து கிடைத்தது. 2018-19 போன்ற முந்தைய சுற்றுகளின் சில முடிவுகள் பொதுவில் வெளியிடப்படவில்லை.


வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், அரை திறன் (semi-skilled) மற்றும் திறமையற்ற தொழிலாளர்களை (unskilled workers) பணியமர்த்துவதற்கும் முறைசாரா துறை முக்கியமானது. குறிப்பாக, முறையான துறை மந்தநிலையின் போது, ​​மக்கள் வேலைவாய்ப்புப் போக்குகளை உன்னிப்பாகக் கண்காணிக்கின்றனர்.


2016-ல் திடீரென பணம் திரும்பப் பெறப்பட்டது. 2017-ல் ஒழுங்குமுறை மாற்றங்கள் மற்றும் வரி இணக்கம் மற்றும் 2020 முதல் 2021 வரையிலான தேசிய அளவில் தடைக்காலம் போன்ற குறிப்பிடத்தக்க நிகழ்வுகளின் தாக்கத்தைப் புரிந்துகொள்வதற்கான தரவுகளை ஆய்வுகள் வழங்குகின்றன.


துறைகளின் போக்கு என்ன?

2022-23 மற்றும் 2015-16 ஆகிய ஆண்டுகளுக்கு இடையே நிறுவனங்களின் எண்ணிக்கை அதிகரித்த போதிலும், முறைசாரா துறை வேலைவாய்ப்புள் குறைந்துள்ளன. சொந்தக் கணக்கு நிறுவனங்கள் ஏழு ஆண்டுகளில் கிட்டத்தட்ட 4% வளர்ந்துள்ளன. அதே நேரத்தில் கூலித் தொழிலாளி நிறுவனங்கள் 3.2% குறைந்துள்ளன. 


தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவதை விட, அதிகமான அலகுகள் சொந்தமாக, பொதுவாக வீட்டு அல்லது தனி நபர் அலகுகளாக மாறியதால், வேலையின் தரம் குறைவதை இந்த மாற்றம் அறிவுறுத்துகிறது. இந்த மாற்றம் குறிப்பாக அதிக மூலதன-தீவிர முறைகளை நோக்கி நகரும் உற்பத்தி போன்ற உழைப்பு மிகுந்த துறைகளை பாதிக்கிறது.


காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பின் தரவானது வேலைவாய்ப்பு முறைகளிலும் மாற்றங்களைக் காட்டுகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விவசாயத்தில் அதிகளவில் வேலை செய்கின்றனர். அதே சமயம், உற்பத்தியில் குறைந்தளவே வேலை செய்கின்றனர். காலமுறை தொழிலாளர் கணக்கெடுப்பு  2022-23 இன் படி, 2017-18ல் 42.5% ஆக இருந்த விவசாயத்தில் வேலை செய்பவர்களின் சதவீதம் 45.8% ஆக அதிகரித்துள்ளது. மேலும், விவசாயத்தில் பெண்களின் பங்களிப்பும் 2018-19ல் 55.3% ஆக இருந்து 2022-23ல் 64.3% ஆக உயர்ந்துள்ளது. இது, பெரும்பாலும் ஊதியம் இல்லாத வீட்டு வேலைகளில் இந்த எண்ணிக்கை பொருந்தும்.


சாதரணமாக, உபரி உழைப்பு முறைசாரா வேலைகளில் (விவசாயம் மற்றும் கட்டுமானம் உட்பட) இருந்து முறையான துறைக்கு (உற்பத்தி மற்றும் அதிக உற்பத்தித்திறன் சேவைகள் போன்றவை) மாற வேண்டும். ஆனால், இதை உறுதிப்படுத்த முறையான துறையிலிருந்து தரவுகள் எதுவும் இல்லை. 


ஒட்டுமொத்தமாக, 2022-23ல் முறைசாரா துறையில் பணிபுரிந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை 2015-16ல் 11.13 கோடியிலிருந்து 16.45 லட்சம் (அதாவது, 1.5%) குறைந்து 10.96 கோடியாக குறைந்துள்ளது. அதே சமயம், 2015-16ல் 6.33 கோடியாக இருந்த ஒருங்கிணைக்கப்படாத நிறுவனங்களின் (unincorporated enterprises) எண்ணிக்கை 2022-23ல் 16.56 லட்சம் அதிகரித்து 6.50 கோடியாக அதிகரித்துள்ளது.


துறைகளின் போக்கு என்ன?


2022-23 மற்றும் 2015-16 க்கு இடையில், உற்பத்திக்கான அலகுகள் 9.3% குறைந்து 1.78 கோடியாக உள்ளது. உற்பத்தித் தொழிலாளர்களின் எண்ணிக்கையும் 15% குறைந்து 3.06 கோடியாக உள்ளது. 2022-23 இல், வர்த்தகத் துறை அலகுகள் 2.26 கோடியாகக் குறைந்துள்ளது. 


2015-16 இல் இருந்து 2022-23 ஆம் ஆண்டு வரை, வர்த்தகத் துறையில் 2% சரிவு ஏற்பட்டு நிறுவனங்கள் 2.26 கோடியாகக் குறைந்துள்ளது. இந்த நேரத்தில், தொழிலாளர்களின் எண்ணிக்கையும் 0.8% அதிகரித்து 3.90 கோடியாக இருந்தது.


சேவைத் துறையில் நிறுவனங்களின் எண்ணிக்கை 19.1% அதிகரித்து 2.46 கோடியாகவும். பணியாளர்களின் எண்ணிக்கை 9.5% அதிகரித்து கிட்டத்தட்ட 4 கோடியாகவும் உள்ளனர்.


கடந்த 12 ஆண்டுகளில், 2010-11ல் தொடங்கி, அடுத்த ஏழு ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது, ​​முதல் ஐந்து ஆண்டுகளில் (2010-11 முதல் 2015-16 வரை) நிறுவனங்கள் மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை மிக விரைவாக அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


உதாரணமாக, 2010-11 முதல் 2015-16 வரை உற்பத்தி நிறுவனங்களின் எண்ணிக்கை 14.3% மற்றும் தொழிலாளர்களின் எண்ணிக்கை 3.3% அதிகரித்துள்ளது. இந்த காலகட்டத்தில் வர்த்தக நிறுவனங்கள் 11% மற்றும் அத்துறையில் உள்ள தொழிலாளர்கள் 13.5% அதிகரித்துள்ளது.


2010-11 மற்றும் 2015-16 க்கு இடையில், சேவைத் துறையில் தொழிலாளர்களின் எண்ணிக்கை 6.4% குறைந்துள்ளது. இருப்பினும், 2015-16 முதல் 2022-23 வரை, இது 9.5% அதிகரித்துள்ளது. இதேபோல், 2015-16 முதல் 2022-23 வரை இந்தத் துறையில் நிறுவனங்களின் எண்ணிக்கை 19.1% அதிகரித்துள்ளது. இது முந்தைய காலகட்டத்தை ஒப்பிடும்போது 4.9% அதிகரித்துள்ளது.


வெளியீட்டின் தரவு என்ன காட்டுகிறது?


2022-23ல், ஒரு நிறுவனத்திற்கான மொத்த மதிப்பு கூட்டல் (Gross Value Added (GVA)) 2015-16ல் ரூ.1.82 லட்சத்தில் இருந்து ரூ.2.38 லட்சமாக உயர்ந்துள்ளது. இதற்கிடையில், ஒரு தொழிலாளிக்கான மொத்த மதிப்பு கூட்டல்  ரூ.1.04 லட்சத்தில் இருந்து ரூ.1.42 லட்சமாக அதிகரித்துள்ளது.


இருப்பினும், உண்மையில், வளர்ச்சி மெதுவாக இருந்தது. ஒருங்கிணைக்கப்படாத துறை நிறுவனங்களின் உண்மையான மொத்த மதிப்பு கூட்டல் (GVA) 2022-23ல் 6.9% வளர்ந்துள்ளது. ஆனால், இது தொற்றுநோய்க்கு முந்தைய நிலையை விட குறைவாகவே இருந்தது. 2010-11 முதல் 2015-16 வரையிலான 7.4% கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதத்திற்கு (compounded annual growth rate(CAGR)) மாறாக, 2015-16 முதல் 2022-23 வரை,  உண்மையான மொத்த மதிப்பு கூட்டலின் (GVA) கூட்டு வருடாந்திர வளர்ச்சி விகிதம் (compounded annual growth rate(CAGR)) குறைந்துள்ளது என்று இந்திய மதிப்பீடுகள் குறிப்பிட்டுள்ளன.


மாநிலங்கள் தோறும் முறைசாரா வேலைவாய்ப்பு முறை என்ன?


2022-23ல், 34 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்களில்  (ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் தவிர்த்து) அமைப்புசாராத் துறைப் பணியாளர்கள் தேசிய மாதிரி கணக்கெடுப்பின் 73-வது சுற்றுடன் இணைக்கப்படாத நிறுவனங்களின் 2015-16 உடன் ஒப்பிடும்போது குறைந்துள்ளது. தொற்றுநோய்க்குப் பிறகு, பல மாநிலங்கள் முறைசாரா துறை தொழிலாளர்களின் விகிதத்தில் அதிகரிப்பு, பொருளாதார நெருக்கடி மற்றும் முறையான துறையிலிருந்து விலகிச் செல்வதைக் காட்டுகின்றன.



Original article:

Share:

தனியார் துறையில் உள்ளூர் மக்களுக்கான இடஒதுக்கீடு குறித்த கர்நாடகா அரசின் மசோதா ஏன் கைவிடப்பட வேண்டும்? - Editorial

 கர்நாடகா மாநில அரசின் இந்த சட்ட மசோதா, அரசியல் மற்றும் பொருளாதாரத்திற்கு பெரும் சிக்கலாக உள்ளது. இத்தகைய கட்டுப்பாடான இட ஒதுக்கீடுகள் பெங்களூரு போன்ற பொருளாதார நகரங்களில் அதிக பாதிப்பை ஏற்படுத்தலாம். அவை அவற்றின் திறந்த பொருளாதாரத்தால் செழித்து வருகின்றன.


சர்ச்சைக்குரிய இந்த சட்ட மசோதாவுக்கு கர்நாடக அரசு ஒப்புதல் அளித்துள்ளது. தொழிற்சாலைகள், மற்றும் பிற நிறுவனங்கள், நிர்வாகப் பணிகளுக்கு 50% உள்ளூர் மக்களையும், மேலாண்மை அல்லாத பணிகளுக்கு 75% உள்ளூர் மக்களை பணியமர்த்த வேண்டும். தொழில்கள், தொழிற்சாலைகள் மற்றும் பிற நிறுவனங்களில் உள்ளூர் மக்களுக்கான கர்நாடக மாநில வேலைவாய்ப்பு மசோதா, 2024 (Karnataka State Employment of Local Candidates in the Industries, Factories and Other Establishments Bill, 2024), திங்கள்கிழமையன்று கர்நாடகா  அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டது. தகுதியான உள்ளூர் மக்கள் கிடைக்கவில்லை என்றால், நிறுவனங்கள் மூன்று ஆண்டுகளுக்குள் உள்ளூர் மக்களுக்கு பயிற்சி அளித்து வேலைக்கு அமர்த்த வேண்டும்.  


ஆந்திரப் பிரதேசம் (2019) மற்றும் ஹரியானா (2020) போன்ற மாநிலங்கள் இதற்க்கு முன்பு இதே போன்ற சட்டங்களை இயற்றியுள்ளன. இருப்பினும், இத்தகைய சட்டங்கள் மற்ற மாநிலங்களைச் சேர்ந்த இந்தியர்களுக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றம் இதேபோன்ற சட்டத்தை ரத்து செய்தது. இது ஹரியானாவில் வசிக்காதவர்களுக்கு வாழ்வாதாரத்தை ஈட்டுவதற்கான அடிப்படை உரிமைகளை கட்டுப்படுத்துவதன் மூலம் அரசியலமைப்பை மீறுவதாகக் கூறியது.


இந்தச் சட்டங்களை இயற்றுவதற்கான அரசியல் முயற்சிகள் இந்தியாவில் பரவலான வேலையின்மை கவலைகளுக்கு மத்தியில் ஏற்படுகின்றன. மாநில அரசாங்கம் மாநில மக்களால் தேர்ந்தெடுக்கப்படுவதால், முதல்வர்கள் தங்கள் வாக்காளர்களின் நலன்களைப் பாதுகாப்பது முக்கியமாகிறது. இருப்பினும், இந்தக் கொள்கைகளில் குறிப்பிடத்தக்க சிக்கல்கள் உள்ளன. 

 

முதலாவதாக, பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்கள் இது போன்ற சட்டங்களை இயற்றின ஆனால் இந்த சட்டம் குடிமக்கள் இந்தியா முழுவதும் சுதந்திரமாக நடமாடுவதற்கும், வாழ்வாதாரம் சம்பாதிப்பதற்குமான அரசியலமைப்பு உரிமைக்கு எதிராக பாகுபாடு காட்டுவதாக வாதிடப்படுகிறது. 

 

இரண்டாவதாக, அவைகள், அரசாங்கத்தின் மிதமிஞ்சிய கண்காணிப்பு இராஜ்ஜியத்தை (inspector-raj) மீண்டும் அறிமுகப்படுத்தலாம். இந்த அமைப்பின் கீழ், வெளிமாநில தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தும் நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட வேண்டுமா என்பதை  அதிகாரிகள் தீர்மானிப்பார்கள். இது தொழிலாளர்களை வாடகைக்குத் தேடும் நடத்தையை ஊக்குவிக்கும்.

மூன்றாவதாக, இத்தகைய சட்டங்கள் தனியார் துறைக்கு தீங்கு விளைவிக்கும். இந்திய இளைஞர்களுக்கு போதுமான வேலை வாய்ப்புகளை அரசாங்கங்களால் உருவாக்க முடியாது. எனவே, தனியார் துறையை வளரச் செய்வதற்கும் வேலைகளை உருவாக்குவதற்கும் கவனம் செலுத்த வேண்டும். இந்தச் சட்டங்கள் நிறுவனங்களுக்கான செலவுகளை அதிகரிக்கும். சிறந்த திறமையாளர்களை ஈர்க்கும் திறனைக் குறைக்கும், மேலும் ஒட்டுமொத்த செயல்திறன் மற்றும் லாபத்தைக் குறைக்கும். இம்மாதிரி சட்டங்கள், குருகிராம் மற்றும் பெங்களூரு போன்ற நகரங்களின் பொருளாதாரத்தை தடுக்க முடியும். ஏனென்றால், அந்த நகரங்கள் பொருளாதார வெளிப்படைத்தன்மையினால் செழித்து வருகின்றன.



Original article:

Share:

இந்தியா முழுவதும் பரவலாக மழை பொழிவதற்கு காரணம் என்ன ? -அஞ்சலி மாரார்

 இந்த மாத தொடக்கத்தில் இருந்து, பல வானிலை அமைப்புகள் தென்னிந்தியா, கிழக்குப் பகுதிகள், வடகிழக்கு பகுதிகள் மற்றும் மத்திய இந்தியா முழுவதும் பருவமழையின் வீரியத்தை அதிகரித்துள்ளன.


இந்த பருவத்தில் தென்மேற்கு பருவமழை நாடு முழுவதும் தீவிரமாக உள்ளது. கடந்த வாரம், அஸ்ஸாம், மேற்கு வங்காளம், உத்தரபிரதேசம், உத்தரகாண்ட், குஜராத், கடலோர மகாராஷ்டிரா, கர்நாடகா, கேரளா மற்றும் லட்சத்தீவுகள் உட்பட நாட்டின் 80% க்கும் அதிகமான இடங்கள் அதிக மழைப்பொழிவை பெற்றன.


பரவலான மழைக்கு என்ன காரணிகள் காரணமாகின்றன?


தென்மேற்கு பருவமழை வழக்கத்தை விட ஆறு நாட்களுக்கு முன்னதாக, ஜூலை 2-ஆம் தேதிக்குள் நாடு முழுவதும் விரிவடைந்தது. ஜூலை தொடக்கத்தில் இருந்து, சாதகமான வானிலை அமைப்புகள் தென், கிழக்கு, வடகிழக்கு மற்றும் மத்திய இந்தியா முழுவதும் பருவமழையை  தீவிரமாக வைத்திருக்கின்றன.


மழைப்பொழிவு அதிகரிப்பதற்கு இரண்டு முக்கிய காரணிகள்  உள்ளன: அரபிக்கடலில் இருந்து தொடர்ந்து ஈரமான மேற்குக் காற்று வீசுவது மற்றும் தென் திசையில் நகர்வது பருவமழையின் தொடக்கத்தை குறிக்கும். இந்த மாற்றம் மத்திய, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் அதிக மழைப்பொழிவுக்கு வழிவகுத்தது.


இரண்டு முக்கிய காரணிகள் இந்தியாவில் பருவமழையை அதிகரிக்க செய்கின்றன. ஒன்று, பாகிஸ்தானிலிருந்து வங்காள விரிகுடா வரை நீண்டு செல்லும் பருவகால குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியான பருவமழைக் காற்றின் நகர்வு (monsoon trough). இது தெற்கு நோக்கி நகரும் போது  மத்திய, கிழக்கு மற்றும் தென்னிந்தியாவில் அதிக மழை பொழிகிறது. மாறாக, அது வடக்கு நோக்கி நகரும் போது, ​​இமயமலை அடிவாரத்தில் அதிக மழை பெய்யும் அதே நேரத்தில் இந்தியாவின் பிற பகுதிகள் குறைவாகப் மழை பெய்ய வாய்ப்புள்ளது.


இந்த இரண்டு  காரணிகளையும் தாண்டி, பிற வானிலை அமைப்புகளும் இந்தியாவின் வடமாநிலங்களைத் தவிர, இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் பரவலான மழைப்பொழிவு கிடைத்துள்ளது. இவற்றில் முக்கியமான காரணிகள்:


குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி (off-shore trough), தெற்கு குஜராத் முதல் வடக்கு கேரளா வரை இந்தியாவின் கடற்கரையில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, ஒரு வாரத்திற்கும் மேலாக நீடிக்கிறது. மத்திய மற்றும் தென்னிந்தியாவிற்கு இடையே 20°N அட்சரேகையில் காற்று வெட்டு மண்டலத்தின் (wind shear zone) இடைவிடாத வேகத்தின் காரணமாக வெவ்வேறு திசைகளில் காற்று நகரும். திங்கள்கிழமை ஒடிசா கடற்கரைக்கு அருகில் மேற்கு-மத்திய வங்கக் கடலில் தொடக்கத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இந்த அமைப்பு செவ்வாய்க்கிழமை சத்தீஸ்கர் மற்றும் அதை ஒட்டிய விதர்பா அப்பகுதிகளுக்கு மழை பொழிவை கொடுத்தது. பின்னர் புதன்கிழமை தென்கிழக்கு மத்தியப் பிரதேசம் நோக்கி  நகர்ந்தது.


ஜூலை 13-முதல் இந்தியாவின் மேற்குக் கடற்கரைப் பகுதிகளில், குறிப்பாக கொங்கன், கோவா, மத்திய மகாராஷ்டிரா, கடலோர கர்நாடகா மற்றும் கேரளாவின் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் கனமழை பெய்தது. உத்தரகாண்ட், மேற்கு உத்தரபிரதேசம், குஜராத், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களிலும் கனமழை பெய்தது. இந்த பிராந்தியங்களுக்கான முன்னறிவிப்பு என்ன?


தென்னிந்தியா, கிழக்கு இந்தியா மற்றும் இமயமலை மாநிலங்களில் இந்த வாரம் முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமாக இருக்கும். வெள்ளிக்கிழமையன்று, வடமேற்கு வங்கக் கடலில் ஒரு புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவாகும், அடுத்த ஐந்து நாட்களில் கிழக்கு மற்றும் மத்திய இந்தியாவில் தொடர்ந்து மழை பெய்யும்.


அடுத்த நான்கைந்து நாட்களுக்கு பருவமழை அதன் வழக்கமான நிலையிலிருந்து தெற்கே இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கட்ச், சௌராஷ்டிரா, கொங்கன், கோவா, கடலோர கர்நாடகா மற்றும் தெற்கு உள்துறை கர்நாடகா ஆகிய பகுதிகளுக்கு இந்திய வானிலை ஆய்வது மையம் சிவப்பு நிற எச்சரிக்கை (அதாவது நடவடிக்கை எடுப்பது) விடுத்துள்ளது. வியாழக்கிழமை இந்த பகுதிகளில் கனமழை முதல் மிக கனமழை வரை (24 மணி நேரத்தில் 115 மிமீ முதல் 204 மிமீ வரை) எதிர்பார்க்கப்படுகிறது. 


ஜூலை 19 அன்று, குஜராத், மேற்கு மத்தியப் பிரதேசம், மத்திய மகாராஷ்டிரா, கொங்கன், கோவா, கடலோர மற்றும் உள்நாடு கர்நாடகா, கேரளா, தெலுங்கானா, ஆந்திரப் பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய பகுதிகளுக்கு 'ஆரஞ்சு' எச்சரிக்கை (தயாராக இருப்பதற்கானது) விடுக்கப்பட்டுள்ளது. அதே நாளில், உத்தரகாண்ட், இமாச்சலப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், விதர்பா, கிழக்கு மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் மற்றும் மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களுக்கு 'மஞ்சள்' எச்சரிக்கை (எச்சரிக்கையாக இருப்பதற்கானது) இடி, மின்னல் மற்றும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வார இறுதியில், தமிழகம் மற்றும் மத்திய இந்தியாவைத் தவிர்த்து, தென்னிந்தியா முழுவதும் கனமழை எதிர்பார்க்கப்படுகிறது. சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும்.


வியாழன் முதல், இமயமலை மாநிலங்கள் மற்றும் வடமேற்கு இந்தியா வரை மழை பெய்யும். ராஜஸ்தான், ஹரியானா, பஞ்சாப், மேற்கு உத்தரப்பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்களில் மழைப்பொழிவு அதிகரிக்கும். ஜூலை 19-ஆம் தேதி வங்கக் கடலில் உருவாகும் புதிய குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஒடிசா, கடலோர ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் வியாழக்கிழமை முதல் மழையை அதிகரிக்கும்.


ஒட்டுமொத்தமாக, ஜம்மு காஷ்மீர் மற்றும் அருகிலுள்ள பகுதிகளைத் தவிர, அடுத்த பத்து நாட்களுக்கு இந்தியா முழுவதும் குறிப்பிடத்தக்க மழை பொழிவு இருக்கும். நாட்டின் பல பகுதிகளில் ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் மழை பொழிவு குறைவாக இருக்கும் என்று  எதிர்பார்க்கப்படுகிறது.



Original article:

Share:

இந்தியா-பாகிஸ்தான் உறவுகள் மற்றும் தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பில் அதன் தாக்கம்

 பிராந்திய ஒத்துழைப்பு பற்றிய யோசனை, அது நன்மை பயக்கும் என்றாலும், கருத்தியல் வேறுபாடுகளால் பாகிஸ்தானுக்கு ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கலாம். ஆனால், தெற்காசிய பிராந்திய தளத்திலிருந்து முற்றிலும் விலகி இருப்பது இந்தியாவிற்கு நன்மை பயக்குமா? 


தெற்காசிய பிராந்திய ஒத்துழைப்பு சங்கம் (South Asian Association for Regional Cooperation (SAARC)) மூலம் தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பில் முன்னேற்றம் இல்லாததற்கு இந்தியா-பாகிஸ்தான் போட்டியே முதன்மைக் காரணமாகும். பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகள் சார்க் கூட்டமைப்பின் சாத்தியமான நன்மைகளைக் கொண்டுள்ளன. ஆனால், தனித்தனியாகவோ அல்லது ஒன்றாகவோ நிறுவனத்தை முன்னேற்றுவதற்கான திறனைக் கொண்டிருக்கவில்லை.


இந்தியா, அதன் அளவு மற்றும் திறன்கள் காரணமாக, சார்க் (SAARC) அமைப்பில் பொறுப்புடன் செயல்பட்டது. எவ்வாறாயினும், பிராந்திய ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்குப் பதிலாக, இந்தியாவை எதிர்க்க பாகிஸ்தான் தொடர்ந்து சார்க் அமைப்பின் தளத்தைப் பயன்படுத்துகிறது. 


சார்க் அமைப்பு மற்றும் பாகிஸ்தானின் திட்டமிட்ட முயற்சிகளின் செயலிழந்த தன்மை, இந்தியாவைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தப் பயன்படுத்துவதற்கான முயற்சிகள், இஸ்லாமாபாத்தின் சூழ்ச்சிகளைத் தவிர்ப்பதற்கான வழிகளையும் வழிமுறைகளையும் ஆராய இந்தியாவை நிர்ப்பந்தித்தது.


அதற்காக, இந்தியா தனது உடனடி அண்டை நாடுகளுக்குள்ளும் அதற்கு அப்பாலும் துணை பிராந்திய ஒத்துழைப்பை முயற்சித்தது. பல துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான வங்காள விரிகுடா முன்முயற்சி (Bay of Bengal Initiative for Multi-Sectoral Technical and Economic Cooperation (BIMSTEC)), இந்தியப் பெருங்கடல் ரிம் சங்கம் (Indian Ocean Rim Association (IORA)), மீகாங்-கங்கா ஒத்துழைப்பு (Mekong-Ganga Cooperation (MGC)) மற்றும் வங்காளதேசம், பூட்டான், இந்தியா, நேபாளம் (Bangladesh, Bhutan, India, Nepal (BBIN)) முன்முயற்சி ஆகியவை  எடுத்துக்காட்டுகளில் அடங்கும்.  


சார்க் அமைப்பில் இருந்து இந்தியா விலகியது தெற்காசியாவில் துணை பிராந்திய ஒத்துழைப்பை உயர்த்தியுள்ளது. இந்த மாற்றமானது இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் இந்தியப் பெருங்கடல் கடற்கரையிலும் உள்ள நாடுகள் மற்றும் சமூகங்களுடன் இந்தியா தனது நீண்டகால உறவுகளை வலுப்படுத்த அனுமதித்துள்ளது.


அருகிலுள்ள நாடுகளிடையே அதிக ஒத்துழைப்பால் பிராந்தியத்தில் உள்ள சிறிய நாடுகள் நன்மையடைந்துள்ளன. சுவாரஸ்யமாக, தெற்காசியாவில் பிராந்திய ஒற்றுமையின் மெதுவான வளர்ச்சியானது அருகிலுள்ள நாடுகள் மற்றும் இந்தோ-பசிபிக் பிராந்தியத்தில் உள்ளவர்களுடன் நெருக்கமான ஒத்துழைப்பை ஊக்குவித்துள்ளது. 


பாகிஸ்தானைத் தவிர அனைத்து நாடுகளாலும் தெற்காசியாவின் இயற்கையான தலைவராக இந்தியா அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இந்த விஷயத்தில் பாகிஸ்தானின் நிலைப்பாடு நிலைமையை யதார்த்தமாக புரிந்து கொள்ளவில்லை. 


பாகிஸ்தான் தெற்காசியாவிலும் அதற்கு அப்பாலும் இந்தியாவை முதன்மையாக சித்தாந்த கருத்தியியல் காரணமாக எதிர்க்கிறது. இந்த கருத்தியல் வேறுபாடுகள் காரணமாக பாகிஸ்தானின்  சாத்தியமான பலன்கள் இருந்தபோதிலும் பிராந்திய ஒத்துழைப்பை ஆதரிக்காது. பாகிஸ்தானும் இந்தியாவிற்கு எதிராக சிறிய தெற்காசிய நாடுகளை ஒன்றிணைக்க முயற்சிக்கிறது மற்றும் இதே போன்ற காரணங்களுக்காக சீனாவை பிராந்தியத்தில் ஈடுபடுத்துகிறது.


சீனா 2005-ல் சார்க் அமைப்பின் பார்வையாளராக இணைந்துள்ளது.  2005-ம் ஆண்டு டாக்கா, பாகிஸ்தான், நேபாளம் மற்றும் வங்காளதேசத்தில் நடந்த சார்க் அமைப்பு உச்சிமாநாட்டின் போது சீனாவின் பார்வையாளர் அந்தஸ்தை ஆதரித்துள்ளது. அதேசமயம் இந்தியா, பூட்டான், மாலத்தீவு மற்றும் இலங்கை போன்ற நாடுகள் இதை எதிர்த்தன.


சீனாவைத் தவிர, அமெரிக்கா, ஐரோப்பிய ஒன்றியம் (EU), ஆஸ்திரேலியா, ஈரான், மொரிஷியஸ், ஜப்பான், தென் கொரியா மற்றும் மியான்மர் ஆகிய நாடுகள் சார்க் அமைப்பில் உள்ள மற்ற பார்வையாளர்களாகும். பிராந்தியத்தில் தனது செல்வாக்கை அதிகரிக்க சீனா சார்க் அமைப்பில் அதன் பார்வையாளர் அந்தஸ்தைப் பயன்படுத்தியுள்ளது.


இது நேபாளம், வங்காளதேசம் மற்றும் மாலத்தீவுகளுடன் வலுவான உறவை வளர்த்துக்கொண்ட சீனா, பூட்டானுடனான உறவை மேம்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. அது பாகிஸ்தானுடன்  வலுவான உறவுகளைக் கொண்டுள்ளது.


தெற்காசியாவில் சீனா அதிக அளவில் ஈடுபடுவது குறித்து இந்தியா எச்சரிக்கையாக உள்ளது. பிராந்தியத்துடன் சீனாவின் வளர்ந்து வரும் ஈடுபாடு இந்தியாவுடனான அதன் உறவை மோசமாக்குகிறது. 2017-ல் டோக்லாம் நெருக்கடி (Doklam Crisis) மற்றும் 2020-ல் கல்வானில் நடந்த மோதல்கள் (skirmishes in Galwan) போன்ற சம்பவங்களில் இந்த சீரழிவைக் காணலாம்.


தெற்காசியாவில் வளர்ந்து வரும் சீனாவின் செல்வாக்கு, பிராந்தியத்தில் இந்தியாவின் பாரம்பரிய தலைமைக்கு நேரடியாக சவால் விடுகிறது. 


சார்க் அமைப்பில் இருந்து இந்தியா தற்காலிகமாக விலகியுள்ளது. சீனாவுடனான பாகிஸ்தானின் நெருங்கிய உறவுகளும், சிறிய நாடுகள் சீனாவின் பக்கம் சாய்வதும் இறுதியில் இந்தியாவை இப்பகுதியில் தனிமைப்படுத்தக்கூடும் என்று இந்தியா நம்புவதும் ஒரு காரணம்.


இந்த சூழல் காரணமாக, சார்க் அமைப்பில் இந்தியாவின் குறைந்த ஈடுபாடு மற்றும் BIMSTEC, IORA, MGC மற்றும் BBIN போன்ற பிற தளங்களில் அதிகரித்த பங்கேற்பு ஆகியவை புவிசார் அரசியல் கண்ணோட்டத்தில் அர்த்தமுள்ளதாக இருக்கிறது.


இருப்பினும், தெற்காசிய பிராந்திய தளத்திலிருந்து முற்றிலும் விலகியிருப்பது இந்தியாவிற்கு பயனளிக்காது. தெற்காசியாவிற்குள் பிராந்திய ஒத்துழைப்பில் இந்தியாவின் அக்கறையின்மை, பிராந்தியத்தில் உள்ள மற்ற நாடுகளுடன் உறவுகளை வளர்ப்பதில் இருந்து சீனாவைத் தடுக்காது.

உண்மையில், சீனா தனது செல்வாக்கை தெற்காசியாவில் மேலும் விரிவுபடுத்த முடியும். எனவே, சார்க் அமைப்பு போன்ற பிராந்திய தளங்களில் இருந்து விலகி இருப்பதை விட, இந்தியா தனது அண்டை நாடுகளுடனான நட்புறவில் தீவிரமாக ஈடுபட வேண்டும். அதே நேரத்தில், பிம்ஸ்டெக் மற்றும் பிற தளங்களில் தனது ஈடுபாட்டைக் கொண்டிருக்க வேண்டும்.


இந்தியா இயற்கையாகவே தெற்காசியாவின் தாயகமாகும். மேலும், பிராந்தியத்தில் உள்ள மற்ற அனைத்து நாடுகளும் கலாச்சார ரீதியாகவும் இந்தியாவுடன் இணைக்கப்பட்டுள்ளன. எனவே, நமது அண்டை நாடுகளுடனான ஈடுபாட்டை மேம்படுத்துவது அதன் அண்டை நாடுகளுடனான இந்தியாவின் உறவுகளை மேம்படுத்துவதோடு தெற்காசியாவில் பிராந்திய ஒத்துழைப்பின் நேர்மறையான அம்சங்களை மேம்படுத்தும். இந்த அணுகுமுறை பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் ஈடுபாட்டை நிர்வகிக்க உதவும்.  



Original article:

Share:

வேலையைத் தேடி : வேலை உருவாக்கத்தில் உள்ள சவால்கள் குறித்து

 "தொழில்நுட்பத்தை திறமையாகப் பயன்படுத்தி பணிகளை எளிதாகவும் விரைவாகவும் முடிக்க வேண்டும்."


மூன்றாவது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடி தலைமையிலான அரசுக்கு வேலைவாய்ப்பை உருவாக்குவது பெரும் சவாலாக இருக்கும். வரவிருக்கும் ஒன்றிய வரவு-செலவுத் திட்டம் (பட்ஜெட்) இந்த பிரச்சினைக்கு தீர்வு காணும் என்று தெரிகிறது. அதிகரித்து வரும் இளம் வேலை தேடுபவர்களின் எண்ணிக்கை மற்றும் பொருளாதாரம் தொழில்நுட்பத்தை நோக்கி நகர்வதால், குறைவான தொழிலாளர்களே தேவைப்படும் நிலை என சமீபத்திய ஆய்வுகள் இந்த சவாலின் தீவிரத்தை அடிக்கோடிட்டுக் காட்டுகின்றன.


இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises) அனைத்து நிறுவனங்களிலும் 21% மட்டுமே வணிக நடவடிக்கைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்துகிறது. அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை, ஒருங்கிணைக்கப்படாத விவசாயம் அல்லாத துறை சுமார் 11 கோடி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 9.8 கோடியாக இருந்தது.


சர்வதேச தொழிலாளர் அமைப்பு (International Labour Organisation (ILO)) முன்பு இதே போன்ற அறிக்கைகளை அறிவித்தது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பின் இந்திய வேலைவாய்ப்பு அறிக்கை (ILO’s India Employment Report), உற்பத்தித் துறையில் 12% - 14% என்ற அளவில் வேலை உருவாக்கம் தேக்க நிலையிலேயே உள்ளதாகக் குறிப்பிடுகிறது. கோவிட்-19 காரணமாக விவசாயத்தில் இருந்து விவசாயம் அல்லாத பணிகளுக்கு மாறுவதும் குறைந்துள்ளது. சிட்டி குரூப் (Citigroup report) அறிக்கையின்படி, தற்போதைய வேலை உருவாக்க விகிதம் எதிர்கால தேவையை பூர்த்தி செய்யாமல் போகலாம்.


இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) அனைத்து நிறுவனங்களிலும் 21% மட்டுமே வணிக நடவடிக்கைகளுக்கு இணையத்தைப் பயன்படுத்துகிறது. அக்டோபர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை, ஒருங்கிணைக்கப்படாத விவசாயம் அல்லாத துறை சுமார் 11 கோடி தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ளது. இது முந்தைய ஆண்டில் 9.8 கோடியாக இருந்தது. 


மொத்த வேலைவாய்ப்பில் 36.45%-ஐ உருவாக்கிய, 'பிற சேவைகள்' (Other Services) துறை அதிக மக்களை வேலைக்கு அமர்த்துவதாக இணைக்கப்படாத துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பு (Annual Survey of Unincorporated Sector Enterprises (ASUSE)) கண்டறிந்துள்ளது. அடுத்ததாக 'வர்த்தகம்' 35.61% ஆகவும், 'உற்பத்தி' 27.94% ஆகவும் இருந்தது. காலமுறை தொழிலாளர் ஆய்வுகளின்படி, 2022-23ல் 45.76% தொழிலாளர்கள் விவசாயம் மற்றும் அதனுடன் தொடர்புடைய துறைகளில் பணிபுரிந்துள்ளனர்.


அரசாங்கம் உடனடியாக விஷயங்களை மாற்ற முடியாது, ஆனால் தீர்வுகளைப் பற்றி சிந்திக்க ஆரம்பிக்கலாம். சுதேசி ஜாக்ரன் மஞ்ச் (Swadeshi Jagran Manch), மத்திய அரசு ரோபோ வரியை (robot tax) விதிக்க வேண்டும் மற்றும் பட்ஜெட்டில் வேலை உருவாக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என்று விரும்புகிறது. இந்திய தொழிலாளர் மாநாட்டை நடத்த மத்திய அரசை தொழிற்சங்கங்கள் வலியுறுத்தி வருவதால், இது தாமதமாகி வருகிறது. தொழிற்சங்கங்களுக்கு மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் அணுகுமுறை நேர்மறையானது, ஆனால் வேலை இழப்புகளைத் தடுக்கவும் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கவும் தொழிலாளர் குறியீடுகளுக்கு அப்பால் வலுவான நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.


தொழில்நுட்பம் மக்களின் பணிச்சுமையை குறைக்க வேண்டும். அவர்களின் வேலைகளை அச்சுறுத்தக்கூடாது. விவசாய உற்பத்தியை நவீனமயமாக்க, வேலைகளை உருவாக்கவும் விவசாயிகளுக்கு ஆதரவாகவும் அரசாங்கம் பொதுமக்களின் ஒத்துழைப்புடன் முதலீடு செய்ய வேண்டும். தனியார் மற்றும் பொதுத் துறைகள், தொழிற்சங்கங்கள், மாநிலங்கள் மற்றும் அரசியல் கட்சிகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு வேலை உருவாக்கத்தில் கவனம் செலுத்தும் வளர்ச்சி மாதிரியை வடிவமைப்பதில் முக்கியமானது. வேலைகள் இல்லாத பொருளாதார வளர்ச்சி சமூக மற்றும் அரசியல் அமைதியின்மைக்கு வழிவகுக்கும் என்று உலகளாவிய போக்குகள் காட்டுகின்றன. பயனுள்ள தீர்வுகளைத் தொடங்க இந்தப் பிரச்சனைக்கு நேர்மையான அங்கீகாரம் தேவை.



Original article:

Share:

கைது மற்றும் சுதந்திரம் : அமலாக்கத்துறையின் நடவடிக்கைகள்

 பண மோசடி தடுப்பு சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) கீழ் ஒருவரைக் கைது செய்வதற்கு முன், அமலாக்க இயக்குநரகத்திற்கு தேவையான ஆதாரம் ஒரு தேவையா?


பணமோசடி தடுப்புச் சட்டம்,  சம்பந்தப்பட்ட வழக்குகளில் தனிப்பட்ட சுதந்திரம் குறித்து இந்திய உச்சநீதிமன்றம் இரண்டு குறிப்பிடத்தக்க தீர்ப்புகளை வழங்கியுள்ளது. அரசாங்க நிறுவனங்களின் வலுவான நடவடிக்கைகளுக்கு எதிராக தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதில் நீதிமன்றங்கள் எவ்வாறு சமநிலைப்படுத்துகின்றன என்பதை இந்தத் தீர்ப்புகள் எடுத்துக்காட்டுகின்றன. பணமோசடி வழக்குகளில் கைது செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை ஒரு அதிகாரி நியாயப்படுத்த வேண்டுமா என்பது ஒரு கேள்வி. மற்றொன்று, ஜாமீன் வழங்குவதற்கான நியாயமான உத்தரவுகளை நீதிமன்றங்கள் எவ்வாறு நிறுத்திவைக்கின்றன என்பதை நீதிமன்றம் சுட்டிக்காட்டியது.  இந்தக் கருத்து அனைவருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. நீதிபதி சஞ்சீவ் கண்ணா விசாரணையின்போது, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், அமலாக்க இயக்குநரகத்தால் (ED) மார்ச் மாதம் கைது செய்யப்பட்டதிலிருந்து இரண்டாவது முறையாக இடைக்கால ஜாமீன் பெற்றார்.


64-பக்க தீர்ப்பு உயர் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பதன் மூலம் முடிவடைந்தது: அவ்வாறு செய்வதற்குமுன் ஒருவரை கைது செய்ய வேண்டியதன் அவசியத்தை அமலாக்க இயக்குனரகம்  நிரூபிக்க வேண்டுமா என்ற கேள்வியுடன் முடிவடைந்தது. பண மோசடி தடுப்பு சட்டத்தின்  (PMLA) பிரிவு 19-ன் படி, கைது செய்வதற்கு முன், சம்மந்தப்பட்ட நபர் பணமோசடியில் ஈடுபட்டுள்ளார் என்று கைது செய்யும் அதிகாரிக்கு "நம்புவதற்கான காரணம்" இருக்க வேண்டும் என்று கூறுகிறது.


பண மோசடி தடுப்பு சட்டத்தின் (Prevention of Money Laundering Act (PMLA)) கீழ்,  ஒரு அதிகாரி கைது செய்வதற்கான காரணங்களை ஆவணப்படுத்த வேண்டும் மற்றும் கைது செய்வதற்கான காரணங்களை குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும். இந்த நடவடிக்கைகளுக்கு கைது செய்யப்பட வேண்டியதன் அவசியத்தை கூற வேண்டுமா என்று பண மோசடி தடுப்புச் சட்டத்தில் தெளிவாக குறிப்பிடப்படவில்லை. நடவடிக்கை எடுக்க அதிகாரம் இருப்பது மட்டும் போதாது அதற்கான காரணத்தை குற்றம் சாட்டப்பட்டவருக்கு தெரிவிக்க வேண்டும்.

 

நீதிமன்றத்தின் உத்தரவு அனைத்து தரப்பினருக்கும் ஊக்கம் அளிக்கிறது, அமலாக்க இயக்குனரக அதிகாரி ஒருவரைக் கைது செய்ய முடிவெடுக்கும் போது சட்ட விதிகளைப் பின்பற்ற வேண்டும் என்று நீதிமன்றம் கூறுகிறது. மேலும் இந்த முடிவை குற்றவியல் நீதிபதி (magistrate) அல்லது நீதிபதி மதிப்பாய்வு செய்யலாம். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் கைதுகள் ஒரு சார்பாக இருக்கக் கூடாது என்றும், விசாரணையின் போது குற்றம் சாட்டப்பட்டவர்களை ஆதரிக்கும் ஆதாரங்களையும் அவர்களுக்கு எதிரான ஆதாரங்களையும் கருத்தில் கொள்ள வேண்டும் என்றும் நீதிமன்ற உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது.


மற்றொரு பிரச்சினை நீதிமன்றங்கள் ஜாமீன் உத்தரவுகளை நிறுத்துவதில் எவ்வாறு மாறுபட்ட தீர்ப்புகளை வழங்குகின்றன என்பது பற்றியது, இன்றைய நீதித்துறை எவ்வாறு செயல்படுகிறது என்பதற்கான முக்கிய அம்சத்தை வெளிப்படுத்துகிறது. ஜாமீனை எதிர்த்தாலும் அல்லது அதை வழங்குவதற்கான நீதிமன்றத்தின் முடிவை சவால் செய்தாலும், அரசுத் தரப்பு வாதங்களின் தீவிரம் உயர்நீதிமன்றங்களில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்துகிறது. நியாயமான உத்தரவுகளை நிறுத்துவது அரிதாக இருக்கவேண்டும் என்றும், கீழ் நீதிமன்றம் கடுமையான தவறுகளைச் செய்த வழக்குகளில் மட்டுமே நியாயப்படுத்தப்பட வேண்டும் என்றும், வழக்கமான நடைமுறையாக இருக்கக்கூடாது என்று தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.



Original article:

Share:

வரிப் பகிர்வுக்கான அளவுகோலாக தலைமுறைகளுக்கு இடையேயான சம பங்கு -எஸ். ராஜா சேது துரை, ஆர். ஸ்ரீனிவாசன்

 மாநில நிதிச் செயல்திறனுக்கு வெகுமதி அளிப்பதில் உள்ள குறிகாட்டிகளை நிதி ஆணையம் மறுபரிசீலனை செய்ய வேண்டும்.


மத்திய அரசின் வரி வருவாயை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிப்பது என்பது சமீப காலமாக அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் ஒரு விஷயமாகும். இருப்பினும், பொருளாதார வல்லுநர்களுக்கு இது எப்போதும் விவாதப் பொருளாகப் பார்க்கப்படுகிறது. இந்த விவாதங்களின் மத்தியில், ஒன்று ஒன்றிய வரி வருவாயில் மாநிலங்களுக்கு இடையேயான பங்கின் கிடைமட்ட பகிர்வுக்கான (horizontal distribution) காரணிகள் ஆகும். நிதி ஆணையம் (FC) ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை கிடைமட்ட விநியோகத்திற்கான விதிமுறைகளைத் தீர்மானிக்கிறது. இந்த வரிப் பகிர்வுக்கான விதிமுறைகளை மீண்டும் ஐந்தாம் ஆண்டு மறுபரிசீலனை செய்தாலும், கருத்துரீதியாக, செயல்திறனைவிட சமபங்கு அளவு முன்னுரிமை அளிக்கப்படுகிறது என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரிப் பகிர்வு விதிமுறைகளில் உள்ள பங்கு (Equity) என்பது ஒரு தலைமுறைகளுக்கு இடையேயான சமபங்கு ஆகும். அதாவது, மாநிலங்களுக்கு இடையே வரிவருவாயை மறுபங்கீடு செய்வது. இருப்பினும், இது அந்த மாநிலங்களுக்குள் வெவ்வேறு தலைமுறையினரிடையே அதிக அநீதிக்கு வழிவகுக்கும். இந்தியாவின் வரிப் பகிர்வு விதிமுறையில் தலைமுறைகளுக்கு இடையிலான நியாயமும் கருதப்பட வேண்டும் என்பது வாதம்.


தலைமுறைகளுக்கு இடையேயான நிதிப் பங்கு


பொதுவாக, தலைமுறைகளுக்கு இடையிலான சமபங்கு என்பது ஒவ்வொரு தலைமுறைக்கும் சம வாய்ப்புகளையும் விளைவுகளையும் வழங்கும் கொள்கையாகும். தற்போதைய தலைமுறையினரின் முடிவுகள் அல்லது செயல்கள் எதிர்கால சந்ததியினருக்கு சுமையாக இருக்கக்கூடாது என்பதை தலைமுறைகளுக்கு இடையிலான சமபங்கு உறுதி செய்கிறது. பொது நிதிக் கண்ணோட்டத்தில், ஒவ்வொரு தலைமுறையும் அது பெறும் பொதுச் சேவைகளுக்குச் செலுத்தும் சூழ்நிலையைக் குறிக்கிறது மற்றும் கடன்கள் மூலம் எதிர்கால சந்ததியினருக்குச் சுமையை ஏற்படுத்தாது.


எந்தவொரு அரசாங்கத்திற்கும், அதன் வருவாயை உயர்த்த வரி அல்லது கடன் ஆகிய இரண்டு வழிகள் மட்டுமே உள்ளன. ஒரு காலத்தில், வரி வருவாய் அரசாங்கத்தின் தற்போதைய செலவினத்திற்கு சமமாக இருந்தால், தற்போதைய வரி செலுத்துவோர் அவர்கள் பெறும் பொது சேவைகளுக்கும் செலுத்துகிறார்கள். தற்போதைய செலவுகளுக்கு அரசாங்கம் கடன் வாங்கினால், வருங்கால சந்ததியினர் இந்த கடனையும் அதன் வட்டியையும் திருப்பிச் செலுத்த அதிக வரி செலுத்த வேண்டியிருக்கும். இதன் பொருள் தற்போதைய அரசாங்க செலவினங்களுக்காக கடன் வாங்குவது தலைமுறைகளுக்கு இடையே அநீதிக்கு வழிவகுக்கிறது.


ரிகார்டியன் சமத்துவக் கோட்பாடு (Ricardian Equivalence Theory) எனப்படும் நிதியியல் பொருளாதாரத்தில் ஒரு கருத்து உள்ளது. அதாவது, அரசாங்கம் தற்போதைய செலவினங்களுக்கு கடன் வாங்கும் போதெல்லாம், குடும்பங்கள் அதிக சேமிப்பதன் மூலம் செயல்படுகின்றன. இதனால் எதிர்கால சந்ததியினர் அதிக வரிகளை செலுத்தவும், பொருளாதாரத்தில் மொத்த தேவையை வெவ்வேறு நிலைகளில் நிலையானதாகவும் வைத்திருக்க முடியும். காலங்கள். தற்போதைய தலைமுறை அது பெறும் பொது சேவைகளின் மதிப்பை விட குறைவாக வரி செலுத்துகிறது என்ற கோட்பாடு கருதுகிறது. அதேசமயம் நமது தற்போதைய கூட்டாட்சி சூழ்நிலையில் இந்த கருத்து இல்லை. வளர்ந்த மாநிலங்களில் உள்ள குடும்பங்கள் குறிப்பிட்ட மாநிலங்களுக்குள் முழுமையாகப் பயன்படுத்தப்படாத வரிகளை செலுத்துகின்றன. இதனால், அத்தகைய மாநிலங்கள் அதிக கடன் வாங்க அல்லது தற்போதைய செலவினங்களைக் குறைக்க வேண்டும். மாறாக, வளரும் மாநிலங்களில் உள்ள குடும்பங்கள் தற்போதைய செலவினத்தின் மதிப்பை விட மிகக் குறைவான வரிகளை செலுத்துகின்றன மற்றும் மத்திய அரசாங்கத்திடமிருந்து அதிக நிதி பரிமாற்றங்களைப் பெறுவதன் மூலம் வரிப் பகிர்வுக்கான இடைவெளியை நிரப்புகின்றன.


தலைமுறைகளுக்கு இடையேயான பங்குக்கு எதிராக


ஒரு விரிவான கருத்தை வழங்க, சில முக்கிய மாநிலங்களை அதிக வருமானம் மற்றும் குறைந்த வருமானம் கொண்ட வகைகளாகப் பிரிப்போம். தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் ஹரியானா ஆகியவை அதிக வருமானம் கொண்ட மாநிலங்கள். பீகார், உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், ஒடிசா மற்றும் ஜார்கண்ட் ஆகியவை குறைந்த வருமானம் கொண்ட மாநிலங்கள். 2015-2020 ஆம் ஆண்டின், 14-வது நிதி ஆணையத்தின் காலத்தை பகுப்பாய்வு செயவதன் மூலம், அதிக வருமானம் கொண்ட மாநிலங்களில், அவர்களின் சொந்த வரி வருவாய் அவர்களின் வருவாய் செலவினத்தில் 59.3% வரை நிதியளிக்கிறது. குறைந்த வருமானம் உள்ள மாநிலங்களில், அவர்களின் சொந்த வரி வருவாய் அவர்களின் வருவாய் செலவினத்தில் 35.9% மட்டுமே நிதியளிக்கிறது. அதிக வருமானம் உள்ள மாநிலங்களுக்கான வருவாய் செலவு மற்றும் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) விகிதம் 10.9% ஆகும். இது குறைந்த வருமானம் உள்ள மாநிலங்களுக்கான 18.3% என்ற விகிதத்தை விட குறைவாக உள்ளது. இவ்வாறு, அதிக வருவாய் உள்ள மாநிலங்கள் தங்கள் வருவாய் செலவினங்களைக் குறைத்தன. அவர்கள் தங்கள் சொந்த வரி வருவாய் மூலம் பெரும்பகுதிக்கு நிதியளிக்கத் தொடங்கினர். குறைந்த வருமானம் கொண்ட மாநிலங்கள் தங்கள் GSDP-ன் ஒப்பிடும்போது அதிக வருவாய் செலவினங்களைக் கொண்டிருந்தன. அவர்கள் தங்கள் சொந்த வரி வருவாய் மூலம் அதில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே நிதியளித்தனர். குறைந்த வருமானம் உள்ள மாநிலங்களில், வருவாய் செலவினங்களில் 57.7% ஒன்றிய நிதிப் பரிமாற்றங்களால் நிதியளிக்கப்படுகிறது. அதிக வருவாய் உள்ள மாநிலங்களில், வருவாய் செலவினங்களில் 27.6% மட்டுமே ஒன்றிய நிதிப் பரிமாற்றங்களால் நிதியளிக்கப்பட்டது.


கூட்டாட்சி நிதியின் மூன்று அம்சங்களை நாம் பார்க்கலாம். முதலாவதாக, குறைந்த வருமானம் கொண்ட மாநிலங்கள் தங்கள் சொந்த வரி வருவாயின் மூலம் தங்கள் வருவாய் செலவினத்தில் ஒரு சிறிய பகுதியை நிதி பகிர்ந்தளிக்கப்படுகின்றன மற்றும் அதிக அளவு ஒன்றிய நிதிப் பரிமாற்றங்களைப் பெறுகின்றன. இரண்டாவதாக, அதிக வருமானம் கொண்ட மாநிலங்கள் தங்கள் சொந்த வரி வருவாயில் தங்கள் வருவாய் செலவினங்களில் கணிசமான பகுதியை நிதிப் பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஆனால், மிகக் குறைவான ஒன்றிய நிதிப் பரிமாற்றங்களைப் பெறுகின்றன. மூன்றாவதாக, அதிக வருமானம் உள்ள மாநிலங்கள் 13.1% நிதிப் பற்றாக்குறையைச் சந்திக்க வேண்டியிருந்தது என்பதையும், குறைந்த வருமானம் கொண்ட மாநிலங்கள் வருவாய் செலவினத்தில் 6.4% நிதிப் பற்றாக்குறையுடன் முடிவடைந்தது என்பதையும் நாம் ஊகிக்க முடியும். எனவே, அதிக வருமானம் கொண்ட மாநிலங்கள் தங்கள் சொந்த வரி வருவாயின் அதிக அளவுகளை உயர்த்தி, தங்கள் சொந்த வருவாய் செலவினங்களைக் குறைக்கின்றன. ஆனால், குறைந்த வருமானம் கொண்ட மாநிலங்களுடன் ஒப்பிடும்போது குறைந்த ஒன்றிய நிதிப் பரிமாற்றங்கள் காரணமாக அதிக நிதிப் பற்றாக்குறையை சந்தித்து வருகின்றன.


ஒரு மாநிலத்தின் மக்கள் தாங்கள் செலுத்தும் நேரடி மற்றும் மறைமுக வரிகளின் நிலையை அறிந்து அரசாங்கத்திடம் இருந்து சேவைகளுக்கான சமமான மதிப்பை எதிர்பார்க்கிறார்கள். எனவே, மாநிலம் மற்றும் ஒன்றிய அரசு ஆகிய இரண்டும் ஒரு மாநிலத்தின் மக்களுக்கு வழங்கப்படும் பொது சேவைகள் இவற்றின் எதிர்பார்ப்புடன் பொருந்த வேண்டும். மற்ற நிதி நடவடிக்கைகள் இப்போதும் எதிர்காலத்திலும் அதிக வருமானம் கொண்ட மாநிலங்களுக்கு வரி செலுத்துதலை அதிகரிக்கும். ஒரு கூட்டாட்சி அமைப்பில், மாநிலங்களுக்கிடையில் வரிப் பகிர்வுக்கான நேர்மையை சமநிலைப்படுத்துவது அனைவருக்கும் பயனளிக்கும் ஒரு பெரிய சந்தையை உருவாக்க உதவுகிறது. தலைமுறைகளுக்குள் மற்றும் தலைமுறைகளுக்கு இடையில் வரிப் பகிர்வுக்கான நியாயத்தை சமநிலைப்படுத்துவது மிகவும் முக்கியமானது. மாநிலங்களிடையே வரிகள் எவ்வாறு பகிர்ந்து கொள்ளப்படுகின்றன என்பதில் நியாயம் மற்றும் செயல்திறனின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. இந்த பங்கின் சவால்களை எதிர்கொள்ளும் ஒரு நியாயமான அமைப்பை உருவாக்குவது நிதி ஆணையத்தின் முக்கியப் பொறுப்பாகும்.


வெவ்வேறு நியாயமான பங்குகளைக் கையாளவும்


பொதுவாக, நிதி ஆணையங்கள் தனிநபர் வருமானம், மக்கள் தொகை மற்றும் பரப்பளவு போன்ற குறியீடுகளை வரிப் பகிர்வு விதிமுறைகளில் பயன்படுத்துகின்றன. இந்த குறியீடுகள் பொது சேவைகளுக்கான தேவை (மக்கள் தொகை மற்றும் பரப்பளவு) மற்றும் கிடைக்கும் பொது வருவாயின் அளவு (தனிநபர் வருமானம்) ஆகியவற்றின் அடிப்படையில் மாநிலங்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகளைப் பிரதிபலிக்கின்றன. இந்த குறியீடுகள் மாநிலங்களுக்கு இடையே ஒன்றியத்தின் நிதி பரிமாற்றங்களின் பங்களிப்பில் அதிக அளவு மற்றும் சமபங்கு அளிப்பதில் உறுதியளிக்கிறது. வரி முயற்சி மற்றும் நிதி ஒழுக்கம் போன்ற மாறிகள் மாநிலங்களின் நிதி செயல்திறனின் பங்குகளை அளிக்க வரிப் பகிர்வு விதிமுறைகள் சிறிய அளவில் கொண்டுள்ளன.


பங்கு மாறிகள் ஒவ்வொரு மாநிலத்தின் நிதி நிலைமையை உண்மையான அளவில் பிரதிபலிக்கவில்லை என்பதையும் காணலாம். செயல்திறன் குறிகாட்டிகள் மாநில வரவு செலவுத் திட்டத்தில் இருந்து, ஒன்றிய நிதிப் பரிமாற்றங்களில் மட்டுமே தாக்கத்தை ஏற்படுத்துகிறது மற்றும் மாநிலங்களின் நிதி நடத்தையை மாற்றுகிறது. எனவே, ஒன்றிய நிதிப் பரிமாற்றங்கள் மாநிலங்களின் நிதி நடத்தையை விரும்பிய திசையில் மாற்றும் வகையில் அதிக நிதி மாறிகளை வரிப் பகிர்வு அளவுகோலில் சேர்ப்பது பொருத்தமானது.


ஒவ்வொரு மாநிலத்திற்கும் நிதிப் பொறுப்புச் சட்டம் (Fiscal Responsibility Act) உள்ளது. இது நிதிப் பற்றாக்குறை மற்றும் பொதுக் கடனின் அளவைக் கட்டுப்படுத்துகிறது. இருப்பினும், சில மாநிலங்களுக்கு குறைக்கப்பட்ட ஒன்றிய நிதி பரிமாற்றங்கள் இந்த சட்ட வரம்பை மீறக் கட்டாயப்படுத்துகின்றன. எனவே, நிதி ஆணையம், நிதிக் குறியீடுகளுக்கு அதிக அளவு ஒதுக்க வேண்டும் மற்றும் பெரிய ஒன்றிய நிதிப் பரிமாற்றங்கள் மூலம் வரி முயற்சி மற்றும் செலவின செயல்திறனை ஊக்குவிக்க வேண்டும். இது தானாக மாநிலங்களுக்கிடையேயான நிதி சமபங்கு மற்றும் நிலையான கடன் நிர்வாகத்தை உறுதி செய்யும்.


எஸ்.ராஜா சேது துரை ஹைதராபாத் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியராக உள்ளார். ஆர். சீனிவாசன், தமிழ்நாடு மாநில திட்டக்குழு உறுப்பினர் ஆவார்.



Original article:

Share:

அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைக்க சரியான பாதையைத் தேர்ந்தெடுத்தல் -ஸ்வேதா லம்பா, நித்யா ஷர்மா

 விவசாயப் பொருட்களை நிர்வகிப்பதில் ரயில்வே துறையை  பயன்படுத்துவதன் மூலம், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை கணிசமாக குறைக்கலாம். இந்த ஒருங்கிணைப்பு சுற்றுச்சூழலுக்கும் விவசாய உற்பத்திக்கும்  பெரிதும் உதவும்.


உலகளவில் விவசாய உற்பத்தியில் இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது. இருப்பினும், உலகளாவிய விவசாய ஏற்றுமதியில் அதன் பங்கு 2.4% மட்டுமே உள்ளது. இருப்பினும், விவசாய ஏற்றுமதியில் இந்தியா எட்டாவது இடத்தைப் பிடித்துள்ளது. குறைந்த உற்பத்தித்திறன், மோசமான போக்குவரத்து மற்றும் உள்கட்டமைப்பு போன்ற விநியோகச் சங்கிலி சிக்கல்கள், அறுவடைக்குப் பிந்தைய  இழப்புகளை ஏற்படுத்துகிறன.


இந்தியாவின் அறுவடைக்குப் பிந்தைய இழப்பை பற்றிய பார்வை


முட்டை, மீன், இறைச்சி (22%), பழங்கள் (19%), மற்றும் காய்கறிகள் (18%) போன்ற அழிந்துபோகக்கூடிய பொருட்களால் கணிசமான அளவு இழப்பு ஏற்படுகிறது. அழிந்து போகக்கூடிய உணவுகளை ஏற்றுமதி செய்யும் போது, ​​சுமார் 19% இழப்பு ஏற்படுத்திகிறது. குறிப்பாக, அவை இறக்குமதி செய்யும் நாட்டை அடையும் போது அதன் தரம் குறைந்து விடுகிறது. அழிந்துபோகும் பொருட்களை சரியான நேரத்தில் நுகர்வோருக்கு வழங்க சரியான சேமிப்பு, போக்குவரத்து மற்றும் சந்தைப்படுத்தல் ஆகியவை முக்கியமான தேவைகளாகும். விவசாயத் தளவாடங்களை மேம்படுத்துவது, விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான குழுவின் (Doubling Farmer’s Income (DFI)) முக்கிய நோக்கமாகும்.


விநியோகச் சங்கிலியில், பல்வேறு போக்குவரத்துத் தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும். விளைபொருட்களை பண்ணைகளிலிருந்து சந்தைகளுக்கு கொண்டுசெல்லும் போக்குவரத்தில் தொடங்கி, நீண்ட தூரத்திற்கு பொருட்களைக் கொண்டு செல்வது (மொத்த விற்பனை  நிலையங்கள்) பின்னர் ரயில், சாலை, நீர் அல்லது விமானம் மூலம் நுகர்வோருக்கு (கடைசி மைல் வரை) பொருட்களைக் கொண்டு செல்வது என அறுவடை முடிந்தவுடன் பயிர் அழிந்து போகக்கூடிய பொருட்களின் வர்த்தகம் நேரப் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது. இந்தியாவில் 86% விவசாயிகள் சிறு மற்றும் குறு விவசாயிகள் (small and marginal (SMF)) உள்ளனர் என்று சமீபத்திய விவசாயக் கணக்கெடுப்பு காட்டுகிறது. இந்த விவசாயிகள் தங்கள் சிறிய உற்பத்தியின் காரணமாக, எதிர்பார்த்த பொருளாதாரத்தை அடைய போராடுகிறார்கள். உறுதியான சந்தை ஒருங்கிணைப்பு இல்லாத காரணத்தினால், அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளால் விவசாயிகள் வருமான இழப்பை சந்திக்கின்றனர்.


இந்தியாவில், உணவுப் பொருட்களின் விலையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்கள், அழிந்துபோகக்கூடிய பொருட்களின் விலை குறைவதற்கு காரணமாகும். நிதி ஆயோக் அறிக்கையின்படி, இரும்பு, எஃகு, உரங்கள் மற்றும் விவசாயப் பொருட்கள் போன்ற பொருட்களைக் கொண்டு செல்வதன் மூலம் இந்திய ரயில்வே தனது வருவாயின் பெரும்பகுதியை ஈட்டுகிறது. 2022-நிதியாண்டில், இந்த சரக்கு போக்குவரத்து இந்திய ரயில்வேயின் வருவாயில் 75% ஆகும். நாடு முழுவதும் நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களை இணைப்பதில் இந்திய இரயில்வே முக்கிய பங்கு வகிக்கிறது. இந்திய உணவுக் கழகம் அதன் 90% உணவு தானியங்களை கொண்டு செல்வதற்கு இந்திய இரயில்வேயை பெரிதும் நம்பியுள்ளது. அதே நேரத்தில் கிட்டத்தட்ட அனைத்து பழங்கள் மற்றும் காய்கறிகளும் (97%) சாலை வழியாக கொண்டு செல்லப்படுகின்றன.



ரயில்வேயின் முயற்சிகள்


இந்திய ரயில்வே அழிந்துபோகக்கூடிய பொருட்களை கொண்டு செல்வதில் முன்னேற்றம் கண்டுள்ளது. ரயில்வே வேகன்களில் ஏற்றப்பட்ட டிரக்குகளை எடுத்துச் செல்ல டிரக்-ஆன்-டிரெய்ன் சேவையை (truck-on-train service) அவர்கள் அறிமுகப்படுத்தினர். பால் மற்றும் மாட்டுத் தீவனத்தில் சோதனைக்குப் பிறகு இந்தச் சேவை விரிவடைகிறது. COVID-19 தொற்றுநோய் காலத்தின்போது, ​​அழிந்துபோகக்கூடிய பொருட்கள் மற்றும் விதைகளை சந்தைகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்கு இடையே கொண்டு செல்ல சரக்கு சிறப்பு ரயில்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


சிறு விவசாயிகளுக்கு உதவுவதற்காக, பால், இறைச்சி மற்றும் மீன் போன்ற அழிந்து போகக்கூடிய பொருட்கள் உபரியாக உற்பத்தி செய்யப்படும் பகுதிகளை அவை நுகரப்படும் பகுதிகளுடன் இணைக்க விவசாய ரயில் (Kisan Rail) தொடங்கப்பட்டது. விவசாய ரயில் இந்தியாவில் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரித்துள்ளதாக ஆய்வுகள் சுட்டி காட்டுகிறன. உதாரணமாக, மகாராஷ்டிராவின் நாசிக்கில் உள்ள திராட்சை விவசாயிகள், விவசாய ரயிலைப் பயன்படுத்தி சுமார் 22,000 குவிண்டால்களை அனுப்பியதன் மூலம் குவிண்டாலுக்கு ₹5,000 கூடுதலாக வருமானம் ஈட்டினார். பழங்கள் மற்றும் காய்கறிகளின் நீண்டதூர போக்குவரத்துக்கு ரயில்வேயைப் பயன்படுத்துவதன் நன்மையை இது எடுத்துக்காட்டுகிறது.


விவசாயத்தில் ரயில்வேயின் பங்கு கடந்த சில ஆண்டுகளாக  நம்பிக்கைக்குரிய முடிவுகளைக் காட்டுகிறது. இருப்பினும், இந்த ரயில்வே திட்டங்கள் குறித்து விவசாயிகளிடையே விழிப்புணர்வு  ஏற்படுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.  உலக வள நிறுவனம் (World Resources Institute (WRI)) இந்தியாவால் ஆதரிக்கப்படும் சாம்பியன்ஸ் 12.3 இந்தியாவின் நண்பர்கள் குழு, ரயில்வே வழியாக அழிந்துபோகும் போக்குவரத்தில் பல நிறுத்தங்களைக் கையாள்வது ஒரு சவாலாக இருப்பதாகக் குறிப்பிட்டனர்.


வெப்பநிலையைக் கட்டுப்படுத்தும் போக்குவரத்திற்கான சிறப்பு வண்டிகளில் முதலீடு செய்வது மற்றும் பாதுகாப்பான சரக்கு கையாளுதலுக்கான ரயில் வசதிகளை மேம்படுத்துவது மிகவும் முக்கியம். இந்த மேம்பாடுகள் விவசாயத்தில் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்தி, மாசுபாடு அபாயங்களைக் குறைத்து, உள்நாட்டு மற்றும் ஏற்றுமதி சந்தைகளுக்கு பயனளிக்கும். கூடுதலாக, போக்குவரத்து நேரத்தைக் குறைக்க, ஏற்றுதல் மற்றும் இறக்குதல் செயல்முறைகளை மேம்படுத்தவும் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்குவதற்கான குழு பரிந்துரைக்கிறது. ஆட்சேர்ப்பு மற்றும் பயிற்சி மூலம் பணியாளர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய வேண்டியதன் அவசியத்தையும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். குறிப்பாக, பழங்கள் மற்றும் காய்கறிகளை கொண்டு செல்வதற்கு சாலைகளைவிட ரயில்வேக்கு முன்னுரிமை அளிப்பது மிகவும் திறமையான போக்குவரத்தை உறுதி செய்கிறது.


பயன்படுத்தப்படாத வாய்ப்புகள்


இந்திய இரயில்வே அறுவடைக்குப் பிந்தைய இழப்பைக் கணிசமாகக் குறைத்து, வாழ்வாதாரம் மற்றும் சுற்றுச்சூழலுக்குப் பயனளிக்கும். வர்த்தக அமைச்சகத்தின் (Logistics Division, Ministry of Commerce) தளவாடப் பிரிவின்படி, சாலைப் போக்குவரத்தைவிட ரயில் சரக்கு 80% குறைவான கார்பன் டை ஆக்சைடை உற்பத்தி செய்கிறது.


செயல்திறனை அதிகரிக்கவும், ரயில் உள்கட்டமைப்பை வலுப்படுத்தவும், போக்குவரத்து முறைகள் மற்றும் பிராந்தியங்களில் ஒருங்கிணைந்த அணுகுமுறையை பின்பற்ற வேண்டும். பொது-தனியார் கூட்டாண்மை மூலம் தனியார் துறை குறிப்பிடத்தக்க பங்களிப்பை வழங்க முடியும். 2024 விவசாய பட்ஜெட் நவீன உள்கட்டமைப்பு மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட ஆதரவுடன் பண்ணை-சந்தை இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இரயில்வே முன்முயற்சிகள் அழிந்துபோகும் பொருட்களை திறமையாக கொண்டு செல்வதன் மூலமும் அறுவடைக்குப் பிந்தைய இழப்புகளை குறைப்பதன் மூலமும் இந்த இலக்குகளை அடைய முடியும்.


ஸ்வேதா லம்பா உலக வள நிறுவனம் (World Resources Institute (WRI)), இந்தியாவில் உணவு, நிலம் மற்றும் நீர் திட்டத்தின் திட்ட மேலாளராக உள்ளார். நித்யா ஷர்மா WRI இந்தியாவில் உணவு, நிலம் மற்றும் நீர் திட்டத்தின் திட்ட மேலாளராக உள்ளார்.



Original article:

Share:

உள் இட ஒதுக்கீட்டில் உள்ள பிரச்சனைகள் -சுகதேயோ தோரட்

 வேலை வாய்ப்பிற்கான இடஒதுக்கீடுகளில் சில உட்பிரிவு மக்களின் குறைந்த பங்கேற்பை நிவர்த்தி செய்ய, மூலதன சொத்துக்கள் மற்றும் கல்வி நிலைகள் மீதான அவர்களின் உரிமையை நாம் அதிகரிக்க வேண்டும்.


எஸ்சி/எஸ்டிகளுக்கான உள் இடஒதுக்கீடு வழக்கு குறித்து உச்சநீதிமன்றம் தற்போது பரிசீலித்து வருகிறது. இது தொடர்பான எந்த முடிவும் சட்டரீதியாகவும் கல்விரீதியாகவும் நியாயப்படுத்தப்பட வேண்டும். உள் இடஒதுக்கீட்டிற்கான கல்வி ஆதரவு பலவீனமாக உள்ளது. அவற்றை சரிசெய்ய அரசாங்கம் மூன்று முக்கிய அணுகுமுறைகளைப் பயன்படுத்துகிறது: சாதி பாகுபாட்டிற்கு எதிரான சட்டப் பாதுகாப்புகள், சட்டமன்றங்கள் மற்றும் வேலைகளில் இடஒதுக்கீடு மற்றும் நிலம், வணிகங்கள் மற்றும் கல்வி நிலைகளின் உரிமையை அதிகரிப்பதற்கான முயற்சிகள்.


30 ஆண்டுகளாகப் போராடிய டாக்டர் பி.ஆர். அம்பேத்கர், சமூகத் தனிமைப்படுத்தப்பட்ட தீண்டத்தகாதவர்களுக்கு மறுக்கப்பட்ட சமத்துவமற்ற உரிமைகளான, வேலைவாய்ப்பு மற்றும் கல்வி காரணமாக இந்தக் கொள்கைகளை ஆதரித்தார். இந்தக் கொள்கைகள் தனித்தனியாக அல்ல, ஒன்றாகச் செயல்படுத்த வேண்டும் என்றார். சட்டப் பாதுகாப்புகள், இடஒதுக்கீடுகள் மற்றும் பொருளாதார/கல்வி நடவடிக்கைகள் எவ்வாறு இணைக்கப்பட்டுள்ளன என்பதைப் புரிந்துகொள்ள உள் இடஒதுக்கீடு பற்றி விவாதிக்க மிகவும் முக்கியமானது.


உள் இடஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள், சில உள் - சாதிப் பிரிவை சேர்ந்தவர்கள் மற்ற வகுப்பினரைவிட அதிகமாக பலன் பெற்றுள்ளதாக கூறுகின்றனர். பின்தங்கிய மற்ற சாதிகளுக்கு தனி உள் ஒதுக்கீடு வேண்டும் என்று அவர்கள் நம்புகிறார்கள். சில உட்பிரிவை சேர்ந்தவர்களுக்கு வேலைவாய்ப்பிற்கான இட ஒதுக்கீட்டில் குறைவான பங்கைக் கொண்டிருப்பதாகக் கருதப்படுகிறது. இது மற்ற துணை சாதிகளின் பாகுபாடு காரணமாக இருக்க வேண்டிய அவசியமில்லை. சிலர் அரசு வேலைகளில் பின்தங்கியிருக்கலாம், ஏனெனில் அவர்களில் குறைவானவர்களே கல்வி கற்றுள்ளனர், இது வருமானம் ஈட்டும் மூலதன சொத்துக்களின் பற்றாக்குறையின் விளைவாகும். இந்த பற்றாக்குறை அவர்கள் அரசு வேலை தேடும் திறனை குறைக்கிறது.


சட்டமன்றம், அரசு வேலைகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீடு என்பது சமூகக் குழுக்களை மையமாகக் கொண்டிருக்க வேண்டும், இது தாழ்த்தப்பட்டவர்களுக்கு அவசியம் தேவை. பொருளாதார வலுவூட்டல் கொள்கைகள் வருமானம் மற்றும் கல்வி இல்லாத தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தேவை. உள் இடஒதுக்கீடு குறித்து எடுக்கும் எந்த முடிவிற்க்கும் முன் இந்தக் குறிப்புகளைக் கருத்தில் கொள்ள வேண்டும். உள் இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள், துணை ஜாதி இட ஒதுக்கீட்டை ஆதரிப்பவர்கள், சில துணை ஜாதிகள் மற்றவர்களை விட அதிக பலன் பெற்றுள்ளனர், எனவே பின்தங்கியவர்களுக்கு தனி ஒதுக்கீடு வேண்டும் என்று வாதிடுகின்றனர் சில உட்பிரிவினருக்கு வேலை இடஒதுக்கீட்டில் பின்தங்குவது பாகுபாடு காரணமாக அல்ல, மாறாக குறைந்த கல்வி மற்றும் போதிய வருமானம் இல்லாததால், இது அவர்களின் அரசு வேலைகளைப் பெறுவதற்கான அவர்களின் திறனைக் குறைக்கிறது.


இந்த நிலைமை இருந்தால், இந்த குறிப்பிட்ட துணை சாதியினருக்கான வேலை மற்றும் கல்வி வாய்ப்புகளை அதிகரிப்பதற்கான முயற்சிகள் மூலதன சொத்துக்கள் மற்றும் கல்விக்கான அவர்களின் அணுகலை மேம்படுத்துவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட சமூகத்தில் தற்போது மூலதன சொத்துக்கள் மற்றும் போதுமான கல்வி இல்லாத தனிநபர்கள் மீது கவனம் செலுத்தப்பட வேண்டும். இந்த ஆதாரங்களுக்கான அணுகலை மேம்படுத்தாமல், துணை சாதியின் அடிப்படையில் மட்டுமே இடஒதுக்கீடு வழங்குவது வேலை மற்றும் கல்வியில் அவர்களின் பங்கை திறம்பட அதிகரிக்காது. 


அம்பேத்கர், இடஒதுக்கீட்டுக் கொள்கைகளில் பொருளாதாரம் மற்றும் கல்வி அதிகாரமளித்தல் உள்ளிட்டவை துணை சாதி உள் இடஒதுக்கீட்டை மட்டுமே நம்பியிருப்பதை விட மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று பரிந்துரைத்தார். இந்த அணுகுமுறை குறிப்பாக குறைந்த மூலதன உரிமை மற்றும் கல்வி நிலைகளைக் கொண்ட மக்களுக்கு பயனளிக்கும்.


பாரபட்சமான குழுக்களுக்கான சட்டத் தீர்வுகளை பொருளாதார மற்றும் சமூக உண்மைகள் எவ்வாறு பாதிக்கின்றன என்பதை சட்ட அதிகாரம் புரிந்துகொள்ள வேண்டும். வேலைகளில் சில தாழ்த்தப்பட்ட சாதி உட்பிரிவுகளின் பிரதிநிதித்துவம் குறைவாக இருப்பது சாதிப் பாகுபாடு காரணமாகவா அல்லது குறைந்த வருமான ஆதாரங்கள் மற்றும் குறைந்த கல்வி நிலைகள் காரணமாக உள்ளதா என்பதை அவர்கள் மதிப்பிட வேண்டும். பிற துணை சாதியினரின் பாகுபாடு குறைவான பிரதிநிதித்துவத்தை ஏற்படுத்தினால் (இது சாத்தியமில்லை என்றாலும்), அந்த குறிப்பிட்ட துணை சாதிகளுக்கான இடஒதுக்கீடு நியாயப்படுத்தப்படலாம். இருப்பினும், குறைந்த வருமானம் மற்றும் கல்வியினால் ஏற்படும் வரையறுக்கப்பட்ட திறன்களால் குறைவான பிரதிநிதித்துவம் ஏற்பட்டால், தனிநபர்களை மையமாகக் கொண்ட கொள்கை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த அணுகுமுறை வேலை இடஒதுக்கீடுகளை இன்னும் திறம்பட பயன்படுத்த அவர்களுக்கு உதவும்.


உள் இடஒதுக்கீடு கோரும் சில ஜாதி உட்பிரிவுகளின் குறைவான பிரதிநிதித்துவம் பெரும்பாலும் குறைந்த வருமானம் மற்றும் கல்வி நிலைகள் காரணமாக உள்ளது, மாறாக மற்ற தாழ்த்தப்பட்ட துணை சாதிகளால் பாகுபாடு காட்டப்படுகிறது. வேலைக்கான இடஒதுக்கீட்டில் அவர்களின் குறைந்த பங்கேற்பை நிவர்த்தி செய்ய, வருமானம் ஈட்டும் சொத்துக்கள் மற்றும் கல்விக்கான அவர்களின் அணுகலை மேம்படுத்த வேண்டும். இது அவர்களின் வேலை இடஒதுக்கீடு மற்றும் கல்வி வாய்ப்புகளில் இருந்து பயனடைவதற்கான வாய்ப்புகளை மேம்படுத்தும். எவ்வாறாயினும், கல்விசார் நியாயங்கள் மற்றும் தரவு சார்ந்த சான்றுகள் இல்லாமல் சாதி உட்பிரிவு இடஒதுக்கீடுகள் சாதகமாக இருந்தால், இந்தப் பிரச்சினை நீடிக்கலாம். இது SC/ST/OBC வகைகளுக்குள் உள்ள பல துணை சாதிகள் மற்றும் பழங்குடியினரிடமிருந்து இடஒதுக்கீடுகளுக்கான கோரிக்கைகள் அதிகரிப்பதற்கும் வழிவகுக்கும். இது இடஒதுக்கீட்டுக் கொள்கையை அதன் பல உட்பிரிவுகளுடன் கூடிய சாதி அமைப்பின் பிரதிபலிப்பாக மாற்றக்கூடும்.


சுகதேயோ தோரட் பல்கலைக்கழக மானியக் குழுவின் முன்னாள் தலைவர் மற்றும் ஜேஎன்யுவில் எமரிட்டஸ் பேராசிரியர்.



Original article:

Share: