தென்கிழக்கு ஆசிய நாடுகள் பிரிக்ஸ் (BRICS) அமைப்பில் சேர விரும்புவது ஏன்? -எம்மி சசிபோர்ன்கர்ன்

தென்கிழக்கு ஆசியாவில் வளர்ந்து வரும் பொருளாதாரங்களின் அமைப்பான பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா (Brazil, Russia, India, China, and South Africa (BRICS)) கூட்டமைப்பில் சேர மலேசியா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளும் ஆர்வம் காட்டிவருகின்றன. தென்கிழக்கு ஆசிய நாடுகளை பிரிக்ஸ் அமைப்பு தனது செயல்பாடுகளினால் ஈர்த்து வருகிறது. தாய்லாந்து மற்றும் மலேசியா ஆகியவை இந்த கூட்டமைப்பில் சேர விருப்பம் தெரிவித்துள்ளன.


கடந்த மாதம், தாய்லாந்து அதிகாரப்பூர்வமாக உறுப்பினராகக் கோரியது, மேலும், மலேசிய பிரதமர் அன்வர் இப்ராஹிம் (Anwar Ibrahim) சீன செய்தி இணையதளமான குவாஞ்சாவுக்கு அளித்த பேட்டியில் மலேசியா விரைவில் சேருவதற்கான முறையான நடைமுறைகளைத் தொடங்கும் என்று குறிப்பிட்டார்.


பிரிக்ஸில் உறுப்பினராக இருப்பது வர்த்தகம் மற்றும் முதலீட்டு வாய்ப்புகளை உருவாக்கும், எனவே ‘ஏன் உறுப்பினராக சேரவில்லை?’ என்பது தான் என்று  கேள்வி தென்கிழக்கு ஆசிய நாடுகள் அறக்கட்டளையின் (Association of Southeast Asian Nations (ASEAN)) நிர்வாக இயக்குனர் பிடி ஸ்ரீசங்கம் கூறினார். 


ஆசிய ஆய்வுகளில் நிபுணத்துவம் பெற்ற தாஸ்மேனியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜேம்ஸ் சின், "தாய்லாந்து மற்றும் மலேசியா இரண்டும் முக்கியமான நாடுகளாகக் கருதப்படுகின்றன" என்று குறிப்பிட்டார்.


"அந்த நாடுகளின் சர்வதேச செல்வாக்கை அதிகரிக்க பிரிக்ஸ் போன்ற அமைப்பில் சேருவது அவர்களுக்கு பயனளிக்கும். வர்த்தகம் ஒரு குறிப்பிடத்தக்க நன்மையாக இருக்கும்," என்று அவர் மேலும் கூறினார்.


பிரிக்ஸ் அமைப்பில்,  முதலில் பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா மற்றும் தென்னாப்பிரிக்கா ஆகிய நாடுகள் உறுப்பினர்களாக இடம் பெற்றிருந்தனர். கடந்த ஆண்டு அதன் உறுப்பினர்களை விரிவுபடுத்த இந்த அமைப்பு முடிவு செய்தது. எகிப்து, எத்தியோப்பியா, ஈரான், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவற்றில் சேர அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.  அதிகாரப்பூர்வ பெயர் அறிவிக்கப்படவில்லை என்றாலும் விரிவாக்கப்பட்ட குழு "BRICS+" என்று அழைக்கப்படலாம். மொத்தத்தில், இந்த நாடுகள் உலக மக்கள்தொகையில் சுமார் 45%, தோராயமாக 3.5 பில்லியன் மக்கள் வாழ்கின்றனர்.

உலக வங்கியின் (World Bank data) தரவுகளின்படி, பிரிக்ஸ் உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த பொருளாதாரங்கள் மொத்தமாக $30 டிரில்லியன் (€28 டிரில்லியன்) ஆகும். இது உலகப் பொருளாதாரத்தில் சுமார் 28% ஆகும். பலமான டிஜிட்டல் சந்தைகளைக் கொண்ட நாடுகளுடன் ஒருங்கிணைப்பதன் மூலமும், மற்ற உறுப்பினர்களிடமிருந்து சிறந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமும், மலேசியாவின் டிஜிட்டல் பொருளாதார வளர்ச்சியை இந்தக் கூட்டமைப்பு துரிதப்படுத்த முடியும் என்று புதுடெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இந்தோ-பசிபிக் ஆய்வு மையத்தின் இணைப் பேராசிரியர் ராகுல் மிஸ்ரா கூறினார். சேவைகள், உற்பத்தி மற்றும் விவசாயம் போன்ற முக்கிய துறைகளிலும் தாய்லாந்து முதலீடுகளை ஈர்க்கும்" என்று அவர் கூறினார். சீனாவுடன் மலேசியா மற்றும் தாய்லாந்தின் தற்போதைய வர்த்தக உறவுகள் பிரிக்ஸில் சேருவதற்கான அவர்களின் முடிவை பாதித்ததாக சின் நம்புகிறார். மலேசியாவின் மிகப்பெரிய வர்த்தகப் பங்காளியாக சீனா 15 ஆண்டுகளாகவும் தாய்லாந்து 11 ஆண்டுகளாகவும் இருந்ததாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன. பிரிக்ஸில்  இணைந்த இரு தென்கிழக்கு ஆசிய நாடுகளும் சீனாவுடனான தங்கள் உறவுகளை வலுப்படுத்தும்" என்று சின் DW இடம் கூறினார்.

நடுநிலையாக இருத்தல்


கடந்த மாதம், தாய்லாந்து வெளியுறவு அமைச்சர் மாரிஸ் சாங்கியாம்பொங்சா, பிரிக்ஸில் இணைவதை "பக்கங்களைத் தேர்ந்தெடுக்கும்" செயலாகவோ அல்லது வேறு எந்தக் கூட்டமைப்பையும் சமப்படுத்துவதற்கான ஒரு வழியாகவோ கருதவில்லை என்று கூறினார். 

தாய்லாந்து அனைத்து நாடுகளுடனும் நட்புறவை கொண்டுள்ளது. வளரும் நாடுகளுக்கும் பிரிக்ஸ் உறுப்பினர்களுக்கும் இடையே நாம் பாலமாக முடியும்,” என்று மாரிஸ் கூறினார். பிரிக்ஸ் தவிர, பெரும்பாலும் மேற்கத்திய நாடுகளை உள்ளடக்கிய பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான பாரிஸை தளமாகக் கொண்ட அமைப்பில் (Organization for Economic Cooperation and Development (OECD)) சேர தாய்லாந்தும் விண்ணப்பித்துள்ளது. 


"தாய்லாந்து போன்ற சிறிய மற்றும் நடுத்தர சக்திகளுக்கு வரையறுக்கப்பட்ட விருப்பங்கள் உள்ளன," என்று பிட்டி கூறினார். மேற்கத்திய தாராளவாத ஜனநாயகங்களுடன் தாய்லாந்து இணைந்து செயல்பட்டுவருகிறது. அதே நேரத்தில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுடன்  உறவுகளை ஆழப்படுத்துகிறது. மலேசியாவில், தற்போது அமெரிக்காவை விட அதிகமான மக்கள் சீனாவை விரும்புகிறார்கள் என்று சிங்கப்பூரை தளமாகக் கொண்ட ஒரு சிந்தனைக் குழுவான ISEAS-Yusof Ishak நிறுவனத்தின்  சமீபத்திய கணக்கெடுப்பு தெரிவிக்கிறது.


மலேசியாவில், அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனாவுக்கு ஆதரவாக மக்களின் உணர்வு உள்ளது என்று மலேஷியாவில், சிங்கப்பூர் சிந்தனைக் குழுவான  ISEAS-Yusof Ishak நிறுவனம் நடத்திய சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. 

 

ஜூன் மாதம், சீனப் பிரதமர் லீ கியாங்கின் மூன்று நாள் மலேசியப் பயணத்தின் போது, ​​பல்வேறு துறைகளில் சீனாவின் ஆதிக்கத்தைப் பற்றி அன்வார் விமர்சித்தார். மலேசியா, நடுநிலையை கடைபிடித்து வருகிறது. சீனா உட்பட அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு மலேசியா உறுதியாக இருப்பதாக அன்வார் கூறினார்.


மற்ற ஆசியான் (ASEAN) நாடுகள் பின்பற்றுமா?


தென்கிழக்கு ஆசியாவில் உள்ள மலேசியா மற்றும் தாய்லாந்து மட்டும் பிரிக்ஸ் அமைப்பில் சேர ஆர்வம் காட்டவில்லை. மே மாதம், வியட்நாமின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் பாம் து ஹாங், பிரிக்ஸ் உறுப்பினர் விரிவாக்கத்தை வியட்நாம் உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகக் கூறினார்.


வியட்நாம், லாவோஸ் மற்றும் கம்போடியா ஆகியவை சீனா, இந்தியா மற்றும் ரஷ்யாவுடனான நல்ல உறவுகளின் காரணமாக சாத்தியமான விண்ணப்பதாரர்களாக இருக்கலாம் என்று மிஸ்ரா நம்புகிறார். வியட்நாமைப் பொறுத்தவரை, குறிப்பிடத்தக்க முதலீடுகள் மத்திய கிழக்கு, லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்காவில் பாரம்பரிய  சந்தைகளை தாண்டி வர்த்தகத்தை அதிகரிக்க விரும்புகிறது.

 

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள ஒரே ஜி-20 உறுப்பு நாடு இந்தோனேசியா மட்டுமே. மூன்று ஆண்டுகளுக்குள் பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் மேம்பாட்டுக்கான அமைப்புடனான (Organization for Economic Cooperation and Development (OECD))  உறவை முடிவுக்கு கொண்டு இந்தோனேசியா முடிவு செய்தது. பிரிக்ஸ்  அமைப்பில் இந்தோனேசியா உறுப்பினராகலாம் என்று செய்திகள் பரவின.

 

எனினும், இந்தோனேசிய அதிபர் ஜோகோ விடோடோ, பிரிக்ஸ் உறுப்பினருக்கான விருப்பக் கடிதத்தை சமர்ப்பிக்க வேண்டாம் என முடிவு செய்தார். ஜனவரியில், இந்தோனேசிய வெளியுறவு மந்திரி ரெட்னோ மர்சுடி, ஜகார்த்தா இன்னும் பிரிக்ஸ் அமைப்பில் சேருவதன் நன்மை தீமைகளை ஆராய்ந்து வருவதாகக் கூறினார்.

ORIGINAL LINK:

https://indianexpress.com/article/explained/explained-global/southeast-asian-countries-to-join-brics-9433532/

Share:

சரக்கு மற்றும் சேவை வரி புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் அரசாங்கம் வெளியப்படைத்தன்மையுடன் இருக்க வேண்டும்

 வீட்டுச் செலவுகள், வேலைகள் மற்றும் வரிகள் பற்றிய தரவு பொருளாதாரத்தின் பல்வேறு பகுதிகளைப் புரிந்துகொள்ள உதவுகிறது. இந்தத் தரவு இல்லாமல், கொள்கை வகுப்பது மிகவும் சவாலானது. 


ஜூலை 1-ஆம் தேதி, சரக்கு மற்றும் சேவை வரி (goods and service tax (GST)) அமல்படுத்தப்பட்டு ஏழு ஆண்டு நிறைவு விழாவை நிதி அமைச்சகம் கொண்டாடியது. அதே நேரத்தில், முந்தைய நடைமுறைகளில் இருந்து மாற்றமாக, விரிவான சரக்கு மற்றும் சேவை வரி தரவுகளை வெளியிடுவதை நிறுத்த அரசாங்கம் முடிவு செய்துள்ளது.  இந்த மாதாந்திர தரவுகளில் மொத்த வரி வசூல், இழப்பீடு கூடுதல் வரி மூலம் வருவாய் மற்றும் பல்வேறு முக்கிய நோக்கங்களுக்காக மாநில வாரியான வரி புள்ளிவிவரங்கள் சேகரிக்கப்படுகின்றன.


பல பொருளாதார குறிகாட்டிகளுக்கான தரவுகள் பெரும்பாலும் தாமதமாக வெளிவருவதால், சரக்கு மற்றும் சேவை வரி தரவு பொருளாதாரத்தின் நிலையை சரியான நேரத்தில் அளவிடும். எடுத்துக்காட்டாக, முதல் காலாண்டிற்கான (ஏப்ரல்-ஜூன்) மொத்த உள் நாட்டு உற்பத்தி தரவு இரண்டு மாத தாமதத்துடன் ஆகஸ்ட் இறுதியில் வெளியிடப்படுகிறது. இதேபோல், ஏப்ரல் மாதத்திற்கான தொழில்துறை உற்பத்தி தரவு ஜூன் 12 அன்று வெளியிடப்பட்டது. ஒன்றிய மற்றும் மாநில வசூல் அரசுகள் உட்பட அரசாங்கம் திட்டமிட்டபடி வருவாய் இலக்குகளை எட்டுகிறதா என்பதை சரக்கு மற்றும் சேவை வரி தரவு காட்டுகிறது. 


அதிகாரப்பூர்வ தரவு வெளியீடுகள் பற்றிய சர்ச்சை புதிதல்ல. எடுத்துக்காட்டாக, 2017-18-ஆண்டு  நுகர்வு செலவின கணக்கெடுப்பை "தர சிக்கல்கள்" (quality issues) காரணமாக அரசாங்கம் சரக்கு மற்றும் சேவை வரி  தரவை வெளியிடவில்லை. 2017-18-ஆண்டு  வேலைவாய்ப்பு மற்றும் வேலையின்மை கணக்கெடுப்பு குறித்து விவாதம் நடைபெற்றது. காலப்போக்கில், தரவுகளில் உள்ள இடைவெளிகளைப் பற்றிய கவலைகளை அரசாங்கம் நிவர்த்தி செய்து புள்ளியியல் அமைப்பை வலுப்படுத்தியுள்ளது. வழக்கமான வேலைவாய்ப்பு ஆய்வுகள் இப்போது நடத்தப்பட்டு அதன் முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. சமீபத்திய வீட்டு நுகர்வு செலவு கணக்கெடுப்புக்கான தரவு பொதுத் தேர்தலுக்கு முன் வெளியிடப்பட்டது. சமீபத்தில், 2021-22 மற்றும் 2022-23க்கான ஒருங்கிணைந்த துறை நிறுவனங்களின் வருடாந்திர கணக்கெடுப்பின் முடிவுகளை அரசாங்கம் வெளியிட்டது. இந்த ஆண்டுகளில் முறைசாரா துறை எவ்வாறு செயல்பட்டது என்பதைக் இந்த தரவு காட்டுகிறது. 


விரிவான சரக்கு மற்றும் சேவை வரி தரவுகளை தொடர்ந்து வெளியிடுவதன் மூலம் அரசாங்கம் வெளிப்படைத்தன்மைக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். கூடுதலாக, நீண்டகாலமாக தாமதமாகி வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பை அரசாங்கம் உடனடியாக நடத்த வேண்டும். தொற்றுநோய் காரணமாக கணக்கெடுப்பு நடத்துவதில் தாமதம் ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, தாமதங்களை நியாயப்படுத்துவது கடினம். இந்த நேரத்தில் பல அதிகாரப்பூர்வ ஆய்வுகள் நடத்தப்பட்டு பல தரவு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன. பொருளாதாரத்தின் பல்வேறு அம்சங்களைப் புரிந்துகொள்வதற்கு வீட்டுச் செலவுகள், வேலைவாய்ப்பு மற்றும் வரிகள் பற்றிய தரவு அவசியம். இத்தகைய தரவுகள் இல்லாமல், கொள்கைகளை வகுப்பது மிகவும் கடினம்.    

ORIGINAL LINK:
Share:

அரசியல் சட்டத்தின் மீது அரசியல்வாதிகளின் புதிய மரியாதைக்கு மத்தியில், ஒன்றை நினைவில் கொள்ள வேண்டும் -உபேந்திர பாக்ஸி

வாக்காளர்கள் தங்கள் சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான ஒரு வழியாக அரசியலமைப்பை பார்க்கிறார்கள். தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர்கள், குடிமக்கள் மற்றும் நீதித்துறை உட்பட அனைவரும் அதிகாரத்தை தவறாக பயன்படுத்துவதை தடுக்க உறுதியளிக்க வேண்டும்.


அனைத்து அரசியல் கட்சிகளும், அவற்றின் தலைவர்களும் இப்போது இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை அதிகமாகப் பாராட்டி ஆதரிப்பதாகத் தெரிகிறது. 18-வது மக்களவையின் கடினமான தேர்தலைத் தொடர்ந்து, சமீபத்தியத்தில் நடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரின் போது இது தெளிவாகத் தெரிந்தது. பல உறுப்பின்னர்கள், பதவியேற்பின் போது, ​​"ஜெய் சம்விதான்" (Jai Samvidhan) என்றும் கூறினர். மேலும், பொதுக்கூட்டங்களிலும் இந்த முழக்கம் ஒலித்தது. இந்த பிரமாணமே அரசியலமைப்பையும், இந்தியாவின் இறையாண்மையையும் ஒருமைப்பாட்டையும் நிலைநிறுத்துவதாக உறுதியளிக்கிறது.


அரசியலமைப்பின் பிரிவு-99, ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினரும் மூன்றாவது அட்டவணையின்படி உறுதிமொழியை எடுக்க வேண்டும் என்று கூறுகிறது. சட்டத்தால் நிறுவப்பட்ட இந்திய அரசியலமைப்பின் மீது உண்மையான நம்பிக்கையையும் விசுவாசத்தையும் கொண்டிருப்பதாக அவர்கள் உறுதியளிக்கின்றனர். நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள் செல்லுபடியாகுமா என்பதை அரசியலமைப்புச் சட்டம் தீர்மானிக்கும் என்பதால் இந்த சொற்றொடர் புதிராக உள்ளது. இதற்கு மாற்றாக அல்ல. ஆரம்பத்தில் சந்தேகங்கள் இருந்தபோதிலும், அரசியலமைப்புத் திருத்தம் என்பது செல்லுபடியாகும் தன்மைக்காக அரசியலமைப்பு நீதிமன்றங்களால் மறுபரிசீலனை செய்யக்கூடிய ஒரு சட்டமாகும் என்பதை இப்போது அனைவரும் ஒப்புக்கொள்கிறார்கள்.


 அரசியல் சட்டத்தின் மீதான அரசியல்வாதிகளின் சமீபத்திய அன்பு மற்றும் மரியாதையின் வெளிப்பாடு முக்கியமாக அரசியல் போட்டியில் ஜனநாயக நியாயத்தன்மையை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்று கூறலாம். அரசியலமைப்பு கடமைகள் (பாகம் IV-A) அல்லது மாநிலக் கொள்கையின் வழிகாட்டுதல் கோட்பாடுகள் (பகுதி IV), அல்லது அனைவருக்கும் சுதந்திரம் மற்றும் சமத்துவ உரிமைகள் (பாகம் III) ஆகியவற்றைக் கடைப்பிடிப்பதைப் பற்றி வாதிடலாம்.


எவ்வாறாயினும், வாக்காளர்கள் எதிர்காலத்தில் அரசியல் நடவடிக்கைக்கு எதிராக ஒவ்வொருவரின் சொந்த சுதந்திரத்திற்கான பாதுகாப்பாளராக அரசியலமைப்பு பற்றிய சிந்தனையை சாமர்த்தியமாக உருவாக்கியுள்ளனர். நான் ஒரு அரசியல் விஞ்ஞானியோ அல்லது தேர்தல்களில் நிபுணரோ (psephologist) அல்ல. ஆனால், தேர்தல் முடிவுகள் சத்தியம் செய்யும் (oathed) குடிமக்களுக்கும், செய்யாதவர்களுக்கும் (un-oathed) இடையிலான உறவுகள் எவ்வாறு மாறுகின்றன என்பதைக் காட்டுவதை நான் எப்போதும் பார்த்திருக்கிறேன். ஜனநாயகத்தின் முரண்பாடுகள், அர்ப்பணிப்புள்ள குடிமக்கள் எவ்வாறு அரசியலமைப்பு மேம்பாடுகளை உருவாக்குகிறார்கள் மற்றும் அனைத்து அரசியல் அதிகாரங்களும் பயன்படுத்தப்படும் "மக்கள்" (people) எவ்வாறு சமூகத்தின் பலவீனமான பிரிவினராக ஒதுக்கப்பட்டுள்ளனர் என்பதைக் பற்றியது. 


மூன்றாவது அட்டவணையில் உள்ள உறுதிமொழி முக்கியமானது. உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களின் நீதிபதிகளுக்கான பதவிப் பிரமாணம் என்பது அச்சம் அல்லது ஒருப்பக்கச் சார்பு இல்லாமல் கடமைகளைச் செய்வதும், அரசியலமைப்பு மற்றும் சட்டங்களை நிலைநிறுத்துவதும் அடங்கும். இந்த சொற்றொடர் ஒரு பொது ஆர்ப்பாட்டமாக சட்டத்தின் செயல்திறனை வலியுறுத்துகிறது மற்றும் நீதித்துறைக்கான சுதந்திரத்தை வரையறுக்கிறது. இது நீதித்துறைக்கு உள்ளேயும் வெளியேயும் உள்ள அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாப்பை உறுதி செய்கிறது.


"செயல்" என்ற சொல்லுக்கு பொதுவில் செயல்படுவது அல்லது நிரூபிப்பது என்று பொருள். இந்தியாவில், சட்டம் ஒரு பொது ஆர்ப்பாட்டம் (law as performance, a public demonstration) என்ற கருத்து இன்னும் நன்கு ஆய்வு செய்யப்படவில்லை. நீதித்துறையின் சுதந்திரமானது உள்ளேயும் (நீதிபதிகள், வழக்குரைஞர்கள் மற்றும் வழக்கறிஞர்களிடமிருந்து) மற்றும் வெளியேயும் (அரசாங்கம் மற்றும் பொருளாதாரத்திலிருந்து) அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்கப்படுவதாக வரையறுக்கப்படுகிறது.


நீதியரசர்கள் தங்கள் சத்தியப்பிரமாணத்தை பின்பற்றினால் அது நீதித்துறை மீறலா? தனிப்பட்ட நம்பிக்கைகள் அல்ல, அறிவு மற்றும் தீர்ப்பின் அடிப்படையிலான முடிவுகளை எடுக்க அவர்கள் கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். இங்கே, அறிவு என்பது நீதிமன்றத்தின் அடிப்படை மதிப்புகளைக் குறிக்கிறது, சட்ட மரபு மட்டுமல்ல. தீர்ப்பு என்பது விளக்கக் கொள்கைகளுக்கு உண்மையாக இருப்பது, சட்ட முடிவுகளுக்கு வழிகாட்டுவதற்கு முன்னுதாரணங்களைப் பயன்படுத்துதல். எவ்வாறாயினும், வெளிப்படையான அநீதியின் முன்னுதாரணங்களிலிருந்து நியாயமான நியாயப்படுத்தல்களை இது அனுமதிக்கிறது.


ஜூலை 4, 2018 அன்று, இந்தியாவின் 45-வது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி மற்றும் ஏ.எம்.கான்வில்கர் ஆகியோருடன், சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளைப் புரிந்துகொள்வதும், நடைமுறைப்படுத்துவதும் அரசியலமைப்பை மதித்து, புத்துயிர் பெறுவது முக்கியம் என்று வலியுறுத்தினார். அரசியலமைப்பு அதிகாரிகள் அரசியலமைப்புச் சட்டத்தைப் புதுப்பிப்பதைப் புரிந்துகொண்டு அரவணைத்து, தங்கள் பொறுப்புகளை நிறைவேற்றி, அரசியலமைப்பின் உள்ளடக்கத்தை உண்மையாக நிலைநிறுத்த வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். அரசியலமைப்பின் பார்வைக்கான இந்த விழிப்புணர்வு அரசியலமைப்பு இலட்சியங்களின் உண்மையான உணர்தலை அனுமதிக்கிறது.


நீதித்துறைப் பிரமாணம் என்பது சட்டத்தின் ஆட்சியின் நீதித்துறை விளக்கத்தை புதுமைப்படுத்துவதற்கும், நீதித்துறை கடமைகள் மற்றும் தீர்வு நடவடிக்கை பற்றிய நியாயமான தீர்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியின் நடைமுறைகளை மறுசீரமைப்பதற்கும் ஒரு நிலையான அழைப்பாகும். பிழை திருத்தம், சீர்திருத்தம் மற்றும் மறுமலர்ச்சி, நீதித்துறை கடமைகளுக்கு உள்ளார்ந்தவை இவ்வாறு அரசியலமைப்பால் பரிந்துரைக்கப்பட்ட நீதிப் பிரமாணத்தின் சேவையில் வைக்கப்படுகிறது. கேசவானந்த பாரதி வழக்கின் முடிவின் முடிவில் (ஏப்ரல் 23, 2024 அன்று) பல சட்டப் பள்ளிகள் மற்றும் நன்றியுள்ள இந்திய மக்களால் பெருமையுடன் கொண்டாடப்பட்ட கேசவானந்த பாரதி வழக்கின்  முடிவில் இருந்து நீதிப் பிரமாணம் முழுமையாகச் செயல்பட்டு வருகிறது. பொதுவாக, நீதித்துறை மீறலைக் காட்டிலும், அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவதுதான் நம்மைத் தொந்தரவு செய்யும் பிரச்சனையாகப் பார்க்கப்படுகிறது.  


கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்பும் அதன் வழித்தோன்றல்களும் இரண்டு முக்கிய வழிமுறைகளை நிறுவியுள்ளன: முதலில், முடிவெடுக்கும் துறைகளில் அரசியலமைப்பு அதிகாரங்கள் முழுமையானவை மற்றும் உயர்ந்தவை. இரண்டாவது, அதே நேரத்தில், அனைத்து அதிகாரங்களுக்கும் வரம்புகள் உள்ளன மற்றும் பொறுப்பு வகிக்க வேண்டும். எந்தவொரு தனிநபரோ அல்லது நிறுவனமோ இறையாண்மை அதிகாரங்களைக் கொண்டிருக்கவில்லை. மாறாக, உச்ச அரசியலமைப்பு அதிகாரங்கள் வரையறுக்கப்பட்ட வரம்புகளுக்குள் வழங்கப்படுகின்றன, இதில் நீதித்துறை அதிகாரம் மற்றும் நீதித்துறை மறு ஆய்வுக்கான அரசியலமைப்பு செயல்முறை ஆகியவை அடங்கும். கேசவானந்த பாரதிக்குப் பிறகு பெரும்பாலான திருத்தங்கள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அரசியல் கூற்றுகள் வேறுவிதமாக கூறினாலும், அடிப்படை கட்டமைப்பு கோட்பாட்டை மீறுவது சில மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன.  அடிப்படை அமைப்பு இரண்டு பகுதிகளைக் கொண்டுள்ளது. முதலாவதாக, இது தடயவியல் சுதந்திரங்களை (forensic freedoms) உள்ளடக்கியது. அதாவது நீதிமன்றத்தில் வெளிப்படையாக வாதிடுவதற்கான சுதந்திரம். இரண்டாவதாக, நீதித்துறையின் சுதந்திரத்தை உறுதி செய்கிறது. இவற்றை நீக்குவது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கொள்கைகளையும் பொறுப்பான இறையாண்மையையும் ஒழித்துவிடும். சாராம்சத்தில், இது முறையான அதிகாரத்தின் கருத்தை குறைமதிப்பிற்கு உட்படுத்தும். 


நிச்சயமாக, அரசியலமைப்பு என்பது வெற்று விதிகளின் தொகுப்பு அல்ல,  அதன் அடிப்படை உணர்வையும் நாம் பார்க்க வேண்டும் என்றும் பிரதமர் ராஜ்யசபாவில் வலியுறுத்தினார். அதன் முக்கியமான கொள்கைகளையும் நாம் புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் பரிந்துரைத்தார். இந்த யோசனை கேசவானந்த பாரதி வழக்கின் தீர்ப்புகள் மற்றும் அடுத்தடுத்த தீர்ப்புகளுடன் ஒத்துப்போகிறது. அரசியலமைப்பின் பாதுகாப்பு இப்போது குறிப்பிட்டவற்றில் கவனம் செலுத்த வேண்டும். அனைத்துக் கட்சி உடன்படிக்கையுடன் எதிர்காலத் திருத்தங்களைப் பொருட்படுத்தாமல், அதன் அடிப்படை கட்டமைப்பு மற்றும் அடிப்படைக் கொள்கைகள் எப்போதும் பாதுகாக்கப்படுவதையும், ஒருபோதும் மறைக்கப்படாமல் இருப்பதையும் நாம் உறுதி செய்ய வேண்டும்.  இந்த அழைப்புக்கு இந்திய மக்கள் தீவிரமாகவும் நேர்மறையாகவும் பதிலளித்துள்ளனர். அரசியலமைப்பு உயரதிகாரிகளும் இதைச் செய்வார்களா என்பது கேள்வி. 1962 ஆம் ஆண்டு பாப் டிலானின் பாடல் குறிப்பிடுவது போல் பதில் எப்போதும் நிச்சயமற்றதாக இருக்க வேண்டுமா?

 ORIGINAL LINK:

https://indianexpress.com/article/opinion/columns/amidst-politicians-new-reverence-for-constitution-one-thing-to-remember-9433639/

Share:

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் பங்கேற்பு : ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்றால் என்ன?, அது ஏன் முக்கியமானது? -ரிஷிகா சிங்

இரஷ்யாவும் சீனாவும் உறுப்பினர்களாக இருப்பதால், சர்வதேச விவகாரங்களில் மேற்கத்திய நாடுகளின் தலைமையிலான அமைப்புகளுக்கு மாற்றாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation (SCO)) பார்க்கப்படுகிறது. இந்த அமைப்பு சமீபத்திய வருடங்களில் விரிவடைந்து வருகிறது. இந்தியாவிற்கு அதன் தகுதி என்ன? 


கஜகஸ்தான் தலைநகர் அஸ்தானாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) உச்சிமாநாட்டின் இறுதி நாளான வியாழக்கிழமை ஜூலை 4 அன்று இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் ஜெய்சங்கர் சீன வெளியுறவு அமைச்சர் வாங் யீயுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.


முன்னதாக, புதன்கிழமையன்று தொடங்கிய இரண்டு நாள் உச்சிமாநாட்டின் தொடர்ச்சியாக, ஜெய்சங்கர் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உறுப்பினர்களான தஜிகிஸ்தான் மற்றும் ரஷ்யா மற்றும் புதிய உறுப்பினர் பெலாரஸ் ஆகிவற்றின் தலைவர்களுடன் இருதரப்பு சந்திப்புகளையும் நடத்தினார். 


"இன்று பெலாரஸின் வெளியுறவுத்துறை அமைச்சர் Maksim Ryzhenkov-ஐ சந்திப்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பிற்கு (SCO) பெலாரஸை அதன் புதிய உறுப்பினராக வரவேற்கிறோம். பொதுவாக இருதரப்பு உறவு மற்றும் அதன் எதிர்கால வளர்ச்சி சாத்தியம் பற்றி விவாதித்தோம்," என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் X வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். பெலாரஸ் மற்றும் ஈரான் முன்பு இந்த குழுவில் பார்வையாளர் அந்தஸ்து இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு ஈரான் அதிகாரப்பூர்வமாக இந்த அமைப்பில் இணைந்தது. பெலாரஸ் வியாழக்கிழமை முறைப்படி இந்த அமைப்பில் அனுமதிக்கப்பட்டது. 


ஷாங்காய் அமைப்பில் இந்தியாவுக்கான முக்கியத்துவம் என்ன?, அது எவ்வாறு உருவானது?


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்றால் என்ன?


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) 1996-ல் சீனா, ரஷ்யா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான் மற்றும் தஜிகிஸ்தான் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்ட "ஷாங்காய் ஐந்தில்" (Shanghai Five) இருந்து உருவானது. 


1991-ல், சோவியத் ஒன்றியம் 15 சுதந்திர நாடுகளாக கலைக்கப்பட்டது. இது தீவிரவாத மதக் குழுக்கள் (extremist religious groups) மற்றும் இனப் பதட்டங்கள் (ethnic tensions) குறித்து அப்பகுதியில் கவலைகளை எழுப்பியது. இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க, பாதுகாப்பு விஷயங்களில் நாடுகளின் ஒத்துழைப்புக்காக ஒரு குழு உருவாக்கப்பட்டது.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) ஜூன் 15, 2001 அன்று ஷாங்காயில் ஒரு சர்வதேச அமைப்பாக நிறுவப்பட்டது. மேலும், உஸ்பெகிஸ்தான் நாடு இவ்வமைப்பில் ஆறாவது  உறுப்பினராக சேர்த்தது. பெலாரஸ் இந்த அமைப்பில் சேருவதற்கு முன்பு, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் இந்தியா, ஈரான், கஜகஸ்தான், சீனா, கிர்கிஸ்தான், பாகிஸ்தான், ரஷ்யா, தஜிகிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய ஒன்பது உறுப்பினர்கள் இருந்தன. ஆப்கானிஸ்தான் மற்றும் மங்கோலியா பார்வையாளர் அந்தஸ்தைப் பெற்றுள்ளன.


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) ஏன் முக்கியத்துவம் வாய்ந்தது?


நாடுகளின் பாதுகாப்பு பிரச்சினைகளைக் கையாளும் சில சர்வதேச அமைப்புகளில் ஒன்றான  ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO), முக்கியமாக ஆசிய உறுப்பினர்களை உள்ளடக்கியது. ரஷ்யாவும் சீனாவும் மேற்கத்திய சர்வதேச ஒழுங்கிற்கு ஒரு மாற்றீடாக தங்கள் நிலைப்பாட்டை வலியுறுத்துகின்றன. பிரிக்ஸ் (BRICS) நாடுகளுடன் இணைந்து அமெரிக்க நாடுகளின் ஆதிக்கத்திற்கு எதிராக நிலைப்பாடுகளை எடுத்துள்ளன. 


ஆனால் சமீபத்திய ஆண்டுகளில், சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே "வரம்பற்ற நட்புறவு" (limitless friendship) இருந்தபோதிலும், இதுபோன்ற அவைகளில் செல்வாக்கு செலுத்துவதில் சீனாவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே போட்டி நிலவுகிறது. 


மத்திய ஆசிய குடியரசுகள் ரஷ்யாவின் செல்வாக்குப் பகுதியின் ஒரு பகுதியாக பார்க்கப்படுகின்றன. இருப்பினும், எண்ணெய் மற்றும் எரிவாயு நிறைந்த இந்த நாடுகளில், உள்கட்டமைப்பு திட்டங்களில் சீனா முதலீடு செய்துள்ளது. இதன் அடிப்படையில், வளர்ந்து வரும் பொருளாதார வலிமையை மேம்படுத்துகிறது.  பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியும் (Belt and Road Initiative (BRI))  அத்திட்டத்தின் ஒரு பகுதியாகும்.  


இந்தியாவும் பாகிஸ்தானும் 2017-ல் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) இணைந்துள்ளன. இது நாடுகளின் செல்வாக்கிற்கான போட்டியின் ஒரு பகுதியாகக் காணப்பட்டது.  இரஷ்யா, நீண்டகால கூட்டாண்மை காரணமாக இந்தியாவை ஆதரித்தது. அதே நேரத்தில் ரஷ்யாவின் செல்வாக்கை சமநிலைப்படுத்த சீனா பாகிஸ்தானை ஆதரித்துள்ளது.


இரஷ்யா மற்றும் சீனாவுடனான அமெரிக்காவின் உறவுகள் மோசமடைந்து வருவதன் பின்னணியில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிற்பகுதியில் பெரிய விரிவாக்கம் காணப்பட வேண்டும். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் கீழ் தொடங்கிய 2022 ரஷ்யா-உக்ரைன் போர் மற்றும் சீனாவுடனான வர்த்தக பதட்டங்கள் போன்ற நிகழ்வுகளால் மேலும் பல நாடுகளை தங்கள் அமைப்பில் சேர்க்க உத்வேகம் அளித்துள்ளன. 


2023 ஆம் ஆண்டில், சீன அரசு ஊடகமான குளோபல் டைம்ஸ், ஈரான் அமைப்பில் இணைவது அதன் சர்வதேச அந்தஸ்தையும் செல்வாக்கையும் உயர்த்துவதாகக் கருதப்படுகிறது. ஈரானைப் பொறுத்தவரை, அமெரிக்க இராஜதந்திர சவால்களை முறியடிப்பதில் இது ஒரு குறிப்பிடத்தக்க நடவடிக்கையாகும்.


இருப்பினும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) பல உறுதியான முடிவுகளை எடுக்க முடியாது. பைனான்சியல் டைம்ஸில் வந்துள்ள கட்டுரை ஒன்று அதன் முன்முயற்சிகளின் தெளிவற்ற வழிகாட்டுதல்கள் நாடுகளிடையேயான போட்டிகளைத் தீர்க்காமல் அவற்றைக் கவனிக்க அனுமதிக்கின்றன என்று குறிப்பிட்டுள்ளது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் உறவுகளில் விரிசல் அடைந்திருந்தாலும், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பானது (SCO) இரு நாடுகளையும் உள்ளடக்கியது. இந்தியாவும் பல்வேறு பிரச்சினைகளில் சீனாவுடன் சில மோதல்களை எதிர்கொள்கிறது. ஆனால் இந்த சவால்கள் தீர்க்கப்படாமல் உள்ளன.


ஸ்டிம்சன் மையத்தின் (Stimson Center) சீன திட்டத்தின் (China Program) இயக்குனர் யுன் சன், ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் (SCO) குறியதாவது, "பல முயற்சிகளின் தெளிவற்ற வார்த்தைகள், நாடுகளுக்கு உதட்டளவில் சேவை செய்ய அனுமதித்தது" என்று கூறினார். நாடுகள் சீனாவின் கோரிக்கைகளை ஒரு கட்டத்திற்கு ஏற்றுக்கொள்கின்றன. ஆனால், அழுத்தம் கொடுக்கப்படும்போது தங்கள் சொந்த நலன்களைப் பின்பற்றுகின்றன. 


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்புக்கும் (SCO) இந்தியாவுக்கும் என்ன சம்பந்தம்?


ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO)  1991-ல் உருவாக்கப்பட்டதில் இருந்து இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளைக் கொண்டிருக்காத மத்திய ஆசிய நாடுகள் இந்தியாவுடன் ஒத்துழைக்க வாய்ப்பு வழங்குகிறது. பாதுகாப்பு பிரச்சினைகள் குறித்து முக்கிய பிராந்திய தலைவர்களுடன் தொடர்பு கொள்ள இந்தியாவுக்கு இது உதவுகிறது. எடுத்துக்காட்டாக, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) பிராந்திய பயங்கரவாத எதிர்ப்பு அமைப்பு (Regional Anti-Terrorist Structure (RATS)) பயங்கரவாத எதிர்ப்பு பயிற்சிகள், உளவுத்துறை பகுப்பாய்வு மற்றும் பயங்கரவாத இயக்கங்கள் மற்றும் போதைப்பொருள் கடத்தல் பற்றிய தகவல்களைப் பகிர்தல் ஆகியவற்றில் உறுப்பினர்களுக்கு உதவுகிறது.


இருப்பினும், கூட்டணி நாடுகளின் உறவுகளை நிர்வகிப்பதில் உள்ள சிரமங்கள் காரணமாக ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் பொருத்தம் கேள்விக்குள்ளாகிறது. இந்தியா தற்போது சீனா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் பதட்டமான உறவைக் கொண்டுள்ளது. கடந்த ஆண்டு, சுழற்சியின் ஒரு பகுதியாக உச்சிமாநாட்டை நடத்த இந்தியாவின் முறை வந்தபோது, ​​அதற்கு பதிலாக ஒரு மெய்நிகர் உச்சிமாநாட்டைத் (virtual summit) தேர்ந்தெடுத்தது.  


 புது தில்லி பிரகடனத்தில் (New Delhi Declaration) பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை (Belt and Road Initiative (BRI)) ஆதரிக்கும் நிபந்தனையில் இந்தியா கையெழுத்திடவில்லை. ஏனென்றால், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் வழியாகச் செல்ல திட்டமிடப்பட்டுள்ள சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (China-Pakistan Economic Corridor (CPEC)) காரணமாக இந்தியா பெல்ட் அண்ட் ரோடு முன்முயற்சியை எதிர்க்கிறது. அத்திட்டமானது, இந்தியாவின்  இறையாண்மையை மீறுவதாகக் கருதப்படுகிறது.  

ORIGINAL LINK:
Share:

எதிர்கால நாடாளுமன்ற நடவடிக்கைகளைக் காலவரிசைப்படுத்துதல் -சந்தீப் புகான்

நாடாளுமன்றத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சில மாற்றங்கள் வெளிப்படையானவை. மற்ற மாற்றங்கள் கண்ணுக்கு தெரியாதவை.

18வது லோக்சபாவின் முதல் கூட்டத்தொடர் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தியது. நாடாளுமன்ற வளாகத்தின் பாதுகாப்பிற்கு மத்திய தொழில் பாதுகாப்புப் படை (Central Industrial Security Force (CISF)) பொறுப்பேற்ற பின்னதான முதல் அமர்வு இதுவாகும். பொதுவாக விமான நிலையங்கள் மற்றும் எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்கள் போன்ற முக்கிய நிறுவல்களுக்குப் பொறுப்பான மத்திய தொழில் பாதுகாப்புப் படை, நாடாளுமன்ற பாதுகாப்புப் பணியாளர்களுக்கு மாற்றாக நியமிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 2023 இல் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பாதுகாப்பு மீறலுக்குப் பிறகு இந்த மாற்றம் ஏற்பட்டது. 


பாதுகாப்பு வளையம் மட்டும் காணக்கூடிய வித்தியாசம் அல்ல. புதிய மக்களவையில் ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி மற்றும் இந்திய கூட்டணி உறுப்பினர்களால் சமமாக உள்ளனர். பாதிக்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் (52%) உறுப்பினர்கள் முதல் முறையாக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். பத்தாண்டுகளுக்குப் பிறகு மக்களவையில் அதிகாரப்பூர்வமாக நியமிக்கப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் இருக்கிறார். அந்த பதவியை வகிக்கும் ராகுல் காந்தி ஆளும் கட்சியுடன் தீவிர விவாதத்தில் ஈடுபட்டு வருகிறார்.  அரசாங்கத்திற்கு எதிரான போராட்டங்களை வழிநடத்த எதிர்க்கட்சி உறுப்பினர்களை அவர் கேட்டு கொண்டுள்ளார். மணிப்பூர் நிலவரங்கள், நீட் தேர்வுத் தாள் கசிவு போன்ற பிரச்னைகளுக்காக இந்தப் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. முந்தைய இரண்டு மக்களவைய விட தற்போது எதிர்கட்சி உறுப்பினர்களின் எண்னிக்கை அதிகமாக உள்ளது.


குடியரசுத் தலைவரின் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி அளித்த பதிலின் போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கோஷமிட்டது முன்னெப்போதும் இல்லாதது என்று பல ஆளும் கூட்டணி உறுப்பினர்கள் தெரிவித்தனர். ஆனால், இதற்கு முன்பும் இதுபோன்ற போராட்டங்கள் நடந்துள்ளன. பாரதிய ஜனதா கட்சியும் எதிர்க்கட்சியாக இருந்தபோது கடும் எதிர்ப்பு தெரிவித்தது. உதாரணமாக, 2004 ஆம் ஆண்டில், பிரதமர் மன்மோகன் சிங் பாஜக தலைமையிலான எதிர்க்கட்சிகளிடமிருந்து "கறைபடிந்த அமைச்சர்கள்" என்று தொடர்ச்சியான எதிர்ப்புகளை எதிர்கொண்டார். குறிப்பாக ராஷ்டிரிய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ் பீகார் மாட்டுத்தீவன ஊழல் ஆகியவற்றில் ஈடுபட்டார் என்று ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டது.


மிகப்பெரிய மாற்றம் புதிய பாராளுமன்ற கட்டிடம் ஆகும். கடந்த செப்டம்பரில் இருந்து பாராளுமன்ற நடவடிக்கைகள் பழைய வட்ட வடிவ கட்டிடத்திலிருந்து புதிய முக்கோண வடிவ கட்டிடத்திற்கு மாற்றப்பட்டுள்ளன. பழைய கட்டிடம் இப்போது சம்விதான் சதன் (Samvidhan Sadan) என்று அழைக்கப்படுகிறது. பாராளுமன்ற நடவடிக்கைகளை செய்தி சேகரிக்கும் பத்திரிகையாளர்கள் புதிய தளவமைப்பை சவாலாகக் காண்கிறார்கள். குறிப்பாக, பத்திரிகையாளர் மாடத்திற்க்கு செல்லும் பாதையைக் கண்டுபிடிப்பது. பழைய நாடாளுமன்ற கட்டிடத்தின் பிரதான நுழைவாயிலுக்கு எதிரே இருந்த மகாத்மா காந்தியின் சிலை, இப்போது புதிதாக வடிவமைக்கப்பட்ட பிரேர்னா தளத்தில் நிறுவப்பட்டுள்ளது பி.ஆர்.அம்பேத்கர் சிலையும் மாற்றப்பட்டுள்ளது. காந்தி சிலை இருந்த இடம் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்புகளுக்கு பொதுவான இடமாக இருந்தது.


மற்றொரு நீண்ட கால பாரம்பரியம் மறைந்து வருகிறது. நாடாளுமன்ற விவகார அமைச்சர்கள் செய்தியாளர்களிடம் முறைசாரா விளக்கங்களை நடத்துவது வழக்கம். இந்த விளக்கங்கள் அரசாங்க நடவடிக்கைகள் மற்றும் பாராளுமன்றத்திற்கு வெளியே எதிர்கட்சியுடனான   பேச்சுவார்த்தைகள் பற்றி விவாதித்தன. இந்த பதிவுக்கு அப்பாற்பட்ட விளக்கங்கள் முட்டுக்கட்டைக்கு வழிவகுக்கும் பிரச்சினைகளில் அரசாங்கத்தின் நிலைப்பாட்டை வெளிப்படுத்தின.  

 

இறுதியாக, கோவிட்-19 லிருந்து பத்திரிக்கையாளர் சந்திப்பு மாறிவிட்டது. பல தொற்றுநோய் கால கட்டுப்பாடுகள் இன்னும் உள்ளன. உதாரணமாக, பாராளுமன்ற அமர்வுகளின் போது ஊடகவியலாளர்களின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது. அங்கீகாரம் பெற்ற ஊடகவியலாளர்கள் பாராளுமன்றத்திற்கு இலவசமாக நுழைவதற்கான வருடாந்திர அனுமதிச்சீட்டுகளை வைத்திருந்தனர். இந்த வருடாந்திர பாஸ்கள் முந்தைய அமர்வுகளின் போது செயலிழந்துவிட்டன. இப்போது, ​​வருடாந்திர பாஸ்களைக் கொண்ட பத்திரிகையாளர்களுக்கு கூட சிறப்பு அமர்வு அனுமதிகள் தேவை. செய்தியாளர்கள் அவசியம் என்பதை ஒவ்வொரு அரசியல் கட்சியும் புரிந்து கொள்ள வேண்டும்.  பத்திரிக்கை நிருபர்கள் நாட்டின் முதல் வரலாற்றாசிரியர்கள் ஆவார்கள். 

OROGINAL LINK:
Share:

இந்தியா கணினி எழுத்தறிவை மேம்படுத்த வேண்டும் - வசஸ்பதி சுக்லா, சந்தோஷ் குமார் தாஷ்

தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி பொதுச் சேவைகளை மேம்படுத்த மற்றும் தொழில் நுட்பம் பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியைக் குறைக்க இந்தியர்கள் அனைவரும் அடிப்படை டிஜிட்டல் திறன்களைக் கற்றுக்கொள்ள வேண்டும். 


வங்கி, சுகாதாரம் மற்றும் அரசு சேவைகள் போன்ற பல அத்தியாவசிய சேவைகள் இப்போது டிஜிட்டல் மயமாகிவிட்டதால் கணினி கல்வியறிவு இன்றய உலகில் முக்கியமானதாக மாறிவிட்டது. கணினி கல்வியறிவு என்பது கணினி மற்றும் தொழில்நுட்பத்தை திறமையாகப் பயன்படுத்தும் அறிவு மற்றும் திறனைக் குறிக்கிறது. இந்த அறிவு, மக்கள் இந்த சேவைகளை நன்கு அணுகி பயன்படுத்துவதை உறுதிசெய்து, அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துகிறது. 


வங்கி மற்றும் சுகாதாரம் போன்ற பணிகளுக்கு கணினி மற்றும் இணைய பயன்பாடு எவ்வளவு முக்கியம் என்பதை கொரோனா-19 தொற்றுநோய் காட்டியது. இதை அங்கீகரித்த இந்திய அரசு 2015-ஆம் ஆண்டு டிஜிட்டல் இந்தியா பிரச்சாரத்தை தொடங்கி நாட்டை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கியது.   


கணினி கல்வி இப்போது முறையான கல்வியின் ஒரு பகுதியாக உள்ளது, ஆரம்ப பள்ளி ஆண்டுகளில் இருந்து கணினி கல்வி முறை தொடங்குகிறது. மேலும், பல திறன் மேம்பாட்டு திட்டங்கள், இளைஞர்கள் மற்றும் வயதானவர்கள், குறிப்பாக பின்தங்கிய சமூகங்களில், டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க கணினி கல்வியறிவை மேம்படுத்துவதில் கவனம்  செலுத்தி வருகின்றன.

 

2020-21-ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட பலதரப்பட்ட குறியீடு (Multiple Indicator Survey) கணக்கெடுப்பின் தேசிய மாதிரி கணக்கெடுப்பு 78-வது சுற்று  மக்கள் கணினிகளை எவ்வளவு நன்றாகப் பயன்படுத்தலாம் என்பது பற்றிய விவரங்களைத் தரும் குடும்பங்களின் கணக்கெடுப்பாகும். 15-வயது மற்றும் அதற்கு மேற்பட்டவர்களில் 24.7% பேர் கணினி கல்வியறிவு பெற்றவர்கள் என்பதைக் காட்டுகிறது.


ஒட்டுமொத்த கணினி கல்வியறிவு விகிதம் 2017-18-ல் 18.4%-ஆக இருந்து 2020-21-ல் 24.7% ஆக உயர்ந்துள்ளது. கிராமப்புறங்களில் இது 11.1%லிருந்து 18.1% ஆகவும், நகர்ப்புறங்களில் 34.7%லிருந்து 39.6% ஆகவும் அதிகரித்துள்ளது. இந்த அதிகரிப்பு நாட்டின் டிஜிட்டல் சேவைகளைப் பற்றி சந்தேகங்களை எழுப்புகின்றன. அனைவருக்கும் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதற்கான தீவிர முயற்சிகள் இல்லாமல், கிராமப்புற இந்தியாவின் கிட்டத்தட்ட 70% மக்கள் குறிப்பிடத்தக்க குறைபாடுகளை சந்திக்க நேரிடும். கூடுதலாக, டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் மூலம் பொது சேவைகளை வழங்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதால், டிஜிட்டல் பயன்பாட்டை பற்றி தெரியாத மக்கள் சேவைகளை பெறுவதில்  சிரமங்களை சந்திக்கலாம்.  


20-39 வயதுடைய தனிநபர்களுக்கு, பொதுவாக தங்கள் தொழில் அல்லது வேலை தேடலில், கணினி கல்வியறிவு விகிதம் 34.8% ஆகும். இந்த விகிதம் மாநிலங்களில் கணிசமாக வேறுபடுகிறது. உதாரணமாக, கேரளாவில், இந்த வயதுக்குட்பட்டவர்களில் 72.7% பேர் கணினி கல்வியறிவு பெற்றவர்கள், அசாமில் இது 17.6% மட்டுமே. அசாம், பீகார், மத்தியப் பிரதேசம், ஜார்க்கண்ட், உத்தரப் பிரதேசம், ஒடிசா, சத்தீஸ்கர் மற்றும் ராஜஸ்தான் போன்ற பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாநிலங்கள் கணினி செயல்பாட்டில் 30% க்கும் குறைவான தேர்ச்சியைப் பெற்றுள்ளன. இந்த ஏற்றத்தாழ்வு அவர்களின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சியைத் தடுக்கிறது.


வயதினரிடையே சமமற்ற கல்வியறிவு


இந்தியாவில் கணினி கல்வியறிவு வயதுக்கு ஏற்ப மாறுபடும். இளைஞர்கள் அதிக கணினி கல்வியறிவு விகிதங்களை பெற்றுள்ளனர். அதே சமயம் வயதானவர்கள் குறைந்த கணினி கல்வியறிவு விகிதங்களைக் பெற்றுள்ளனர். சமூகச் சூழல்களில் பொதுவான இந்தப் போக்கு, சமூக அறிவியல் "கூட்டு விளைவு" (“cohort effect”) அல்லது  "தலைமுறை விளைவு" (“generation effect”) இளைய மற்றும் பழைய தலைமுறையினரிடையே உள்ள கணினிக் கல்வி ஏற்றத்தாழ்வுகளை  சுட்டிக்காட்டுகிறது. ஒட்டுமொத்த கணினி கல்வியறிவு விகிதம் 24.7% ஆகும். வெவ்வேறு வயதினரிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் இருப்பதை இந்த தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.


20-24 வயதுடைய இளைய பருவத்தினரிடையே கணினி கல்வியறிவு அதிகமாக உள்ளது. இது 45.9 சதவீதத்தை எட்டுகிறது. ஆனால், 65-69 வயதுடையோர் குறைந்த அளவான 4.4% கணினி கல்வியறிவு பெற்றுள்ளனர்.  இளைய பருவத்தினரிடையே கூட, 50%-க்கும் குறைவானவர்களே கணினி அறிவு பெற்றவர்கள். வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் கணினிகள் முக்கியமான அங்கமாக மாறி வருவதால், மக்கள்தொகையில் கணிசமான பகுதியினர் நவீன வளர்ச்சியில் இருந்து வெளியேறும் அபாயம் உள்ளது. 


20-39 வயதுடைய தனிநபர்கள், பெரும்பாலும் தங்கள் தொழில் அல்லது வேலை தேடி கொண்டிருப்பவர்கள். அவர்களின் கணினி கல்வியறிவு விகிதம் 34.8% ஆக உள்ளது. இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், இந்த வயதினருக்கு கணினி கல்வியறிவில் குறிப்பிடத்தக்க ஏற்றத்தாழ்வு உள்ளது. கேரளா 72.7% உடன் முன்னிலை வகிக்கிறது. அதே சமயம் அஸ்ஸாம் 17.6%-ல் பின்தங்கியுள்ளது, இது 55.1 சதவீத புள்ளி வித்தியாசத்தை எடுத்துக்காட்டுகிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய மாநிலங்களான பீகார் (20.4%), மத்தியப் பிரதேசம் (21%), ஜார்கண்ட் (21.2%), உத்தரப் பிரதேசம் (22.9%), ஒடிசா (25.1%), சத்தீஸ்கர் (26%), மற்றும் ராஜஸ்தான் (27.6%) 30%-க்கும் குறைவான கணினி கல்வியறிவு விகிதங்களைக் கொண்டுள்ளன.  இந்த ஏற்றத்தாழ்வு இந்த மாநிலங்களின் நவீன வளர்ச்சியிலிருந்து பயனடையும் திறனை குறைக்கிறது. இந்த இடைவெளியை குறைப்பது அனைவருக்குமான வளர்ச்சியை பெறுவது முக்கியமானது. இது போன்ற சூழலை தடுப்பதற்கு அரசு, தனியார் துறை மற்றும் குடிமை  சமூக அலுவலர்களின் தொடர்ச்சியான முயற்சிகள் தேவைப்படுகிறது.


இன்றைய டிஜிட்டல் உலகில் கணினி கல்வி வேலை வாய்ப்புகள், சமூக இணைப்புகள் மற்றும் நிதி தேவைகளைக் கட்டுப்படுத்துகிறது.  சிக்கலான பணிகளை கையாளக்கூடிய மற்றும் தொழில்நுட்பத்தை திறம்பட பயன்படுத்தக்கூடிய தொழிலாளர்களை முதலாளிகள் அதிகளவில் நாடுகின்றனர். கணினிகள் மற்றும் இணையத்தைப் பயன்படுத்தக் கற்றுக்கொள்வது திறன்களை வளர்த்து, தனிநபர்களை முதலாளிகளாக மாற்றும். பொருளியல் கூட்டுறவு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பின் (Organisation for Economic Co-operation and Development (OECD)) வயது வந்தோர் திறன்களின் சர்வதேச மதிப்பீட்டிற்கான திட்டம் (Program for the International Assessment of Adult Competencies (PIAAC)) 2014-15 கணக்கெடுப்பின்  படி, கணினித் திறன் கொண்ட பெரியவர்கள் வேலை செய்ய வாய்ப்பு அதிகம் (72.7%) இல்லாதவர்களுக்கு வாய்ப்பு குறைவாக (52.5%) உள்ளது. பொருளாதார நிபுணர் கேங் பெங்கின்  (Gang Peng) 2017 ஆய்வின் படி, கணினி திறன்கள் வேலைவாய்ப்பையும் உற்பத்தித்திறனையும் அதிகரிக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. தென்னாப்பிரிக்காவில், ப்ரெஸ்டன்-லீ கோவிந்தசாமி (Preston-Lee Govindasamy), கணினியை திறமையாக பயன்படுத்துவது, வேலை தேடுவதற்கும், அதிக பணம் சம்பாதிப்பதற்கும் அதிக வாய்ப்புகளுடன் தொடர்புடையதாக இருப்பதைக் கண்டறிந்தார்.  


மேலும், கணினி கல்வியறிவு டிஜிட்டல் பிரிவை உருவாக்குவதன் மூலம் சமூக-பொருளாதார இடைவெளியை அதிகரிக்கிறது. சிறந்த கணினி திறன் கொண்டவர்கள் தங்கள் வாழ்க்கையை மேம்படுத்த தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தலாம். அதே நேரத்தில் இந்தத் திறன்கள் இல்லாதவர்கள் அத்தியாவசிய சேவைகளை பெறுவதில் பல்வேறு தடைகளை எதிர்கொள்கிறார்கள். இந்த நிலைமை தொடர்ந்து பொருளாதார இடைவெளிகளை அதிகரிக்கச் செய்கிறது. 


பள்ளிகள், வயதான மக்கள் கவனம் செலுத்தும் பகுதிகள் 


கணினி கல்வியறிவில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. ஆனால், அதன் தாக்கம் குறைவாகவே உள்ளது. மாநிலங்களுக்கு இடையே கணினி திறன்களின் நிலை மற்றும் விநியோகம் ஆகிய இரண்டிலும் குறிப்பிடத்தக்க இடைவெளி உள்ளது. பணக்கார மற்றும் ஏழ்மையான மாநிலங்களுக்கு இடையிலான இந்த இடைவெளி, பலரின் வளர்ச்சியைத் தடுக்கிறது.

 

இதை நிவர்த்தி செய்ய, பள்ளிகள், இன்றைய பொருளாதாரத்திற்கு அவர்களை தயார்படுத்த கணினி திறன்களை கற்பிக்க வேண்டும். டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க அனைத்து பட்டதாரிகளுக்கும் இந்தத் திறன்கள் இருப்பது முக்கியம். கணினி வல்லுனர்களுக்கு பயிற்சி அளிக்கவும், போதுமான ஆசிரியர்களை உறுதி செய்யவும் அரசு முதலீடு செய்ய வேண்டும். கணினித் திறன்களைக் கற்றுக்கொள்வதற்காக உள்ளூர் அமைப்புகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களை உள்ளடக்கிய, பள்ளியில் படிக்காத முதியவர்களையும் நிகழ்ச்சிகள் குறிவைக்க வேண்டும். அரசாங்கம் தற்போதைய கணினி கல்வியறிவு முயற்சிகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் கணினி எழுத்தறிவில் உள்ள ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பதற்கு திட்டமிட வேண்டும்.


இன்றைய மாணவர்கள் பொருளாதாரத்தில் வெற்றிபெற பள்ளிகள் மாணவர்களுக்கு கணினித் திறனைக் கற்பிக்க வேண்டும். டிஜிட்டல் இடைவெளியைக் குறைக்க அனைத்து பட்டதாரி மாணவர்களுக்கும் இந்தத் திறன்கள் இருப்பது முக்கியம். கணினி வல்லுனர்களுக்கு பயிற்சி அளிப்பதற்கும், போதுமான ஆசிரியர்கள் இருப்பதை உறுதி செய்வதற்கும் அரசு முதலீடு செய்ய வேண்டும். பள்ளியில் படிக்காத முதியோர்களுக்கு கணினித் திறன்களைக் கற்பிக்க  உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களை உள்ளடக்கிய திட்டங்கள் தேவை. கடைசியாக, அரசாங்கம் கணினி கல்வியறிவை மேம்படுத்துவதற்கு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் மற்றும் எதிர்காலத்தில் கல்வியறிவை மேம்படுத்தவும் ஏற்றத்தாழ்வுகளைக் குறைக்கவும் திட்டங்களை உருவாக்க வேண்டும்.     


வசஸ்பதி சுக்லா, சர்தார் படேல் பொருளாதாரம் மற்றும் சமூக ஆராய்ச்சி நிறுவனத்தில் (Sardar Patel Institute of Economic and Social Research (SPEISR)) உதவி பேராசிரியராக உள்ளார். சந்தோஷ் குமார் தாஷ், ஆனந்த் கிராமப்புற மேலாண்மை நிறுவனத்தில் (Institute of Rural Management Anand (IRMA)) உதவி பேராசிரியராக உள்ளார். 

OROGINAL LINK:
Share:

இந்தியாவுக்கான ஓர் ஐந்தாண்டு காலநிலை செயல்திட்டத்தின் வடிவம் -வைபவ் சதுர்வேதி

 புதிய அரசாங்கம் இந்தியாவின் உலகளாவிய காலநிலை தலைமையை மேம்படுத்துவதில் கவனம் செலுத்த வேண்டும், இது 'உயரமான, பரந்த மற்றும் ஆழமான' இலட்சியத்தை நோக்கமாகக் கொண்ட ஒரு செயல் திட்டத்துடன் இருக்க வேண்டும்.  

புதிய அரசாங்கம் ஆட்சியமைக்கும் போது, ​​காலநிலை நடவடிக்கையை அளவிடுவதற்கான அதன் நடவடிக்கைகள் ஒவ்வொரு அமைச்சகத்தையும் பாதிக்கும். இது பெரிய மற்றும் சிறிய அனைத்து துறைகளையும் பாதிக்கும். அரசாங்கம் எடுக்கும் சில முடிவுகள் முக்கியமானதாக இருக்கும். இந்தத் முடிவுகள், இந்தியா தனது பொருளாதாரப் பாதையை எவ்வாறு நிலையான முறையில் கட்டமைக்கிறது என்பதைத் தீர்மானிக்கும். முக்கியமான விவாதங்களில் உலகளாவிய தெற்கின் குரலாக இந்தியாவின் நிலைப்பாட்டை தெரிவிக்கும். கூடுதலாக, இந்தத் முடிவுகள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் காலநிலை நிதி மற்றும் நீதிக்கான இந்தியாவின் போராட்டத்தை வடிவமைக்கும். அரசாங்கம் மாறுதல் இலக்குகளையும் நிர்ணயிக்க வேண்டும்.


இந்தியாவின் மாற்றம் 

    கடந்த பத்து ஆண்டுகளில், காலநிலை மாற்றத்தை எதிர்கொள்வதில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. ஆரம்பத்தில் தயக்கத்துடன் பங்கேற்ற இந்தியா, இப்போது உலகளாவிய காலநிலை விவாதங்களில் தைரியமாக வழிநடத்துகிறது. சர்வதேச சூரிய கூட்டணி (International Solar Alliance), பேரழிவு நெகிழ்திறன் உள்கட்டமைப்புக்கான கூட்டணி (Coalition for Disaster Resilient Infrastructure) மற்றும் உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி போன்ற முக்கிய உலகளாவிய நிறுவனங்களை இந்தியா நிறுவியுள்ளது. கடந்த ஆண்டு ஜி -20 தலைமையின் போது பசுமை மேம்பாட்டு ஒப்பந்தத்தை வடிவமைப்பதில் இந்தியா முக்கிய பங்கு வகித்தது.

    முதன்முறையாக, 2070 நிகர பூஜ்ஜிய இலக்கு (net-zero target) மற்றும் வலுவான தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்புகள் (Nationally Determined Contributions (NDC)) உள்ளிட்ட இலட்சிய உமிழ்வு குறைப்பு இலக்குகளை இந்தியா நிர்ணயித்துள்ளது. இந்த மாற்றம் உமிழ்வு-தீவிரம் அடிப்படையிலான இலக்குகளை (emissions-intensity-based targets) விட முழுமையான உமிழ்வு குறைப்புகளை (net-zero goal) வலியுறுத்துகிறது, இது கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் தனியார் துறை சம்பந்தப்பட்ட உள்நாட்டு காலநிலை விவாதங்களில் குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. 

    மேலும், நிலைத்தன்மையை மையமாகக் கொண்ட பொருளாதாரக் கொள்கைகள் முக்கியத்துவம் பெறுகின்றன. உதாரணமாக, இந்தியா பல ஆண்டுகளாக  செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட கார்பன் வர்த்தக திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

முன்னோக்கிப் பார்க்கும்போது, அடுத்த ஐந்து ஆண்டுகளில், இந்தியா தனது முயற்சிகளை விரைவுபடுத்துவதையும், பொருளாதார வளர்ச்சி நிலைத்தன்மையுடன் இணைந்து இருக்க முடியும் என்பதை நிரூபிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. பொருளாதார வளர்ச்சியுடன் அதன் காலநிலை தலைமையை விரிவுபடுத்துவதும் ஆழப்படுத்துவதும் இந்த இராஜதந்திரத்தில் அடங்கும். 

இந்தியாவுக்கான திட்டம்

    

    இந்தியா உலகளாவிய தலைமைத்துவத்தை நோக்கமாகக் கொண்டுள்ளது. விரைவில் முக்கிய காலநிலை உச்சிமாநாடுகளை இந்தியா நடத்தக்கூடும். 2028 ஆம் ஆண்டில் ஐ.நா கட்சிகளின் மாநாட்டை (United Nations Conference of Parties) நடத்துவது அதன் ஜி -20 தலைமையைப் போலவே தாக்கத்தை ஏற்படுத்தும். நான்கு ஆண்டுகளுக்குள் உலகளாவிய பேச்சுவார்த்தைகளுடன், 2030க்குள் புதிய எண்ணெய் மற்றும் எரிவாயு முதலீடுகளை முடிவுக்குக் கொண்டு வருவது மற்றும் வளரும் நாடுகளுக்கான தழுவல் நிதியை (adaptation finance) அதிகரிப்பது போன்ற முக்கிய பிரச்சினைகளில் இந்தியா முடிவு செய்ய வேண்டும். ஒருமித்த கருத்தை உருவாக்க நேரம் எடுக்கும்,. எனவே, இந்தியா தனது முன்னுரிமைகளை மேம்படுத்துவதற்கும், கூட்டணிகளை உருவாக்குவதற்கும், உலகளாவிய காலநிலை நிதியில் சமத்துவத்தை வழிநடத்துவதற்கும் இப்போதே  முயற்சிகளை தொடங்க வேண்டும். 


 பல துறைகளுக்கான உமிழ்வு குறைப்பு இலக்குகளை இந்தியா ஏற்றுக்கொண்டு வலுவாக செயல்படுத்த வேண்டும். இந்த இலக்குகள் மின் துறைக்கு அப்பால் செல்ல வேண்டும். மின்சாரத் துறையில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை அடைந்துள்ளது. சர்வதேச புதைபடிவமற்ற பங்கு தொடர்பான இலக்குகளை அடைய இது தொடர்ந்து முன்னேறும். உள்நாட்டு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் இலக்குகளை இந்தியா தொடர்ந்து சந்திக்கும். 

 

அடுத்த கட்டமாக மற்ற பகுதிகளுக்கும் விரிவுபடுத்த வேண்டும். எடுத்துக்காட்டாக, நாம் தனியார் போக்குவரத்தில் கவனம் செலுத்தலாம் மற்றும் பூஜ்ஜிய கார்பன் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை இலக்காகக் கொள்ளலாம்.  இது தூய்மையான ஆற்றல் மற்றும் நிலைத்தன்மையில் வேலைகளை துரிதப்படுத்தும் மற்றும் பொருளாதார வளர்ச்சியையும் ஊக்குவிக்கும். கடந்த ஆண்டுகளின் நம்பகமான கொள்கை இலக்குகளை சக்திவாய்ந்த குறியீடுகள் காட்டுகின்றன.  இந்த குறியீடுகள் சம்பந்தப்பட்ட தொழில்கள் மற்றும் பங்குதாரர்களை செயல்பட கட்டாயப்படுத்தியுள்ளன. 2035க்கான தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள் அடுத்த ஆண்டு சமர்ப்பிக்கப்பட உள்ளது. இந்தியாவின் ஆற்றல் மாற்ற இலக்குகளை விரிவுபடுத்த இது ஒரு வாய்ப்பாக அமையும்.   


மாநில அளவிலான திட்டங்கள் முக்கியம்


அரசாங்கத்தின் இந்த பதவிக்காலத்தில் மாநில அளவிலான காலநிலை நடவடிக்கை மற்றும் பின்னடைவு ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.  எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (Council on Energy, Environment and Water (CEEW)) அனைத்து மாநிலங்களுடன் இணைந்து நீண்ட கால காலநிலை மற்றும் எரிசக்தி மேம்பாடு மூலம் நிகர பூஜ்ஜிய திட்டங்களை ஆதரிக்கிறது. எடுத்துக்காட்டாக, நிகர பூஜ்ஜிய எதிர்காலத்திற்கான திட்டங்களில் எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சில் (Council on Energy, Environment and Water (CEEW)) தமிழ்நாடு மற்றும் பீகாருடன் இணைந்து செயல்பட்டது. மத்திய-மாநில ஒருங்கிணைப்புக் குழுவை உருவாக்குவது குறித்து அரசு பரிசீலிக்க வேண்டும். இந்தக் குழு பதினாறாவது நிதிக்குழுவின் மூலம் மாநில அளவிலான பருவநிலை நடவடிக்கைகளை ஊக்குவிக்கும். கொள்கை வகுப்பதில் அறிவியல் மேம்பாட்டு திறன்களின் ஒருங்கிணைப்பையும் இது ஊக்குவிக்க வேண்டும். கூடுதலாக, மாநில அளவில் ஒருங்கிணைந்த தரவு அளவீடு, அறிக்கை மற்றும் சரிபார்ப்பு (measurement, reporting and verification (MRV)) முறையை அரசாங்கம் எளிதாக்க வேண்டும்.


புதிய அரசாங்கம் அதன் ஆட்சி காலத்தில் இந்தியாவின் உலகளாவிய காலநிலை தலைமைத்துவத்தை உயர்த்துவதை நோக்கமாகக் கொண்டிருக்க வேண்டும். இந்த இலக்கு  இந்த ஆண்டுக்கு மட்டும் அல்ல, அடுத்த நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட வேண்டும். தற்போது, ​​பெரும்பாலான சர்வதேச கூட்டமைப்புகளில் இந்தியா இடம் பிடித்துள்ளது. இப்போது அது தனது திறமையை வெளிப்படுத்த வேண்டும்.  


வைபவ் சதுர்வேதி எரிசக்தி, சுற்றுச்சூழல் மற்றும் நீர் கவுன்சிலில் மூத்த உறுப்பினர் ஆவார். 


Share:

நீதிமன்றம் வளைவதில்லை

இந்துப் பெரும்பான்மையினருக்கு மதமாற்றத்தால் எந்த அச்சுறுத்தலும் ஏற்பட வில்லை. இந்த அடிப்படை தரவை உயர்நிதிமன்றங்கள் தெரிந்து கொள்ள வேண்டும். 

இன்றைய உலகில், மீண்டும் மீண்டும் சத்தமாகசொல்லப்படும் பொய்கள் உண்மையை விட அதிகமாக இருக்க முடியுமா? இதுதான் 'உண்மைக்குப் பிந்தைய' காலத்தின் சாராம்சம். இருப்பினும், பல நிறுவனங்கள் உண்மைத் துல்லியத்தை நிலைநிறுத்துவதற்குப் பணிபுரிகின்றன. இந்தியாவில், அரசியலமைப்பு நீதிமன்றங்கள் இந்த விஷயத்தில் முக்கியமானவை. 

இருப்பினும், அவர்களின் தீர்ப்புகள் தெளிவான தரவுகளுடன் முரண்படும் போது அல்லது நிறுவப்பட்ட சட்ட முன்மாதிரிகளை விட அகநிலை ஒழுக்கத்திற்கு முன்னுரிமை அளிக்கும்போது, ​​அது கவலைக்குரியது மற்றும் ஆபத்தானது. உதாரணமாக, இந்துக்கள் சிறுபான்மையினராக மாறலாம் என்ற அலகாபாத் உயர் நீதிமன்றத்தின் கருத்து இதற்கு ஒரு கவலைக்குரிய உதாரணம். 

 மொத்த கருவுறுதல்  விகிதத்தின் (Total fertility rate)  உண்மைத்தன்மை 

இந்தியாவின் கருவுறுதல் போக்குகள் ஒட்டுமொத்த மொத்த கருவுறுதல் விகிதம் மாற்று நிலைக்குக் கீழே குறைந்துள்ளது என்பதைக் காட்டுகிறது. இந்துக்களுடன் ஒப்பிடும்போது முஸ்லிம்கள் கருவுறுதலில் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றனர். இந்த விகிதங்கள் இந்துக்களின் பெரும்பான்மை நிலை பாதுகாப்பாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.  

 1992-93 மற்றும் 2019-21 க்கு இடையில், முஸ்லீம் மொத்த கருவுறுதல் விகிதம் 2 புள்ளிகள் குறைந்து 2.4 ஆகவும், இந்துக்களின் கருவுறுதல் விகிதம் 1.3 புள்ளிகள் குறைந்து 2 புள்ளிகள் ஆகவும் உள்ளது. ஆழமாக பார்த்தால், கருவுறுதல் வேறுபாடுகளுக்கு முக்கிய காரணம் மதம் அல்ல என்பது தெளிவாக தெரிகிறது. மாநிலத்திற்கு மாநிலம் இடையே உள்ள வேறுபாடு இதற்கு முக்கிய காரணமாகும். 

உதாரணமாக, பீகாரில், இந்துக்களின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.88 ஆகும். கர்நாடகாவில் இந்துக்களின் மொத்த கருவுறுதல் விகிதம் 2.05 இல் உள்ள முஸ்லிம்களின் ஒட்டுமொத்த மொத்த கருவுறுதல் விகிதம் விட அதிகமாக உள்ளது. இந்த வேறுபாடு பெரும்பாலும் கல்வி, சமூக மற்றும் பொருளாதார குறைபாடுகள் காரணமாக அதிக கருவுறுதல் விகிதங்களுக்கு வழிவகுக்கிறது.

 யதார்த்தமற்ற நீதி

நீதிபதிகள் சில நேரங்களில் முறையான நீதிமன்ற நடவடிக்கைகளை விட தனிப்பட்ட பேச்சுகளின் மூலம்  தலைப்புச் செய்திகளை உருவாக்குகிறார்கள், அவை அரசியல் அமைப்பில் கூறப்பட்ட கருத்தை தனிப்பட்ட வாழ்க்கைக்கு முக்கியத்துவம் அளிக்கிறது. உதாரணமாக, ’தேர்தல் ஆணையத்தின் மீது கொலை வழக்குப் பதியப்பட வேண்டும்’  அல்லது ’மனைவி என்பவள் சீதை தெய்வத்தைப் போல இருக்க வேண்டும்’ என்று உயர் நீதிமன்றங்கள் பரிந்துரைப்பது கீழ் நீதிமன்றங்களை எதிர்மறையாக பாதிக்கும். மோதலை ஊக்குவிக்கும் நபர்கள் ஏற்கனவே உள்ளனர்.எனவே, நமது நீதிமன்றங்கள் நடுநிலையையும் பகுத்தறிவு கொள்கைகளையயும் முன்னெடுக்க வேண்டும்.

original link:

https://timesofindia.indiatimes.com/blogs/toi-editorials/court-dont-contort/


Share:

பொது நிதித்துறையில் பெண் தலைவர்கள் : பாலின- பொறுப்புணர்வு பட்ஜெட் (gender-responsive budgeting) மூலம் பாலின விளைவுகளை மேம்படுத்துதல் -அபுலா சிங்

சமமான பிரதிநிதித்துவம் நிலையானதாக இருக்க வேண்டும் என்றாலும், நாம் நியாயமான பிரதிநிதித்துவத்திலிருந்து தலைமைக்கு மாற வேண்டும். 
மனித வளர்ச்சி மற்றும் பொருளாதார வாய்ப்புகளில் உலகளவில் பல்வேறு முன்னேற்றங்கள் ஏற்பட்ட போதும் பாலின ஏற்றத்தாழ்வுகள் தொடர்கின்றன. பெண்கள் இன்னும் கல்வி, சுகாதார சேவைகள் மற்றும் சட்ட உரிமைகள் ஆகியவற்றை பெறுவதில் பல்வேறு சிக்கல்களை எதிர்கொள்கின்றனர். இது போன்ற நிகழ்வுகள் பெண்களுக்கு எதிரான வன்முறை மற்றும் கலாச்சார தடைகளுடன், சமமற்ற வாய்ப்புகளுக்கும்  வழிவகுக்கிறது. 

பெண்களின் தொழிலாளர் பங்கேற்பு விகிதம் (women’s labour force participation rate) ஆண்களின் 58% உடன் ஒப்பிடுகையில் 25% குறைவாக உள்ளது. சராசரியாக, ஆண்களை விட பெண்களுக்கு ஊதியம் 34% குறைவாக வழங்கப்படுகிறது. டிஜிட்டல் மற்றும் நிதி உள்ளடக்கம், சமூகப் பாதுகாப்பிற்கான அணுகல், நிலம் மற்றும் வீட்டுவசதி ஆகியவற்றை பெறுவதில் பல்வேறு நடைமுறை சிக்கல்களை எதிர்க்கொள்கின்றனர். கோவிட்-19க்குப் பிறகு பாலின இடைவெளி அதிகரித்துவிட்டது. உலகப் பொருளாதார மன்றத்தின் உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கை (World Economic Forum’s) 2023-ன் படி, தற்போதைய பாலின இடைவெளியை குறைப்பதற்கு இன்னும் 131 ஆண்டுகள் ஆகும். 

வரலாற்று ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய வள ஒதுக்கீட்டில் உறுதியான நடவடிக்கை அவசியம். வள விநியோகத்தில் பாலின சமத்துவம் ஒரு நாட்டின் சமூக-பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்கிறது. அரசாங்கங்கள் தங்கள் திட்டமிடல் மற்றும் பட்ஜெட் முடிவுகள் மூலம் முக்கிய பங்கு வகிக்க முடியும். வலுவான பொது நிதி மேலாண்மை (Public Finance Management (PFM)) அமைப்புகள் அரசாங்க செலவினங்கள் பொது சேவைகளை மேம்படுத்துகிறது, வறுமையை குறைக்கிறது, சம வாய்ப்புகளை வழங்குகிறது மற்றும் நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதை உறுதிப்படுத்துகிறது.
அரசாங்கங்கள் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் மூன்றில் ஒரு பங்கை பொது சேவைகளுக்காக செலவிடுகிறது. இந்த செலவின முடிவுகளுக்கு பாலினக் கண்ணோட்டத்தைப் பயன்படுத்துவது பாலின விளைவுகளை பெரிதும் மேம்படுத்தும். 
தலைமைப் பதவிகளில் உள்ள பெண்கள் செயல்திட்டத்தை மேலும் தொடரலாம்    

நிதி நிறுவன வாரியங்களில் பெண் தலைமை மற்றும் பன்முகத்தன்மை அதிக நிதி நிலைத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று சர்வதேச நாணய நிதியம், பாலின வியூகம் 2022 -ஆம் ஆண்டு அறிக்கை (IMF’s Gender Strategy 2022) கூறுகிறது. பெண் அரசியல் தலைவர்கள் உள்கட்டமைப்பு செலவினங்களை அதிகரித்து பெண்களின் கல்வியை மேம்படுத்துகின்றனர். இந்திய பஞ்சாயத்து ராஜ் நிறுவனங்களின் மீதான ஆராய்ச்சி, பெண் தலைவர்கள் பெண் வாக்காளர்களின் எண்ணிக்கை, சுகாதாரம், கல்வி மற்றும் இளம் பெண்களின் தலைமைத்துவ தேவை அதிகரித்திருப்பதை இது காட்டுகிறது.  
பொது நிர்வாகத்தில் அதிகமான பெண்கள் அரசாங்கத்திற்கு அதிக பொறுப்புணர்வை உருவாக்குகிறார்கள், சேவை தரத்தை மேம்படுத்துகிறார்கள் மற்றும் குடிமக்களின் நம்பிக்கையை வளர்க்கிறார்கள். தனியார் துறையில், நிர்வாகத்தில் உள்ள பெண்கள் சிறந்த தலைவர்களாகவும், ஊழியர்களுக்கு ஆதரவாகவும், பன்முகத்தன்மை மற்றும் சமத்துவத்தை மேம்படுத்துகின்றனர். பெண் தலைவர்கள் பெண்களின் தேவைகளை அறிந்து நியாயமான முடிவுகளை எடுக்கிறார்கள். 

குறிப்பாக, பொது நிதித்துறையில் பெண்கள் குறைவாகவே பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறார்கள். 11% நாடுகளில் மட்டுமே நிதியமைச்சகங்களில் பெண்கள் பணியாற்றி வருகின்றனர். பெண் நிதி அமைச்சரைக் கொண்ட சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று. இருப்பினும், அரசாங்கத்தின் அடுத்த அடுக்கில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது.  

மாநிலங்களில், டெல்லியில் மட்டுமே ஒரு பெண் நிதி அமைச்சர் உள்ளார். ஒன்றிய  நிதி ஆணையம் (Central Finance Commissions (CFC)), வள ஒதுக்கீட்டில் முக்கிய பங்காற்றி வருகிறது.  ஆணையத்தில்  பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாக உள்ளது.  16-வது ஒன்றிய  நிதி ஆணையத்தில்  ஐந்து உறுப்பினர்களில் ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். கடைசி ஆறு ஒன்றிய  நிதி ஆணையங்களில்   இரண்டில் மட்டுமே பெண்கள் உறுப்பினர்களாக இருந்தனர். பெண்களின் பிரதிநித்துவம் மொத்தத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே இருந்து வருகிறது.
 
இந்திய அரசின் நிதித் துறைகளில் பணிபுரியும் பெண்களில் 22% மட்டுமே பெண்கள் என்று புள்ளிவிவர அமைச்சக அறிக்கை (statistics ministry report) காட்டுகிறது. மாநில நிதித் துறைகளில், பெண்கள் 27% மட்டுமே உயர் பதவிகளை வகிக்கின்றனர். மேலும் ஒரு மாநிலத்தில் மட்டுமே பெண் நிதித் துறைத் தலைவர் உள்ளனர். 

திறமைக் குழுவில் கணிசமான பகுதியைக் கொண்டிருந்தாலும், நிதி மற்றும் பொது நிதி ஆகியவற்றில் பெண்களின் பிரதிநிதித்துவம் குறைவாகவே உள்ளது. உலகளவில், அவர்கள் பொருளாதார பட்டதாரிகளில் சுமார் 30% மற்றும் வணிக பட்டதாரிகளில் 50% உள்ளனர் என்று 2018-ஆம் ஆண்டு  சர்வதேச நிதி நாணயத்தின் (International Monetary Fund (IMF)) அறிக்கை  கூறியது. 
 
அரசியலில் பெண்களின் பிரதிநிதித்துவம் முக்கியமானது. ஏனெனில் தேர்ந்தெடுக்கப்பட்ட அதிகாரிகள் பட்ஜெட் உருவாக்கம், ஒப்புதல் மற்றும் மேற்பார்வை ஆகியவற்றில் முக்கிய பங்கு வகிக்கின்றனர். பெண் அரசியல்வாதிகள் பெரும்பாலும் பாலின-பொறுப்புணர்வு கொள்கைகள் மற்றும் வள ஒதுக்கீட்டிற்காக வாதிடுகின்றனர். 

பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம், 2023 (Women Reservation Act, 2023) மக்களவை மற்றும் மாநில சட்டப் பேரவைகளில் மூன்றில் ஒரு பங்கு இடங்களைக் பெண்களுக்கு வழங்குவதை கட்டாயமாக்குகிறது. கிராமப்புற மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்களில் இந்த இட ஒதுக்கீடு  கட்டாயமாக பின்பற்றப்படவேண்டும் என்று பெண்களுக்கான இடஒதுக்கீடு சட்டம் கூறுகிறது. சில மாநிலங்கள் பஞ்சாயத்து தேர்தல்களில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு வழங்குகின்றன. 

சமமான பிரதிநிதித்துவத்தை அடைவது முக்கியம். ஆனால், அரசியல் மற்றும் நிதியில் தலைமைப் பாத்திரங்களை ஏற்க பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் நாம் கவனம் செலுத்த வேண்டும். இந்தியாவின் பெண் நிதியமைச்சர் நியமனம் பொது நிதி நிர்வாகத்தில் (Public Financial Management (PFM)) பாலின சமத்துவத்தை மேம்படுத்துவதில் முன்னேற்றத்தைக் குறிக்கிறது. அதிக தகுதி வாய்ந்த பெண்களை பொது நிதி நிர்வாகத்தில் சேர்ப்பது  மற்றும் தலைமைப் பயிற்சி வழங்குவது, சமூக மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். 

பாலின ஏற்றத்தாழ்வுகளை விரைவாக குறைக்க முடியாது என்றாலும், பாலினப் பொறுப்பு பட்ஜெட் (Gender Responsive Budgeting (GRB)) வேலைகள், கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவற்றில் பாலின இடைவெளிகளைக் குறைக்க உதவும். பாலின சமத்துவத்தை மேம்படுத்த பாலினப் பொறுப்பு பட்ஜெட்டை பயன்படுத்தும் 100 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும். ஆனால், அதன் பயன்பாடு குறைவாக உள்ளது. 

அரசாங்க திட்டமிடல் செயல்முறைகளின் வடிவமைப்பு, செயல்படுத்தல் மற்றும் நிதியுதவி ஆகியவற்றின் போது பாலின சமத்துவம் முழுமையாகக் கருதப்படுவதில்லை. அனைத்து அரசாங்க திட்டங்கள் மற்றும் நிர்வாகத்தின் பல்வேறு நிலைகளில் உள்ள துறைசார் வரவு செலவுத் திட்டங்களில் பாலினப் பொறுப்பு பட்ஜெட்டை  சேர்ப்பதன் மூலம் பாலின இடை வெளியை குறைத்து, முக்கிய தேசிய வளர்ச்சி இலக்குகள் மற்றும் உத்திகளில் ஒருங்கிணைக்கப்பட வேண்டும். இந்த முயற்சிகளை செய்ய பெண்களை விட சிறந்தவர் யார்?  
அபுலா சிங், குடியுரிமை மற்றும் ஜனநாயகத்திற்கான ஜனக்ரஹா மையத்தின் மேலாளராக உள்ளார்.  

original link:


Share:

விமான நிலைய மேற்க்கூரை விபத்துக்கள் விதிமுறைகளில் உள்ள குறைபாடுகளைக் காட்டுகின்றன

 செயல்பாட்டு பொறுப்புகள் குறித்த தெளிவின்மை கவலையளிக்கிறது.

டெல்லி, ராஜ்கோட், லக்னோ மற்றும் ஜபல்பூர் ஆகிய இடங்களில் சமீபத்தில் பெய்த கனமழைக்கு மத்தியில் விமான நிலைய மேற்க்கூரைகள் விழுந்தன. இந்த விபத்துகள் இரண்டு கோணங்களை விசாரணைக்கு உட்படுத்துகின்றன. முதலாவதாக, இது இந்த மேற்க்கூரைகளின் வடிவமைப்பை கேள்விக்குள்ளாக்குகிறது.  கடுமையான மழை, மற்றும் புயல் இருந்தாலும், தாங்கும் திறன் ஏன் இல்லை? டெல்லி அதன் முழு பருவமழையில் மூன்றில் ஒரு பகுதியை கடந்த வெள்ளிக்கிழமை பெற்றதாக நம்பப்படுகிறது. தீவிர வானிலை நிகழ்வுகள் இனி அரிதானவை அல்ல. இன்றைய கட்டிடங்கள் இந்த காரணியை கணக்கில் கொள்ள முடியாது என்பது ஆச்சரியமாக இருக்கிறது.


விவரங்கள் தெரியவில்லை, ஆனால் மேற்க்கூரையில் வேகமாக சேகரமாகும் மழை நீருக்கு போதுமான  வடிகால்கள் இல்லாமல் இருக்கலாம். மழை நீரை மேற்க்கூரையின் கீழ் பகுதிக்கு கொண்டு வந்திருக்கலாம். இந்த விபத்துக்கள் தொழில்நுட்ப அலட்சியத்தையும், பராமரிப்பில் அலட்சியத்தையும் காட்டுகின்றன. உள்கட்டமைப்பு வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு நாட்டிற்கு இது கவலையளிக்கிறது.


இரண்டாவதாக, பொறுப்புக்கூறலை நிறுவுவதற்கான தெளிவான விதிகள் அல்லது சட்டங்கள் இல்லை. தனியார் கூட்டமைப்பு அல்லது பிரதான ஆபரேட்டர் பொறுப்பேற்க வேண்டும். விபத்துக்குள்ளான விமான நிலையங்கள் ஒரு கூட்டமைப்பால் நடத்தப்படுகின்றன. இந்த கூட்டமைப்பு இந்திய விமான நிலைய ஆணையத்துடன் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் (Operation, Management and Development Agreement (OMDA)) கையெழுத்திட்டுள்ளது. இரு நிறுவனங்களும் 74:26 என்ற விகிதத்தில் விமான நிலையத்தின் பங்குதாரராக. உள்ளன. இருந்தாலும், இந்த நிகழ்வில் செயல்பாடு, மேலாண்மை மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தின் நோக்கம் தெரியவில்லை.  


விமான நிலையங்களின் பல்வேறு பகுதிகளை நிர்மாணிக்கும் பணிகளை இந்த கூட்டமைப்பு பல்வேறு நிறுவனங்களுக்கு ஒப்பந்தம் செய்கிறது. ஒப்பந்தச் சட்டத்தின்படி, முதன்மை ஒப்பந்தக்காரர் அல்லது கூட்டமைப்பு முதன்மை பொறுப்பாகும். இருப்பினும், கூட்டமைப்பு மற்றும் துணை ஒப்பந்தக்காரர்களுக்கு இடையிலான ஒப்பந்தங்களின் தன்மை தெரியவில்லை. துணை ஒப்பந்தக்காரர்கள் பராமரிப்புக்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டிருக்க வாய்ப்புள்ளது. அப்படியானால், சட்ட நிலைப்பாடு தெளிவாக இல்லை.  குறைபாடுகள் நிரூபிக்கப்பட்டால் முகவர் பொறுப்பேற்க முடியும். டெல்லி இன்டர்நேஷனல் ஏர்போர்ட் லிமிடெட் மற்றும் இந்திய விமான நிலையங்கள் ஆணையம் இடையேயான வழக்கில் ஜூலை 2022 இல் உச்சநீதிமன்றத் தீர்ப்பு, கட்டணங்கள் மற்றும் வருவாய் பகிர்வு தொடர்பான மேலாண்மை மற்றும் மேம்பாட்டு ஒப்பந்தத்தில் (Operation, Management and Development Agreement (OMDA)) இன் அம்சங்களைப் பற்றி விவாதிக்கிறது. 

பயணிகள் மேம்பாட்டுக் கட்டணங்கள் மற்றும் பயனர் மேம்பாட்டுக் கட்டணங்களைச் செலுத்தும் விமான நிலையப் பயனர்கள், விபத்துகளின் போது பற்றாக்குறையாக உணர்கிறார்களா? கூட்டமைப்புக்கும் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்திற்க்கும் இடையிலான வருவாய் பகிர்வு மாதிரி எவ்வாறு செயல்படுகிறது என்பதை நாம் ஆராய வேண்டும்.  

இந்தியாவின் உள்கட்டமைப்பு ஒழுங்குமுறை மற்றும் செயல்பாடுகள் பல தெளிவற்ற பகுதிகளைக் கொண்டுள்ளன.   இந்த பிரச்சினைகளை கொள்கை முன்னுரிமையாக மாற்றுவது முக்கியம்.  

original link:
Share: